உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் பா.ஜ., கால் பதித்ததற்கு காங்., தான் காரணம்: பினராயி விஜயன் கண்டுபிடிப்பு

கேரளாவில் பா.ஜ., கால் பதித்ததற்கு காங்., தான் காரணம்: பினராயி விஜயன் கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: 'கேரள மாநிலம் திருச்சூரில் பா.ஜ., வெற்றிக்கு காங்., கட்சியின் ஓட்டு சரிவு தான் காரணம்' என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.கேரள மாநிலம் திருச்சூர் லோக்சபா தொகுதியில், போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இதனால் கேரளாவில் முதன்முறையாக பா.ஜ., கால் பதித்தது. இது தொடர்பாக, அம்மாநில சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது, முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: கேரளாவில் 18 லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து கவலைப்படவில்லை. திருச்சூரில் பா.ஜ., வெற்றிக்கு காங்., கட்சியின் ஓட்டு சரிவு தான் காரணம். தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்து, சரி செய்யப்படும்.

விவேகம்

வெறுப்பை பரப்பி, இந்த நாட்டில் தொடர்ந்து வாழ முடியுமா என்று ஒரு பிரிவினர் கவலைப்படும் நிலையை பா.ஜ., உருவாக்கியது. பிரதமர் மோடியை எப்படியாவது ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். வாக்காளர்கள் காட்டும் விவேகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கேரளாவில் பா.ஜ., எப்படி ஒரு இடத்தை வென்றது என்பது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும். தோல்விக்கு பொறுப்பேற்று நான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கூறுகிறது. ராஜினாமா கோருவதன் பின்னணி என்ன?. இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Bhaskaran
ஜூன் 16, 2024 08:29

திமுகவின் தயவால் காம்ரேட்கள் எம்பி ஆனாங்க இந்தியா முழுவதிலும் மே.வங்கம் திரிபுர விலும்மக்கள் இவனுகளை விரட்டி அடித்தனர்


venkatakrishna
ஜூன் 14, 2024 15:04

இனி வரும் நாட்களில் பிஜேபி தான். கேரள மக்கள் முடிவு.


vadivelu
ஜூன் 12, 2024 22:51

எண்ணெங்கடா , ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கட்சி, இஸ்லாமுக்கு என்று ஒரு கட்சி , கிருத்துவர்களுக்கு என்று ஒரு கட்சி எல்லாம் இருக்கலாம், எல்லோருக்கும் ஒரு கட்சி என்றுஇருக்க்கூடாதா.


என்றும் இந்தியன்
ஜூன் 12, 2024 16:21

கேரளாவை மேலே கொண்டு வர என்ன செய்வது என்று முதலில் நல்ல முடிவெடுங்கள்


sri
ஜூன் 12, 2024 15:09

ஒன்று புரியவில்லை பா ஜ கட்சியும் தேர்தலில் போட்டியிட்டு தானே வெற்றி பெறுகிறது.ஏன் பாஜக கட்சிகாரர்களும் இந்தியர்கள் தானே ஏன் அவர்களை கண்டு இந்த பயம்.


venkatakrishna
ஜூன் 14, 2024 15:08

ED, CBI,IT Raid. அளவுக்கு மிக அதிகமாக நாட்டை சுரண்டியதால், எங்க உண்மை வெளிச்சத்துக்கு வந்தது விடுமோ என்கிற பயம்.


சுலைமான்
ஜூன் 12, 2024 14:42

பாஜக கால் பதிச்சதால நீங்க என்ன செத்தா போயிட்டீங்க பினராயி அவர்களே! மக்களின் நலனே முக்கியம்... நாட்டின் வளர்ச்சியே பிரதானம்.....


duruvasar
ஜூன் 12, 2024 13:58

முட்டிக் கோ, மோதிக்கோ, இல்லாவிட்டால் மாடியிலிருந்து குதித்து விடு. இதுதான் சிறந்த முடிவாக இருக்கும்.


ram
ஜூன் 12, 2024 13:54

கேரளாவில் ஹிந்துக்கள் முழித்து கொண்டு விட்டார்கள் அதுதான் உண்மை. வரும்காலங்களில் இதுபோல தமிழ் நாட்டிலும் நடக்கும். எவ்வளவு நாட்களுக்கு ஹிந்துக்களை அவமானம் செய்விர்கள் சிறுபான்மை ஓட்டுக்காக.


Sivaraman
ஜூன் 12, 2024 13:42

பாஜகவின் ஓட்டுவங்கி உயர்ந்துள்ளது. கேரளா மூன்று விதமாகச் செல்லும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணி/ பாஜக கம்யூனிஸ்ட்/ காங்கிரஸ் பாஜக/ மராட்டியத்தில் சிவசேனா கூட்டணி போல் இங்கு காங்கிரஸ் பாஜக ஏற்படலாம். காங்கிரஸ் தேய்ந்து கொள்கை ஏதும் இல்லாமல் இருப்பதால் மாநிலத்துக்கு மாநிலம் எதோ ஒரு கட்சியின் ஊன்றுகோல் மூலம் வென்று வருகிறது.


குமரி குருவி
ஜூன் 12, 2024 12:59

கேரளாவில் பா.ஜ.க.வளர காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்பது சரிதான் பப்பு ராகுல்காந்தி போதுமே பா.ஜ.க.வாழ வளர..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை