உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதி தகுதிநீக்க தீர்மான நோட்டீசில் எம்.பி.,க்கள் கையெழுத்தில் முரண்பாடு

நீதிபதி தகுதிநீக்க தீர்மான நோட்டீசில் எம்.பி.,க்கள் கையெழுத்தில் முரண்பாடு

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியை, தகுதிநீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் பலரது கையெழுத்து முரண்படுவதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அவற்றை சரிபார்க்கும் பணியில் ராஜ்யசபா செயலகம் ஈடுபட்டுள்ளது.உ.பி.,யின் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் சேகர் யாதவ். பொது சிவில் சட்டம் குறித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்திய கூட்டத்தில், இவர் பங்கேற்று பேசுகையில், “பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்தின் பேரில்தான், இந்த நாடு இயங்கும். இதை சொல்வதற்கு, எனக்கு எந்த தயக்கமும் இல்லை.“ஐகோர்ட் நீதிபதியாக இருப்பதாலேயே, இப்படி நான் பேசக்கூடாது என்று, யாரும் சொல்ல முடியாது. சட்டமே, பெரும்பான்மை அடிப்படையில் தான் இயங்குகிறது,” என பேசியிருந்தார்.இதை கண்டித்த ராஜ்யசபா எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், நீதிபதி சேகர் யாதவை தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி ராஜ்யசபா செயலகத்தில் நோட்டீஸ் அளித்தார். இதையடுத்து இந்த விவகாரம் பெரிதானது.மொத்தம், 55 எம்.பி.,க்களின் கையெழுத்துகள் அடங்கிய அந்த கோரிக்கை, ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், ராஜ்யசபா செயலகத்துக்கு ஒரு புகார் வந்தது.அதில், ஒரே எம்.பி., யின் கையெழுத்து, இருமுறை போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் உஷாராகினர். இது முடிவதற்குள், தன் ஒப்புதல் இல்லாமலேயே கையெழுத்து போடப்பட்டுள்ளதாக மற்றொரு எம்.பி., தெரிவித்தார். தகுதிநீக்க தீர்மான நோட்டீசில் இரட்டை கையெழுத்தோ அல்லது பிழைகள் இருந்தாலோ, விதிகளின்படி அந்த நோட்டீஸ் நிராகரிக்கப்படும். எனவே, நோட்டீசை சரிபார்க்கும்படி ராஜ்யசபா செயலக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, எம்.பி.,க்களின் கையெழுத்துகள் அனைத்தையும் சரிபார்க்கும் பணி துவங்கியது. பெரும்பாலான கையெழுத்துகள் சரிபார்க்கப்பட்டுவிட்ட நிலையில், இன்னும் சிலரின் கையெழுத்துகள் சரிபார்க்கப்பட வேண்டியுள்ளது.லோக்சபாவிலும் இதே தீர்மானம் கொண்டுவரும் நோக்கில், தேசிய மாநாட்டு கட்சி எம்.பி., ஒருவர், நுாற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.,க்களிடம் கையெழுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதனால், இந்த கையெழுத்துகள் அனைத்தையும் ஆய்வு செய்ய லோக்சபா செயலகமும் முடிவெடுத்துள்ளது. கையெழுத்துகளை ஆய்வுசெய்து சரிபார்க்கும் பணி முடிவடைந்து, நடைமுறை சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்படும் வரையில், இந்த தீர்மானம் அடுத்த கட்டத்தை எட்டப் போவதில்லை.இதனால், வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நீதிபதி சேகர் யாதவை தகுதிநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் எடுத்து வரும் முயற்சி வெற்றி அடைவது சுலபம் அல்ல என, பார்லி., வட்டாரங்களில் கூறப்படுகிறது. - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

c.mohanraj raj
ஜூன் 25, 2025 00:14

பெரும்பான்மை தான் முடிவு செய்யும் அதில் அவர் சொன்ன மாறுபட்ட கருத்தும் உள்ளது அதிக அளவில் லஞ்சம் வாங்கும் நீதிபதிகள் பெரும்பான்மையாக சொல்லும் கருத்துக்கள் தான் நீதிகளாக வரும்


R.RAMACHANDRAN
ஜூன் 24, 2025 09:18

இந்த நாட்டில் கால தாமதம் செய்தே குற்றவாளிகளை காப்பாற்றி நேர்மையானவர்களை ஒடுக்கி விடுவர்.பெரும்பாண்மை இருந்தால் எதையும் செய்யலாம் என்பது கட்டை பஞ்சாயத்து.நீதிபதிகளில் பெரும்பான்மையானவர்கள் அரசமைப்பின் அடிப்படை உரிமைகளுக்கு விரோதமாக கட்டை பஞ்சாயத்து செய்வதில் வல்லவர்களாக உள்ளனர். அத்தகைய உரிமம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை யாரும் உணர்த்துவதாக இல்லை என்ற நிலையில் இ த ச பிரிவு 219 ன் கீழ் தண்டிக்க வழிவகைகள் செய்ய வேண்டும்.அதற்காக அரசமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என்றாலும் செய்ய வேண்டும்.இதனை செய்யாமல் குற்றவாளிகளை காப்பதிலேயே குறியாக உள்ளனர்.அந்த குற்றவாளிகள் பதவியில் இருந்தால் தான் இந்த குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பாமல் காப்பாற்றுவர்.


visu
ஜூன் 24, 2025 08:04

impeachment செய்ய 2/3 மஜுரிட்டி வேண்டும் அது பிஜேபி ஆலேயே முடியாது எதிர்க்கட்சிகள் சும்மா விளையாடிட்டு இருக்காங்க


GMM
ஜூன் 24, 2025 07:45

பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்தின் பேரில் முடிவு, அதிக நீதிபதி அமர்வு தீர்வின் பேரில் முடிவு, பொது தேர்தல் அதிக வாக்கு எண்ணிக்கை முறையில் தேர்தல் முடிவு, பெரும்பான்மை ஏழ்மை சமூக அடிப்படையில் சாதி இட ஒதுக்கீடு போன்ற முறையில் இந்தியா செயல் படுகிறது. நீதிபதி பேசில் தவறு இல்லை. கபிலை ராஜ்ய சபா MP பதவியில் இருந்து நீக்க வேண்டும். தவறான முன் உதாரணம். தற்போதய நிலையில் நீதிபதி தகுதி நீக்கம் செய்ய கொலிஜியம் முன் அனுமதி தேவை. ஆனால் ஒரு தனி நபர் பலர் விருப்பம் இல்லாமல், பொதுநல வழக்கு, ஒரு மாநிலம் மட்டும் தேசிய கொள்கை எதிராக தனி கொள்கை முடிவு எடுக்க குறுக்கு வழியும் உள்ளது.


cpv s
ஜூன் 24, 2025 09:47

yes what he told is correct , based on majority only moving all the things , what is wrong in that, thekapill sival must arrest and put in the jail min 25yrs


பேசும் தமிழன்
ஜூன் 24, 2025 07:41

சட்டம் அனைவருக்கும் சமம்.... இதை எவன் சொன்னது என்று தான் தெரியவில்லை. ஒரு ஊழல் நீதிபதியை தண்டிக்க முடியாத அளவுக்கு சட்டத்தில் ஓட்டைகள் இருக்கிறது.. அந்த லட்சணத்தில் நமது நாட்டின் சட்டங்கள் இருக்கின்றன.


rama adhavan
ஜூன் 24, 2025 09:50

ரோடு என்றால் குழி, சட்டம் என்றால் குறை இருக்கத்தான் செய்யும். 64 சாமுத்திரிகா லட்சணத்தில் உள்ளோர் உலகில் எவரும் இருக்க மாட்டார்கள். அது போல் தான் இதுவும்.