உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அறநிலையத்துறை நிதியில் கல்லூரி: இ.பி.எஸ்., சொன்னது இதுதான்!

அறநிலையத்துறை நிதியில் கல்லூரி: இ.பி.எஸ்., சொன்னது இதுதான்!

விழுப்புரம்: ''அறநிலையத்துறை நிதி மூலம் கல்லூரி அமைக்கும் போது, அதனை விரிவாக்க போதிய நிதி கிடைக்காது; இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். நான் பேசியதை மாற்றி பொய் பிரசாரம் செய்யப்படுகிறது,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் 2026 சட்டசபை தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கி உள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி , திண்டிவனம் பகுதிகளில் அவர் பேசியதாவது: கல்லூரிகள் அமைக்க அறநிலையத்துறை நிதியை கொடுக்க வேண்டாம் என சொல்லவில்லை. மாணவர்களுக்கு தேவையான நிதி அறநிலையத்துறையிடம் இருந்து கிடைக்காது. கல்லூரி வளரும் போது, கட்டடங்கள் கட்ட வேண்டிய நிலையும், பல பிரிவுகள் உருவாக்க வேண்டிய நிலையும் ஏற்படும். அரசு கல்லூரியாக இருந்தால், அனைத்தும் கிடைக்கும். அறநிலையத்துறையாக இருந்தால் நிதி கிடைக்காது. மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனை சுட்டிக்காட்டினோம். உன்னத நோக்கத்தோடு, உயர்ந்த நோக்கத்தோடு மாணவர்களின் எதிர்காலம் கருதி அரசு கல்லூரி துவங்க வேண்டும் என்று சொன்னேன். வேண்டாம் என சொல்லவில்லை. திட்டமிட்டு ஸ்டாலின் பொய் பிரசாரம் மேற்கொள்கிறார். ஏன் அரசிடம் பணம் இல்லையா? அரசு திவாலாகி விட்டதா?கடலில் பேனா வைக்க ரூ. 82 கோடி உள்ளது. உதயநிதி கார் பந்தயம் நடத்த ரூ.42 கோடி பணம் உள்ளது. மாணவர்கள் கல்வி கற்க கல்லூரி கட்ட வேண்டும் என்று சொன்னால் ஏன் தவறாக நினைக்கின்றீர்கள். வேண்டும் என்றே தவறான, அவதூறான செய்தி பரப்புகின்றீர்கள். இது கண்டனத்துக்குரியது. மாணவர்கள் எதிர்காலம் கருதியும், அவர்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்பதற்காகவும் அரசு கலைக்கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். தமிழகத்தில் 96 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு முதல்வர் இல்லை. பேராசிரியர்கள் இல்லை. மாணவர்களின் நிலை எப்படி இருக்கும். இந்த ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மாணவர்களின் எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.தி.மு.க., ஆட்சியில் விலை உயர்வினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. கமிஷன், கலெக்சன், கரப்சன் நடக்கிறது. மதுரை மாநகராட்சியில், வரி வசூலில் ரூ.200 கோடி மோசடி நடந்துள்ளது. எட்டு அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மண்டல தலைவர்கள் சொன்னதால் தான், மோசடியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்ய உத்தரவிடப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் இது குறித்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

தமிழன்
ஜூலை 11, 2025 15:34

அரசுக்கு வரி செலுத்தினால் கருணாநிதி சிலை கார் ரேஸ் போன்ற கேடுகெட்ட திட்டம் தான் திராவிட மாடல் தரும். கோவில் உண்டியலில் பணம் செலுத்தினால் கல்லூரி கட்ட திட்டம் என்று கல்விக்கு நிதி உதவி செய்யும். எனவே இந்துக்கள் வரி செலுத்துவதை விடுத்து கோவில் உண்டியலில் பணம் செலுத்தினால் கல்லூரி மாணவர்களுக்கு பயன் அளிக்கும்


Rajesh
ஜூலை 11, 2025 11:53

அரசாங்க பணத்தை பள்ளிவாசல் சீர் அமைக்க அதிகப்படுத்தி தருகிறார்கள்,கோவில் பணத்தை எடுத்து கல்லூரி கட்ட கொடுக்கிறார்கள்,கடவுள் நம்பிக்கை அற்ற முதலமைச்சர் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்? தொடர்ந்து இந்து மதம் அவமானம் படுதும் இயங்களிடம் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.முருக மாநாடு மதவாதம் பரப்புகிறார்கள்,தடை ஏற்படுத்தினார்கள்,அதே முஸ்லிம் மாநாடு என்றால் முழு அனுமதி தருகிறார்கள்...


ஆரூர் ரங்
ஜூலை 10, 2025 21:32

ஹிந்து ஆலயங்களின் நிதி மதசார்புள்ள நிதி. மதப்பிரச்சாரம் போன்ற செயல்பாடுகள் தவிர்த்த மதசார்பற்ற கல்விக்கு பயன்படுத்த சட்டத்திலும் இடமில்லை. ஆட்டையை போடும் எண்ணத்தில்தான் கல்லூரி துவக்குவதா?.


Thiru, Coimbatore
ஜூலை 10, 2025 21:04

எப்படியோ விடியல் ஆட்சி முடியும் நாள்தான் தமிழக மக்களுக்கு உண்மையான விடியல்நாளாக இருக்கும் முடியட்டும் விடியட்டும்


r ravichandran
ஜூலை 10, 2025 21:03

இறைவனுக்கு சொந்தமான உண்டியல் பணத்தில் கல்லூரி கட்ட எந்த அரசாங்கத்திற்கும் உரிமை இல்லை. அது திமுக, அதிமுக யார் ஆட்சியில் இருந்தாலும் சரி. அந்த பணம் கோயில் மேம்பாட்டுக்கும், பக்தர்களின் வசதிக்கும் மட்டும் தான் செலவு செய்ய படவேண்டும். ஏற்கனவே 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் 1 லட்சம் ஏக்கர் நிலம் காணாமல் போய் விட்டது. கழகங்கள் இல்லாத இறை நம்பிக்கை உள்ள ஆட்சி வரும் போது தான் அதை மீட்க முடியும்.


K.n. Dhasarathan
ஜூலை 10, 2025 20:58

எடப்பாடியின் நிலைமை பரிதாபம், ஏன் இப்படி பேசினார்? அறநிலையத்தின் நிதியில் கல்லூரிகல் ஏதும் நடக்கவில்லையா? அல்லது எடப்பாடி அடிமையாகி விட்டாரா? அறநிலைத்துறையை கைப்பற்றுவதுதான் ஒரே நோக்கம், அரசிடம் விடக்கூடாது, இதை எப்படி எடப்பாடி ஆதரிக்கலாம்? இன்று தி மு க அரசு பல பல கோயில்களில் குடமுழுக்கு நடத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கும் போது இப்படி படு மோசமாக பேசி கட்சியை அடகு வைத்துவிட்டார்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 10, 2025 20:57

பேசியது என்ன என்று முழுமையாக தெரியவில்லை. ஆனாலும் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது.


தாமரை மலர்கிறது
ஜூலை 10, 2025 20:54

அறநிலைத்துறை பணம் அறநிலைத்துறைக்கு மட்டும் தான். அறநிலை பணத்தை எடுத்து களவாடுவது தான் திமுகவின் வேலை. இதற்காகத்தான் எடப்பாடி முதல்வர் ஆனவுடன் முதல் கையெழுத்தே, அறநிலைத்துறையை மூடுவது தான். ரெண்டாவது கையெழுத்து தொல்லியியல் துறையை மூடுவது.


மனிதன்
ஜூலை 10, 2025 21:40

மூன்றாவது கையெழுத்து? நம் வரலாற்றை எரிப்பது, மற்றும் அதற்கு பதிலாக சாவர்கரும் கோட்ஸேவும்தான் நமக்கு சுதந்திரம் வாங்கித்தந்தார்கள் என திணிப்பது...


Anantharaman Srinivasan
ஜூலை 10, 2025 23:44

எடப்பாடி முதல்வர் ஆனவுடன் முதல் கையெழுத்து. அறநிலைத்துறையை மூடுவது . ரெண்டாவது கையெழுத்து தொல்லியியல் துறையை மூடுவது. எந்த ஆட்சி வத்தாலும் "டாஸ்மார்க் எப்பொழுதும் போல் தொடரும்."


Svs Yaadum oore
ஜூலை 10, 2025 20:51

விடியல் கட்சியில் உள்ளவர் எல்லாம் ராமசாமி கடவுள் மறுப்பு கிடையாது ..... மிக பெரும்பாலும் ஹிந்து கடவுள் பற்று உள்ளவர்கள் ......எடப்பாடி இதே போல் ஹிந்து ஆதரவு நிலைப்பாடு எடுத்தால் அவருக்கு ஆதரவு பெருகும் ..... சிறுபான்மை மொத்தமும் விடியல் மந்திரி சொன்னது போல தீவிர ஜெபம் செய்து விடியல் ஆட்சிக்கு வர உதவலாம் .....


Vijay D Ratnam
ஜூலை 10, 2025 20:48

எடப்பாடி பழனிசாமி அவர்களே, நீங்கள் மக்கள் மத்தியில் பேசும் போது ஒவ்வொரு ஊரிலும் மறக்காமல் சில விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லுங்கள். அதாவது உலகளவில் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் உச்சம் என்று சொல்லப்படும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூவா அளவுக்கு கொள்ளையடித்து கையும் களவுமாக சிக்கி கருணாநிதியின் மகள் கனிமொழி ஆண்டிமுத்து ராசா டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டதை மக்களுக்கு ஞாபகப்படுத்துங்கள். அடுத்து இலங்கையில் நம் தொப்புள் கொடி உறவுகளான அப்பாவி தமிழ்மக்கள் ஒன்றரை லட்சம் பேரை குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்றும் பாராமல் துடிக்க துடிக்க படுகொலை செய்து குவிக்க உறுதுணையாக இருந்த திமுக காங்கிரஸ் கூட்டணி என்பதையும் மறக்காமல் மேடை தவறாமல் பேசுங்கள். காலை டிபன் முடித்து மதியம் லன்ச் வரைக்கும் ரெண்டு மணிநேரம் கருணாநிதி ஏர்கூலர்கள், சகிதம் ஒரு உலகப்புகழ் உண்ணாவிரதம் இருந்தாரே அதை எடுத்து சொல்லுங்கள்.


மனிதன்
ஜூலை 10, 2025 21:51

அப்படியே மோடி அரசின் 5G ஊழலைஇழப்புப்பற்றியும் சொல்லுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை