உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு நீதிமன்றம் தடை

கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு நீதிமன்றம் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமலுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ' தக் லைப் ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், ' தமிழ் மொழியில் இருந்து பிறந்தது தான் கன்னடம்', எனப் பேசினார். அது கன்னட அமைப்புகளின் கோபத்தைத் தூண்டியது. கமல்ஹாசன் பேசியதற்கு மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் 'தக் லைப்' படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்றார்கள். கன்னட சினிமா வர்த்தக சபையும் படத்தை வெளியிட தடை விதிக்கிறோம் என்றார்கள். இது தொடர்பாக கமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x77qbdci&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் கன்னட சாகித்ய பரிஷத் என்ற அமைப்பு, '' கன்னடம் மொழி மற்றும் கலாசாரம் தொடர்பாக அவதூறாக கருத்து தெரிவிக்க கமலுக்கு தடை விதிக்க வேண்டும், '' எனக்கூறி கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த நீதிபதி, ' கன்னடம் மொழி, கலாசாரம், நிலம் மற்றும் இலக்கியம் குறித்து கருத்து தெரிவிக்க தடை விதித்ததுடன், மனு குறித்து ஆக.,30க்குள் பதிலளிக்க வேண்டும்,' என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Kulandai kannan
ஜூலை 06, 2025 11:47

நாடாளுமன்ற தொகுதிகள் 453 என்பவரின் பேச்சுக்கெல்லாம் இவ்வளவு பில்டப் வேஸ்ட்.


Vijay D Ratnam
ஜூலை 05, 2025 23:16

கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு எதிராக ஒரேயடியா பொங்குறீங்க. அங்கிருந்து பொழைக்க தமிழ்நாட்டுக்கு வந்த ஒருவர் என்னல்லாம் சொல்லி இருக்கார் பாருங்க யுவர் ஆனர். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார், தமிழை நீச மொழி என்றார். திருக்குறள் தங்கத்தட்டில் வைத்த மனித கழிவு என்றார். அவரை தமிழர்கள் நாங்கள் தந்தை என்று சொல்லி ஊரு பூரா சிலை வைத்து தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம் என்று தெரியலையா நீதிபதி அவர்களே


Rathna
ஜூலை 05, 2025 20:34

விந்திய மலையை தாண்டிய பகுதியை திராவிடம் என்று முதலில் சொன்னவர் ஆதி சங்கரர். எவரெல்லாம் ஆதி சங்கரரை எதிர்கிறார்களோ, அவர்கள் எல்லாம் தினமும் மறக்காமல் சொல்லும் வார்த்தை திராவிடம்


SVR
ஜூலை 05, 2025 20:09

இந்த லோட்டஸ் எல்லாம் கன்னட மொழியை பற்றி பேசி என்ன ஆக போகிறது? ஒன்றுமில்லை. எல்லாம் பர்பராட்டு. இந்த பிறப்பால் வைஷ்ணவருக்கு தென் இந்திய மொழிகளெல்லாம் கர்நாடகாவில் உள்ள இன்றைய பாதாமி அன்றைய வாதாபி என்ற இடத்தில் இருந்து பிறந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குண்டான வரலாற்று ஆராய்ச்சி ஆதாரங்கள் இந்திய தொல் பொருள் ஆராய்ச்சி சர்வே கல்வெட்டுத்துறை ஆபிசில் கிடைக்கும். இது கர்நாடகத்தில் உள்ள மைசூரில் உள்ளது. அங்கு சென்று யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். அதை விட்டுவிட்டு தமிழிலிருந்து பிறந்தது கன்னடம் என்று உளறுவதெல்லாம் வடிகட்டின முட்டாள்தனம் மற்றும் பொய் பிரசாரம். பெங்களூர் நீதிமன்றம் சரியாகத்தான் தடை விதித்திருக்கிறது. இதில் குற்றம் காண ஏதும் இல்லை. வாயில் வந்தது வாசுதேவா, வேற எங்கிருந்தோ வந்தது வேற என்னவோ தேவா என்றெல்லாம் பேசக்கூடாது. கீழடியை பற்றி மத்திய அரசு விஞ்ஞான ரீதியாக கேள்வி கேட்டிருக்கிறது அதன் காலத்தை பற்றி. பதில் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். திராவிட டிராமா ஆடுகிறார்கள் அரக்கர்கள்.


Kjp
ஜூலை 05, 2025 19:36

படம் ஓடுவதற்காக கமல் செய்த ட்ரிக்கு. ஆனால் படம் டப்பாவாகி போய்விட்டது. இனி என்ன ஆகப்போகிறது கமலே அடங்கி உட்கார்ந்து விட்டார்.


Rajah
ஜூலை 05, 2025 18:26

இதுதான் திராவிடம் . தமிழர்கள் அல்லாதவர்கள் தமிழர்களை ஆள உருவாக்கப்பட்டதுதான் திராவிடம். இந்த திராவிட மாடல் என்பது தமிழகத்திற்கு சரிவராது


Kjp
ஜூலை 05, 2025 19:36

மிகச் சரியான பதிவு


மோகன்
ஜூலை 05, 2025 17:59

எப்போதும் கமலை நான் துரோகி என்றுதான் வர்ணிப்பேன். ஆனால் இந்த கன்னட மொழி விஷயத்தில் கமல் எதுவும் தவறாக பேசியதாக நான் பார்க்கவில்லை.


SANKAR
ஜூலை 05, 2025 19:25

yes...but he should have stated Sagothara Mozhi. All four Dravidian language share a common platform.Fonts pronounciation dialects differed over hundreds of years.Our own Thamizh Kalvettu in Rajarajan Era we can not read .Only experts can.Thamizh fonts thousand years ago was completely different.That was the common ancient font from which all four language fonts emerged


Oviya Vijay
ஜூலை 05, 2025 17:43

எனக்குத் தெரிந்து இவ்வாறு தடை விதிப்பதற்கு செசன்ஸ் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. ஏனெனில் ஏற்கனவே கமல் கன்னடம் குறித்துப் பேசியதற்காக அவர் மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றிவிட உச்சநீதிமன்றமே கூறிவிட்டது... இந்த சூழ்நிலையில் அவருக்கு எதிராக கர்நாடக செசன்ஸ் நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கு அர்த்தமற்றதாகி விடுகிறது... செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அறிந்திருக்கவில்லை போலும்...


Barakat Ali
ஜூலை 05, 2025 17:33

மொதல்ல பேச்சு சுதந்திரத்தை தூக்குங்க பாசு .......


naranam
ஜூலை 05, 2025 17:28

கன்னடம் என்ன சமஸ்கிருதமா, யார் வேண்டுமானாலும் அவமதிக்க?


புதிய வீடியோ