உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதிகளின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது: கவாய் கவலை

நீதிபதிகளின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது: கவாய் கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நீதிமன்றங்களில் நீதிபதிகள் வாய்மொழியாக தெரிவிக்கும் கருத்துகள் தவறாக பரப்பப்படுகிறது என தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறியுள்ளார்.உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர் ஒருவர், தன் காலில் அணிந்து இருந்த காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை நோக்கி எறிய முயன்றார். அருகில் இருந்தவர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து வெளியே இழுத்துச் சென்றனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஜாவேரி கோயிலில் எழு அடி உயர சிலையை புனரமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி பி.ஆர்.கவாய், 'விஷ்ணு மீது உண்மையிலேயே பக்தி இருந்தால், சிலையை சீர்படுத்தக் கோரி, அவரிடமே பிரார்த்தனை செய்யுங்கள். எதற்காக, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறீர்கள். 'சிலையை சீர்படுத்தும் அதிகாரம் தொல்லியல் துறையிடம் தான் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்திடம் இல்லை' என கருத்து தெரிவித்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அனைத்து மதத்தின் மீதும் தனக்கு மரியாதை இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உடனடியாக விளக்கமும் அளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நபர், தலைமை நீதிபதியை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தலைமை நீதிபதி கவாய் பேசும் போது, வழக்கு விசாரணையின் போது வாய்மொழியாக கூறும் கருத்துகள் தவறாக பரப்பப்படுகிறது என கவலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: வழக்கு ஒன்றின் விசாரணையின் போது எனது அன்புக்குரிய சகோதர் நீதிபதி வினோத் சந்திரன் சில கருத்துகளை கூற முயன்றார். அதனை கூறுவதற்கு முன்னர் நான் தடுத்து நிறுத்தினேன். இல்லையென்றால், சமூக ஊடகங்களில் என்ன மாதிரியாக அந்த கருத்துகள் பகிரப்படும் என நமக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தாமரை மலர்கிறது
அக் 07, 2025 19:25

தவறான கருத்தை சொன்னால், தவறாகத்தான் புரிந்துகொள்ளப்படும்.


நிக்கோல்தாம்சன்
அக் 07, 2025 19:24

நீங்க தகுதியை மட்டுமே வைத்து தலைமை நீதிபதியாக ஆகியிருந்தா இன்று இப்படி பேசியிருக்க மாட்டீங்க .


Sun
அக் 07, 2025 19:20

இதே போல தேவாலாயம், மசூதி, பெளத்த விகாரம் இவைகள் மீது அதனை சீரமைக்க கோரி பெட்டிசன் ஏதேனும் வந்திருந்தால் அந்த வழக்கின் மீதும் மாண்புமிகு நீதியரசர் அவர்கள் நம்பிக்கையுள்ள அந்த கடவுள்களிடம் வேண்டிக் கொள்ளுங்கள் இங்கு ஏன் வந்தீர்கள் எனக் கேட்டிருப்பாரா? நீதியரசர்களை கடவுளுக்கு நிகராக இன்றும் மை லார்ட் என ஏன் அழைக்கிறோம்? கடவுள் போல யார் மீதும் விருப்பு, வெறுப்பு இல்லாதவர்கள் நீதியரசர்கள் என்பதால் தான். பொறுப்பான வார்த்தைகளை பேசும் கடமை பொது மக்களுக்கு மட்டுமல்ல நீதியரசர்களுக்கும் எப்போதும் உண்டு.


Kasimani Baskaran
அக் 07, 2025 19:19

பொறுப்பான பதவியில் இருப்பவர் தனது மரியாதையை கருத்தில் கொண்டு பேசியிருக்கவேண்டும். நீதித்துறையின் மாண்பை கருத்தில் கொண்டு நடுநிலையுடன் பேசுவது மரியாதையை பெற்றுத்தரும்.


ஆரூர் ரங்
அக் 07, 2025 19:15

பெயரில் ராமர் கிரு‌ஷ்ணா இருந்தலும் ஹிந்து மத எதிர்ப்பாளர் எனும் அபிப்பிராயம் ஏற்படுமளவுக்கு நடந்து கொண்டது பலருக்கு எரிச்சலை தந்து விட்டது. உங்கள் தந்தை காங்கிரசால் பயன் பெற்றவர் என்பதும் நினைவுக்கு வந்துவிடுகிறது. என்ன செய்வது?


Balasubramanian
அக் 07, 2025 19:10

இந்த கருத்தின் மீது நாம் கருத்து சொன்னால் அதுவும் தவறாக புரிந்து கொள்ளப் பட வாய்ப்புண்டு நீதி மன்றங்கள் பேச்சுரிமைக்கும் கட்டுப்பாடு உண்டு என்று சொல்லி இருக்கின்றன. அரும்பய னையும் அறிவினார் சொல்லார் பெரும்பய னில்லாத சொல் திருக் குறள் -198 நினைவுக்கு வருகிறது


Anand
அக் 07, 2025 19:07

தலைக்கனம் அதிகமாகி நக்கல் செய்து அதனால் ஏற்பட்ட அசிங்கத்தை சரிக்கட்ட தவறாக புரிந்துக்கொள்ளப்படுகிறது என உளறவேண்டியது.


M S RAGHUNATHAN
அக் 07, 2025 19:03

The observation of CJI is untenable. Before uttering any words or observations in relation to a petition, it should be strictly in consonance with law in force. No external comment should be said. May be those observations not find in the final order. But words said remain said. In olden days, there were no such elaborate coverage and there was only Print media. The print media was responsible in publishing the gist of orders pronounced by the courts. But the situation is totally changed now. CJI can not cry hoarse now that his comments were misunderstood. Words once spoken can not be taken back.


A viswanathan
அக் 07, 2025 19:26

புத்த மதத்தை தழுவிய ஒருவர் அந்த சிலையிடமே கேள் என்று ஓர் உயர் பதவியில் உள்ள நீதிபதி கூறியது நெருடலாக தான் உள்ளது.இனி என்ன காரணம் சொன்னாலும் கூறியதை எடுக்க முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை