உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி உஷ்ஷ்ஷ்: எங்கே சென்றார் பிரியங்கா?

டில்லி உஷ்ஷ்ஷ்: எங்கே சென்றார் பிரியங்கா?

ஆமதாபாத்: சமீபத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நடந்தது. இதில் யார் பங்கேற்றனர் என்பதை விட, யார் பங்கேற்கவில்லை என்பதுதான் பரபரப்பு செய்தியானது. கட்சியின் தேசிய செயலர் பிரியங்கா இதில் பங்கேற்கவில்லை. லோக்சபாவில் நடந்த வக்ப் மசோதா தொடர்பான விவாதத்திலும் பிரியங்கா பங்கேற்கவில்லை.கேரளாவிலிருந்து எம்.பி., யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியங்கா, வக்ப் விவாதத்தில் ஏன் பேசவில்லை என, காங்கிரசின் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் கேள்வி எழுப்பியது.உறவினருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வெளிநாடு சென்றுவிட்டார் பிரியங்கா, என காங்., தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அதை மற்றவர்கள் ஏற்கவில்லை.இன்னொரு பக்கம் கர்நாடக அமைச்சர் பரமேஸ்வரரும், ஆமதாபாத் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பட்டியலினத்தைச் சேர்ந்த பரமேஸ்வர், பட்டியலினத்தைச் சேர்ந்த தன்னை கர்நாடகாவின் முதல்வராக்க வேண்டும் என காங்., மேலிடத்திடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். ஆனால் ராகுலோ, இதை ஏற்க மறுத்து விட்டார். இதனால், கர்நாடக காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M Ramachandran
ஏப் 13, 2025 20:13

அங்கு அங்கு அவர்களுபுக்கு பைட் சர்வண்ட்ஸ் இருக்கிறார்கள்


sankaranarayanan
ஏப் 13, 2025 10:15

வெளியுறவு அமைச்சரகத்திற்கு தெரியாமல் கஸ்டம்ஸ் - இம்மிகிரேஷனுக்கு தெரியாமல் யாருமே நாட்டை விட்டு நகர முடியாது அப்படி இருக்கும்போது மத்திய அரசுக்கு தெரியாமல் எப்படி அய்யா பிரியங்கா எங்கோ சென்றிருக்க முடியும் எல்லாமே ஸீக்ரட்


panneer selvam
ஏப் 13, 2025 12:47

It is simple and possible . For example , you travel to Dubai or Singapore then travel to your destination . Indian government generally does not track the individual unless security is sought . Being a political VIP , it is up to them to accept or decline that security cover . Normally Rahul Gandhi , Sonia ji do not accept security from Indian Government in their foreign trips . Now Priyanka is doing the same


MUTHU
ஏப் 13, 2025 08:28

இவர்கள் இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல், பிரியங்கா மொத்த குடும்பமே இந்திய சிந்தனை இல்லாதது. இந்தியர்கள்தான் இன்னமும் இவர்களை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர்.


SUBBU,MADURAI
ஏப் 13, 2025 08:19

பட்டாயாவுக்கு போகிற வாய்ப்பு பப்புவுக்கு மட்டும்தான் இருக்கா ஆணுக்கு பெண் சமம் என்று சொல்வது வெறும் வாய் வார்த்தைதானா?


RAMAKRISHNAN NATESAN
ஏப் 13, 2025 08:51

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயணும் என்பார்கள் ....


VENKATASUBRAMANIAN
ஏப் 13, 2025 08:18

கோஷ்டி பூசலில் பெயர் போனது காங்கிரஸ்.


முக்கிய வீடியோ