உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வைர வியாபாரி சோக்சி மனு நிராகரிப்பு: மும்பை ஆர்தர் சிறையில் தயாரானது அறை

வைர வியாபாரி சோக்சி மனு நிராகரிப்பு: மும்பை ஆர்தர் சிறையில் தயாரானது அறை

பிரஸ்ஸல்ஸ்: இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து, வைர வியாபாரி மெஹுல் சோக்சி தாக்கல் செய்த மனுவை, பெல்ஜியம் நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.'அவர் இந்தியாவில் செய்த குற்றங்கள், பெல்ஜியம் நாட்டிலும் குற்றமாகவே கருதப்படுகின்றன' என, நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, சோக்சியை அடைப்பதற்காக மும்பை ஆர்தர் சாலை சிறையில், அறை தயாராக உள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி மெஹுல் சோக்சி, அவரது உறவினர் நிரவ் மோடி இணைந்து மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பிச் சென்றனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிரவ் மோடி, 2019ல் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மற்றொரு குற்றவாளியான மெஹுல் சோக்சி, 2018ல் அமெரிக்கா தப்பி சென்றார். அங்கிருந்து, கரீபிய தீவு நாடான ஆன்டிகுவா சென்று குடியேறினார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மெஹுல் சோக்சி, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.இதைத் தொடர்ந்து, சோக்சியை பெல்ஜியம் போலீசார் கடந்த ஏப்ரலில் கைது செய்து, அந்நாட்டு சிறையில் அடைத்தனர். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.இதை எதிர்த்து சோக்சி தாக்கல் செய்த மனு, ஆன்ட்வெர்ப் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:சோக்சியின் இனம், மதம், தேசியம் அல்லது அரசியல் தொடர்புக்காக அவரைத் தண்டிக்கும் நோக்கத்துடன் நாடு கடத்தல் கோரிக்கை விடுக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் மனுவில் இல்லை. அதேசமயம், அவர் மீது இந்திய அதிகாரிகளால் பட்டியலிடப்பட்ட குற்றங்கள், குற்றவியல் சதி, ஏமாற்றுதல், மோசடி மற்றும் ஊழல் உள்ளிட்டவை பெல்ஜியம் நாட்டு சட்டத்தின் கீழ் சிறைத் தண்டனை விதிக்கக் கூடியவையே.நாடு கடத்தலுக்கு எதிராக மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள், விபரங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவை அல்ல. நாடு கடத்தப்பட்டால் மோசமாக நடத்தப்படுவார் என்பதற்கான ஆதாரங்களும் நிரூபிக்கப்படவில்லை. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, மெஹுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை உறுதி செய்துள்ளதால், அவர் எந்த நேரத்திலும் அழைத்து வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தயார் நிலையில் 'சிறை எண் 12'

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் சோக்சி, மஹாராஷ்டிராவின் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்படுவது உறுதியாகிஉள்ளது. 'இந்திய சிறைகள் மோசமாக இருக்கும், அங்கு உரிய பாதுகாப்பு இல்லை' என சோக்சி கூறியிருந்த நிலையில், அவருக்காக தயார் செய்யப்பட்ட சிறையின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. உயர் பாதுகாப்பு உள்ள ஆர்தர் சாலை சிறையில், சோக்சிக்கு, 12ம் எண் சிறை ஒதுக்கப்பட்டுள்ளது. அடிப்படை தேவைகள் மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய காற்றோட்டமான இரு அறைகள் உள்ளன. மூன்று மின் விசிறிகள், ஆறு டியூப் லைட்டுகள் மற்றும், 'டிவி'யும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Iyer
அக் 23, 2025 17:06

அடுத்து நீரவ் மோதியையும் கழுதைப்பிடித்து பாரதநாட்டுக்கு கொண்டுவரப்போவது நிச்சயம். இரண்டுபேர் மீதும் வழக்கு தொடரும். இரண்டுபேரும் APPROVER ஆகி தண்டனையில் DISCOUNT கேட்பார்கள். APPROVER ஆவதற்கு 162 ன் கீழ் MAGISTRATE முன்பு ஒப்புதல் வாக்குமூலம் தரவேண்டும். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் - பல பெரிய தலைகள் உருளும்.


Senthoora
அக் 23, 2025 17:55

சிங்கபூர் ஐயாரே தப்பிவிட்டதே உங்க பாஜக தான்.


NARAYANAN
அக் 23, 2025 17:05

இந்திய அரசின் இடைவிடாத முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என சொல்லலாம்.தப்பு செய்தவன் தப்ப இயலாது என்பதை தற்போதைய அரசு நிரூபித்துள்ளது.மற்றொரு நபருக்கும்- மல்லையாவிற்கு - அறை தயார் செய்யும் நேரத்திற்காக காத்திருக்கிறோம்.


Indhuindian
அக் 23, 2025 16:07

Are the facilities directly proportion to the amount of fraud committed? What is the need to give facilities different from other ordinary financial fraud criminals?


SUBRAMANIAN P
அக் 23, 2025 14:03

மேலே போட்டிருக்கிற படம் ஜெயில் அறையா? என் வீடு கூட இப்படி வசதியோடு இல்லையே ஐயா? பல ஆயிரம் கோடி மோசடி செய்த குற்றவாளிக்கு இப்படி ஒரு ஜெயில் அறையா? விளங்கும் நாடு.. மூன்றாவது பொருளாதார நாடு..


pakalavan
அக் 23, 2025 13:23

அவனை நிரபராதி னு சொல்லுவானுங்க


RAMESH KUMAR R V
அக் 23, 2025 12:53

யாராக இருந்தாலும் பேசிக் அமேனிட்டிஸ் உன்ன உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் கொடுத்தாகவேண்டும்.


Rathna
அக் 23, 2025 12:26

ஐரோப்பிய நாடுகள் திருடர்களை பாதுகாப்பதில் உள்ள உணர்வை நல்லவர்களை காப்பாற்ற பயன்படுத்த வேண்டும். சிறைகளில் A/C வசதி, 4 கு வேளை உணவு, வாரம் ஒரு முறை மருத்துவ பரிசோதனை, கைக்கு செலவு செய்ய பணம் போன்றவற்றை வழங்குகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் இருந்து செல்லும் பொருளாதார திருடர்கள் மற்றும் கொலையாளிகளுக்கு இந்த நாடுகள் சிறந்த சட்ட பாதுகாப்பை வழங்குகிறது. திருடர்கள் மிக பெரிய வக்கீல்களை வைத்து வாதாடி, இந்தியா வராமல் தப்பிக்கவும், அரசியல் அடைக்கலம் தேடவும் கடும் முயற்சி எடுக்கின்றனர். இதிலே பிரிட்டன், சுவிற்சர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், பின்லாந்து போன்ற நாடுகள் முதலிடம் வகிக்கிறது. இதனால் பல இன படுகொலையாளர்கள் சிறியா, ஈராக், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து அங்கே தப்பித்து செல்கிறார்கள். அங்கே உள்ள பெண்களை, குழந்தைகளை பதம் பார்க்கிறார்கள். அது போல இந்திய பொருளாதார திருடர்கள், உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி அங்கே அங்கே அரசியல் அடைக்கலம் தேடுகிறார்கள். இதனால் தான் இந்திய அரசு அந்த நாட்டு கோர்ட்களுக்கு அவர்களில் வசதிக்கும், பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்கி இந்த திருடர்களை கூடி வர வேண்டி உள்ளது. இல்லாவிட்டால் ஐரோப்பியன் யூனியன் சட்டப்படி அந்த நாடுகளில் இருந்து திருடர்களை கூட்டி வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.


R.RAMACHANDRAN
அக் 23, 2025 11:46

இந்த நாட்டில் குற்றவாளிகளுக்கு எல்லாம் நல்லதை செய்து அவர்களை கண்ணும் கருத்துமாக பாது காக்கின்றனர். நிரபராதிகள் மீது பொய் வழக்குகள் புனைந்து சித்திரவதை செய்கிறனர்.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 23, 2025 10:20

குற்றவாளிக்கு கொடுக்கப்படும் தண்டனையிலும் ஏழை பணக்காரன் பாகுபாடு இருப்பது நாட்டுக்கே அவமானம்.


Manalan
அக் 23, 2025 10:03

மல்லையாவுக்கு தயாரான ரூம் என்னாச்சு?


முக்கிய வீடியோ