வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வட்டி அளவாக நியாயமாக வாங்கவும் அம்மையார் வலியுறுத்தினார். வட்டி, அபராதம் போன்றவைகளுக்கு, 18% ஜிஎஸ்டி விதிப்பதும் மிகமிக அநியாயம் அல்லவா? வங்கிகள் SMS அலர்ட்டுகள் தருவதற்கு ஒரு கட்டணம் வசூலித்தால் அதற்கும் ஜிஎஸ்டி. மேலும் வசதி இல்லாத காரணத்தால் கடன் வாங்கினால் அதை EMI மூலம் கட்டினால், அந்த மாதாந்திர தொகையின் வட்டிக்கும் ஜிஎஸ்டி, அந்த கடனை process பண்ணுகிறார்களாம், அதற்கு ஒரு கட்டணம், அதே கட்டணத்திற்கு ஒரு ஜிஎஸ்டி. இல்லாதவரிடம் தான் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சுரண்டி வாழ்கின்றன. Current account வைக்க வேண்டிய நிர்பந்தம் சிறு சிறு வர்த்தக தொழில் நிறுவனங்களுக்கு கூட அவசியம் என்ற நிலையில், அந்த கணக்கில் இருந்து சுரண்டுவது, கணக்கில்லாதது. எதற்கு எடுத்தாலும் சேவை கட்டணம் , அதற்கு ஒரு ஜிஎஸ்டி.... வட்டி, சேவை கட்டணம், அபராதம், அனைத்திற்கும் ஜிஎஸ்டி,, சுரண்டலோ சுரண்டல்,,,, அதுவும் இல்லாதவர்களிடம்...
திமுக ஆட்சியில் இருந்த வங்கிப் பரிமாற்றங்களுக்கான சேவை வரிதான் இப்போது ஜிஎஸ்டியாக மாறி உள்ளது. முன்பு வாயைப் பொத்திக்கொண்டிருந்தவர்கள் இப்போ கூச்சலிடுவது ஏன்?எல்லா மாநில அரசுகளும் சேர்ந்து ஒருமித்த கருத்துடன்தான் ஒவ்வொரு சேவைக்கும் ஜிஎஸ்டியை முடிவு செய்கின்றன. அநியாய வசூல் என நினைத்தால் அதில் பங்கு வேண்டாம் எனக் கூறலாமே.
கடனை வசூலிக்க சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் இதில் என்ன கண்ணியமானமுறை அவர்கள் செய்வது அனைத்தும் சட்ட விரோதம் அதற்கு இந்தம்மா சப்போர்ட் பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாத அம்மா
வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களான கார்பரேட் நிறுவனங்களின் நீண்டகால நலனையும் பார்த்தே கடன் வசூலில் நெளிவு சுளிவுடன் நடந்து கொள்கிறார்கள். ஆனால் எதிர்கட்சிகளுக்கு பயந்து அரசுத்துறை வங்கிகள் வசூலில் அநாவசிய கடுமை காட்டுகின்றன . எல்லாத் தொழில்களிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எனவே எல்லா சூழ்நிலைகளிலும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி இருக்கும். கடன் கட்ட இயலாமல் தவிப்பார்கள் எல்லாருமே திருடர்களில்லை. அவர்கள் மூலம் முற்காலத்தில் ஈட்டிய வட்டி, வரி வருமானங்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அநியாயமா வரி வசூலிக்கும் போது கண்ணியம் இல்லை.
முடிந்தால் கடன் வாங்கியவர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி போல் தப்பிச்செல்ல வழி சொல்லித்தர வேண்டும்.
தொலைபேசி மூலம் வங்கித் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து கடன் கொடுக்க வைத்தது வேட்டி அணிந்த தமிழர். கோர்ட் உத்தரவு இல்லாமல் யாரையும் வெளிநாட்டுக்குச் செல்லாமல் தடுக்க முடியாது. கோர்ட் யாருக்கு சாதகமாக என்பதை செல்லவே வேண்டாம்.
இருக்கிற பொதுத்துறை வங்கி வேலைகள் 90 சதவீதம் கண்ணியமா காலி பண்ணியாச்சு. இனிமே இஸ்ரேலுக்கு சிற்றாள் வேலைக்குதான் போகணும்.