உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய விமானப்படைக்கு மேலும் 97 தேஜஸ் போர் விமானங்கள்: மத்திய அரசு ஒப்பந்தம்

இந்திய விமானப்படைக்கு மேலும் 97 தேஜஸ் போர் விமானங்கள்: மத்திய அரசு ஒப்பந்தம்

புதுடில்லி: இந்திய விமானப்படைக்கு 97 இலகு ரக தேஜஸ் போர் விமானங்கள் வாங்க ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதில் 68 விமானங்கள் ஒற்றை இருக்கை கொண்டவையாகவும், 29 போர் விமானங்கள் இரட்டை இருக்கை கொண்டவையாகவும் இருக்கும்.இந்திய விமானப்படையில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் மிக்-21 ரக போர் விமானங்களுக்குப் பதிலாக, தேஜஸ்எம்கே1ஏ ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. கடந்த 2021 பிப்ரவரியில், இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களை கொள்முதல் செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் உடன் ரூ. 48,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xb7wav8e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, ரூ.62,370 கோடியில் மேலும் 97 தேஜஸ் எம்கே -1ஏ விமானங்களை வாங்க விமானப்படை முடிவு செய்தது. இதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்து இருந்தது.இதனைத் தொடர்ந்து இந்த போர் விமானங்களை வாங்குவதற்காக, அதனை தயாரிக்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி UTTAM Active Electronically Scanned Array (AESA) control surface actuators, கவச், ரேடார் உள்ளிட்ட 67 சதவீத உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு விமானத்தில் பொருத்தப்பட உள்ளன. மேலும் 67 புதிய உபகரணங்களும் பொருத்தப்பட உள்ளன.விமானத்துக்கு தேவையான உபகரணங்கள் இந்தியாவைச் சேர்ந்த 105 நிறுவனங்களிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு நேரடியாகவு,ம் மறைமுகமாகவும் 11,750 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். போர் விமானங்கள் விமானப்படை இடம் ஒப்படைக்கும் பணி 2027 - 2028 துவங்கி அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் நிறைவு பெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rathna
செப் 25, 2025 18:36

PSU நிறுவனங்களை முடுக்கி விடுவது அவசியம். HAL நிறுவனத்தை கர்நாடக தாண்டி வேறு சில மாநிலங்களில் நிறுவுவது அவசியம். அதிகம் இளைஞர்களை வேலைக்கு கொண்டு வருவதும் மூலம், இப்போது உள்ள சுணக்கத்தை நீக்கலாம். இது தவிர L&T, Kalyani குரூப், மஹிந்திரா போன்றவர்களை உள்ளே நுழைப்பதும் மாற்றத்தை தரும்.


Ramesh Trichy
செப் 25, 2025 16:56

Existing orders already huge backlog due to the unavailability of the engines, we need to find an nate supplier to supply the engines..


Indian
செப் 25, 2025 16:52

டிரோன்கள் தானே நிறைய தேவைப்படுகின்றன ..HAL உருப்படியாக எந்த ஒப்பந்தத்தையும் சரியான நேரத்தில் நிறைவேற்றியது இல்லையே ..


SANKAR
செப் 25, 2025 18:29

you are right indian.but not much can be RECEIVED if only orders for low cost drones are given.


KOVAIKARAN
செப் 25, 2025 16:50

இதன் மூலம், வேலை வாய்ப்பு அதிகரிப்பதோடு, நம் நாட்டின் பொருளாதாரமும் மேம்படும். ஆயுத இறக்குமதிகள் குறையும். அந்நியசெலவாணி அதிகம் செலவாகாததால், அதுவும் அதிகரிக்கும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் கீழ் இயங்கும் HAL பாஜக ஆட்சிக்கும் வந்ததும் புத்துணர்ச்சி பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது. இது மோடி அவர்களின் ஆத்மநிர்பர் திட்டத்தினால் சாத்தியமாகிக் கொண்டு வருகிறது.


SANKAR
செப் 25, 2025 18:26

please study what happened to HAL in 2017


Palanisamy Sekar
செப் 25, 2025 16:38

அமெரிக்காவிடம் கெஞ்சி இருந்த நிலைமை மாறி மேக் இன் இந்தியா மூலம் சுயசார்பு விமானப்படையில் அமைவது மோடிஜியின் ஆட்சியின் பெருமை எனலாம். மிகப்பெரிய விமானப்படையாக இந்திய விமானப்படை திகழ்வது உறுதியே. அதிலும் நவீன தொழில்நுட்பம் கூடிய விமானங்கள் சேர்வது அண்டைநாடுகளுக்கு சற்றே பயத்தை கொடுக்கும். ஸ்டிங் ஆபெரேஷன் போன்ற நடவடிக்கைக்கு உள்நாட்டு தயாரிப்பு விமானங்கள் சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


SANKAR
செப் 25, 2025 18:25

please note engines for Tejas the most important part comes from US


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை