உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி குண்டுவெடிப்பு: சதிச்செயல் செய்ய டாக்டர்களை கூர் தீட்டிய சதிகாரன் கைது

டில்லி குண்டுவெடிப்பு: சதிச்செயல் செய்ய டாக்டர்களை கூர் தீட்டிய சதிகாரன் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சதிச்செயல் நிகழ்த்த டாக்டர்களுக்கு பின்னணியில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் ஊழியரான இமாம் (மதகுரு) இர்பான் அகமது கைது செய்யப்பட்டுள்ளான்.டில்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கரவாத தாக்குதல் நெட்வொர்க்கில் ஈடுபட்டவர்கள் அனைவரும் டாக்டர்களே என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இந்த குண்டு வெடிப்பு, சம்பவத்தில், புல்வாமாவைச் சேர்ந்த முஸம்மில் கனி, உ.பி.,யின் லக்னோவைச் சேர்ந்த ஷஹீன் சயீத், ஜம்மு - காஷ்மீரின் குல்காமை சேர்ந்த அதீல், புல்வாமாவைச் சேர்ந்த உமர் நபி, ஹைதராபாதைச் சேர்ந்த அகமது மொஹியுதீன், ஸ்ரீநகர் மஹாராஜா ஹரிசிங் மருத்துவமனை டாக்டர் தஜமுல் ஆகிய 6 டாக்டர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3u0fb6my&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சதிச்செயல் நிகழ்த்த டாக்டர்களுக்கு பின்னணியில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் ஊழியரான இமாம் (மதகுரு) இர்பான் அகமதுவை கைது செய்து உளவுத்துறை அதிகாரிகள் கிடுக்கிடிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சதிகாரன், மருத்துவர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஊக்கம் அளித்து உதவி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.டில்லி சம்பவத்தின் ஒரு பகுதியாக அகமது வீட்டில், காஷ்மீர் போலீசார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனை முடிவில் தான் சதிகாரன் இமாம் இர்பான் அகமது சிக்கியுள்ளான்.இவன் ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றியது கண்டறியப்பட்டுள்ளது. அகமது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளில், பயங்கரவாத சதிச்செயலில் ஈடுபட திட்டம் தீட்டியது உறுதி செய்யப்பட்டுள்ளது.அக்டோபர் 19ம் தேதி நவ்காமின் பன்போராவில் உள்ள சுவர்களில், பாதுகாப்பு படையினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெயரைக் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்த பிறகு இமாம் இர்பான் அகமது உளவுத்துறை அதிகாரிகள் கண்காணிப்பின் கீழ் வந்தான். செங்கோட்டை குண்டுவெடிப்பை நடத்தியதாக கைது செய்யப்பட்ட டாக்டர் முகமது உமரின் நெருங்கிய உதவியாளரான டாக்டர் முஸம்மில் ஷகீலுடன் இமாம் இர்பான் அகமதுவுக்கு தொடர்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

Anu Sekhar
நவ 13, 2025 00:17

இப்போ பாக்கிஸ்தான் நாட்டை உலக வரிப்படத்திலிருந்து அகற்ற நேரம் வந்துவிட்டது.


Anu Sekhar
நவ 13, 2025 00:17

இப்போ பாக்கிஸ்தான் நாட்டை உலக வரப்படத்திலிருந்து அகற்ற நேரம் வந்துவிட்டது.


Palaniraj Seeniappan
நவ 12, 2025 23:02

law to be amended that imam and religious guru are to be appointed by competed agency under sc guidance those who are speaking to mass people in religious place


Keshavan.J
நவ 12, 2025 21:04

அது எப்படின்னா அவர்களுக்கு உன்னை போல சிலதுகள் உதவி செய்யுது.


பேசும் தமிழன்
நவ 12, 2025 18:54

அவன் சொன்னான் என்றால்... இவர்களுக்கு அறிவு எங்கே போனது..... இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்து விட்டு.... அதே மக்களை கொன்று குவிக்க துணிந்து விட்டார்கள் பாவிகள்.... இவர்களுக்கு கம்பியை பழுக்க காய்ச்சி உடம்பு முழுக்க சூடு போட வேண்டும்.


Rathna
நவ 12, 2025 18:41

தீவிரவாத நாடுகளில் இருந்து வரும் மர்ம மதகுருமார்களுக்கு விசா கொடுப்பது யார்? அவனுக ஒவ்வரு வழிபட்டு தளத்திலும், அவர்கள் பள்ளி கூடத்திலும் மற்ற மதத்தினரை வெறுக்க, அழிக்க கற்று தருகிறார்கள். மிக மோசமான வெறுப்பு பேச்சு அங்கே அரங்கேறுகிறது. இதை தடுக்க வேண்டிய அரசு என்ன செய்கிறது?


Nachiar
நவ 12, 2025 17:42

உலக தலைவர்களில் யார் யார் இந்தியாவுக்கு ஆதரவாகவும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் யார் யார் வெறுமனே பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் ஆதரவாக செய்தி அனுப்பினார்கள் என்று பார்த்தாலே பல விஷயங்கள் விளங்கும். ஜெய் பாரத்.


V RAMASWAMY
நவ 12, 2025 17:35

குற்றவியல் சட்டங்களைத் திருத்தி, விசாரணை, ஏதுமின்றி தடயம் கிடைத்தவுடன் குற்றப்பத்திரிக்கை வாசித்து பொதுவெளியில் சுட்டுக்கொல்லவேண்டும்.


Rathna
நவ 12, 2025 16:46

மூஞ்சிய பார்த்தாலே 3 நாள் சோறு சாப்பிட முடியாது? இவெனுக எல்லாம் டாக்டரா? இதிலே வேற வியாக்கியானம் வேற


Kumar Kumzi
நவ 12, 2025 16:30

உண்ட வீட்டுக்கே ரெண்டகம் நினைப்பான் கேடுகெட்ட காட்டுமிராண்டிகள்


சமீபத்திய செய்தி