உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விண்வெளியிலும் சுத்தம்: வெற்றிகரமாக சாதித்தது இந்தியா

விண்வெளியிலும் சுத்தம்: வெற்றிகரமாக சாதித்தது இந்தியா

- நமது நிருபர் -சர்வதேச விண்வெளி கொள்கையை பின்பற்றி, விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட்டின் மேல்பாகத்தை, ஒன்பது மாதங்களில் பூமிக்கு திருப்பி விண்வெளியை சுத்தமாக பராமரித்து, இந்தியா சாதனை படைத்துள்ளது.கடந்தாண்டு நவ., 2ல், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, 'எல்.வி.எம்., 3 -- எம்5' ராக்கெட்டின் வாயிலாக, 'சி.எம்.எஸ் - 3' தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.செயற்கைக்கோள் பிரிக்கப்பட்ட பின், விபத்து ஏற்படாத வகையில், அந்த ராக்கெட்டின் மேல்பகுதி, சுற்றுப்பாதையில் சுற்றிக் கொண்டிருந்தது. அதன் சுழற்சி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள எம்.ஓ.டி.ஆர்., 'ரேடார்' வாயிலாக கண்காணிக்கப்பட்டது. அது, படிப்படியாக விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வந்தது.அப்போது, வளி மண்டல காற்றுடன் உரசியதால் ஏற்பட்ட வெப்பத்தால், பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாயின. மீதமிருந்த சில பாகங்கள் மட்டும், கடந்த ஜூலை 30ம் தேதி, அட்லான்டிக் பெருங்கடலில் விழுந்ததை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' உறுதி செய்துள்ளது.வழக்கமாக, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய பின், ராக்கெட்டின் பாகங்கள், 10 ஆண்டுகளுக்கு மேல் விண்வெளி கழிவுகளாக சுற்றிக் கொண்டே இருக்கும். இந்த கழிவுகள், ஏவப்படும் செயற்கைக்கோள்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தும். அதை தவிர்க்கும் வகையில், சரியான திட்டமிடலால், வெறும் ஒன்பது மாதங்களிலேயே, ராக்கெட்டின் மேல்பாகத்தை பூமிக்கு கொண்டு வந்து, இஸ்ரோ அழித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

விருமாண்டி
ஆக 15, 2026 04:56

அது என்ன விண்வெளியிலும்… கிண்டலா? சுத்தம் தான் போங்கோ. கான்வர் யாத்திரை கூட்டத்தால் ஹரித்துவாரில் கங்கை கரையில் விடப்பட்ட கழிவுகள் 7000 டன். இரண்டு நாட்கள் முன்பு தான் ஒரு வீடியோ செய்தி போட்டிருந்தீர், ஆடி அமாவாசை தர்ப்பணத்தால் வைகை ஆறு குப்பைக்கூழமாக மாறியது என்று.


Karuthiruman
ஆக 15, 2026 03:51

தூய்மை என்பது அரசாங்கத்திடம் இருந்து தொடங்க வேண்டிய விஷயம் அல்ல ஒவ்வொரு மனிதரிடமும் இருந்து தொடங்க வேண்டிய பொறுப்பு. அரசாங்கம் தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும். குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும், குப்பைகளை அகற்ற வேண்டும், சாலைகளையும் பொது இடங்களையும் பராமரிக்க வேண்டும். ஆனால் மக்கள் பொறுப்பில்லாமல் குப்பையை எங்கு வேண்டுமானாலும் வீசிக் கொண்டே இருந்தால், உலகின் எந்த அரசாங்கத்தாலும் ஒரு நாட்டை முழுமையாகத் தூய்மையாக வைத்திருக்க முடியாது. நம்மில் பலருக்கு பொது இடம் என்றால் “யாரோ ஒருவர் சுத்தம் செய்ய வேண்டிய இடம்” என்ற மனநிலை இருக்கிறது. வீட்டுக்குள் குப்பையை தரையில் போடாத நாம், அதே குப்பையை தெருவில் போடுவதற்கு ஏன் தயங்குவதில்லை? நமக்குப் பிறகு அந்த இடத்தை பயன்படுத்தப் போகும் மனிதரைப் பற்றி ஏன் சிந்திப்பதில்லை? இதைவிட கவலைக்குரியது என்னவென்றால், நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ, அதையே நம் குழந்தைகளும் கற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு நல்ல பள்ளி, நல்ல கல்வி, நல்ல வேலை, நல்ல வாழ்க்கை வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் அதற்கு முன்பாக அவர்களுக்கு பொறுப்பு, ஒழுக்கம், பிறரை மதிப்பது, பொது இடத்தை மதிப்பது ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சுதந்திரம் பெற்றதிலிருந்து எத்தனையோ அரசாங்கங்கள் வந்துவிட்டன. ஆட்சிகள் மாறின. கட்சிகள் மாறின. திட்டங்கள் மாறின. ஆனால் ஒரு கேள்வி மட்டும் இன்னும் இருக்கிறது: “அரசாங்கம் மட்டும் எப்படி நம்மை மாற்ற முடியும்?” மக்கள் மாறாமல் எந்த அரசாங்கத்தாலும் இந்தப் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க முடியாது. நாம் முதலில் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். குப்பையை கீழே போடாமல் குப்பைத்தொட்டியில் போடுவோம். பொது இடத்தை நம் வீட்டைப் போல மதிப்போம். மற்றவர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வோம். நம் குழந்தைகளுக்கு இதை சொல்லிக் கொடுப்பதோடு மட்டும் நிற்காமல், நாம் செயலால் காட்டுவோம். நாடு மாற வேண்டும் என்று காத்திருக்க வேண்டாம். நாம்தான் மாற வேண்டும். நாம் மாறினால் நம் குடும்பம் மாறும். குடும்பங்கள் மாறினால் சமூகம் மாறும். சமூகம் மாறினால் நாடே மாறும். அரசாங்கத்தை குறை சொல்வது எளிது. ஆனால் மாற்றத்தின் முதல் படியை நாமே எடுப்பதுதான் உண்மையான குடிமகனின் அடையாளம். தூய்மையான இந்தியாவை அரசாங்கத்திடம் கேட்பதற்கு முன், தூய்மையான இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை நாமே ஏற்றுக்கொள்வோம். மாற்றம் அரசு அலுவலகத்தில் தொடங்காது. மாற்றம் நம் வீட்டின் வாசலில் இருந்து தொடங்க வேண்டும்.


Karuthiruman
ஆக 15, 2026 03:44

அரசாங்கத்தை குறை கூறாமல் மக்கள் குப்பையை உரிய இடத்தில் போட வேண்டும் , குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டும் . கொஞ்சம் சுத்தம் செய்பவரின் உழைப்புக்கு மரியாதை தந்து சுய ஒழுக்கம் எல்லார் இடத்திலும் வேண்டும். தமிழக அரசு வெளி நாடுககளில் இருப்பது போன்ற கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் , எவன் ஒருவன் கண்ட இடத்தில் குப்பை போடுறனோ அவனை அசிங்கப்படுத்த வேண்டும் , அப்படி பட்ட ஆட்கள் இந்த பூமிக்கு பாரம் மற்றும் வாழ்கையில் உயர வாய்ப்பே இல்லை . குப்பை போடுறவனும் அவன் குழந்தை குட்டிகளும் வாழ்கையில் ரொம்ப கஷ்டப்பாடுவாங்க. இது நல்லவன் சாபம்.


அப்பாவி
ஆக 14, 2026 10:05

ஹி.. ஹி தெருவெல்லாம் குப்பை விண்வெளியில் சுத்தம் பன்றாங்கோ. அதை எங்கே கொட்டுவாங்கோ?


Keshavan.J
ஆக 14, 2026 14:15

தமிழில் ஒரு பழமொழி உண்டு. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை


Tetra
ஆக 14, 2026 06:50

இதெல்லாம் கரப்பான்பூச்சிகளுக்கு தெரியுமா? அவர்களின் தலைவன் பப்புவுக்கும் தெரியுமா?


HoneyBee
ஆக 14, 2026 08:47

அடமை கூட்டம். நாட்டை நாசம் செய்யும் தரித்திரம் கூட்டம்


NALAM VIRUMBI
ஆக 14, 2026 06:33

சூப்பர் நாசா நம்மை நாடுவதன் நோக்கம் புரிந்து கொள்ள வேண்டும்


தியாகு
ஆக 14, 2026 06:26

விண்வெளியில் இருந்து பூமியில் ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் அதிகம் சொத்து சேர்த்தவரின் வீட்டை புகைப்படம் எடுத்தால் அதில் சென்னை கோபாலபுரத்தில் வாழ்ந்த ஒருவரின் வீட்டின் மாடி தெரியும்.


raja
ஆக 14, 2026 06:25

இது தாண்டா மோடி அரசு....இந்தியாவின் புகழ் உலக அரங்கில் வின்னை மட்டும் அளவுக்கு கொண்டு சென்றதால் தான் இந்த கேடுகெட்ட ஊழல் பெருச்சாளிகள் ஆன இழி பிறவி கூட்டம் அந்நிய நாட்டு கைக்கூலிகள் ஆன கான் கிராஸ் கோஷ்டி துடப்ப கட்டை கோஷ்டி திருட்டு திராவிட கோஷ்டி உண்டி குளிக்கி கோஷ்டிகள் கரப்பான் பூச்சி களை கொண்டு மோடி அரசை அசைத்து பார்க்கலாம் என்று கனவு காண்கிறார்கள்... இந்திய மக்கள் இந்த சூழ்ச்சி காரர்களை சதிகாரர்களை அடித்து விரட்டுவார்கள்...


S Nagarajan
ஆக 14, 2026 06:07

அருமை


புதிய வீடியோ