உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.பி.,யில் 11 குழந்தைகள் உயிரை பறித்த இருமல் மருந்து: பரிந்துரைத்த டாக்டர் கைது

ம.பி.,யில் 11 குழந்தைகள் உயிரை பறித்த இருமல் மருந்து: பரிந்துரைத்த டாக்டர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்திய பிரதேசத்தில் உயிரிழந்த குழந்தைகள் 11 பேருக்கு இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார்.ம.பி.,யின் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த 15 நாட்களாக, 1 - 6 வயதுக்கு உட்பட்ட , 11 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் இறந்தன. அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரிலும், இரண்டு குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன. இந்தக் குழந்தைகள், 'கோல்ட்ரிப்' மற்றும் 'நெக்ஸ்ட்ரோ' ஆகிய இருமல் மருந்துகளை உட்கொண்டது தெரியவந்தது. இரு மாநிலங்களிலும், இந்த மருந்து உட்பட 15க்கும் மேற்பட்ட மருந்துகள் விற்க தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் கோல்ட்ரிப் மருத்தை தயாரித்த ஸ்ரீசான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திற்கு எதிராக மத்தியப் பிரதேச அரசு வழக்குப் பதிவு செய்தது. இறந்தவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பராசியாவில் உள்ள குழந்தை நல டாக்டரான பிரவீன் சோனியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.தற்போது குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

c.mohanraj raj
அக் 06, 2025 09:05

இதெல்லாம் சாதாரண நூறு கோடி நீதிபதிகள் இருக்கின்றார்கள் வெளியே விட்டு விடுவார்கள் நீதித்துறையை திருத்தாமல் எதுவும் செய்வது வீண் தான்


GMM
அக் 05, 2025 14:21

தமிழக மருந்து கட்டுப்பாடு துறை, தமிழக தயாரிப்பு நிறுவனம் தான் முதல் பொறுப்பு. டாக்டர் இதில் எச்சரிக்க பட வேண்டியவர். மருத்துவ சங்க அறிக்கை பெற்று டாக்டர் மீது விசாரணை தொடர வேண்டும். டாக்டர், என்ஜினீயர், விஞ்ஞானி போன்ற முக்கிய பணியாளர்களை கையாள தனி போலீஸ் அதிகாரிகள் நிர்வாக பிரிவு அவசியம். வக்கீல், போலீஸ், அரசியல் கூட்டு இருந்தால், உண்மை பொய் ஆகும். பொய் உண்மை ஆகும். நீதிபதி வாத அடிப்படையில் தான் முடிவு செய்து வருகிறார். மேலும் டாக்டர் நேரடியாக தன் நிலையை நீதிபதியிடம் , தன் மாநில மருத்துவ துறையிடம் ஒரு முறை தெரிவிக்க வாய்ப்பு தர வேண்டும்.


s.sivarajan
அக் 05, 2025 14:00

குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுப்பதை மத்திய அரசு தடை செய்திருப்பதை அறியாத ஒரு டாக்டருக்கும், இருமல் மருந்து தயாரிப்பதையே குற்றம் சொல்லும் ஒருசாராருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.


Barakat Ali
அக் 05, 2025 12:15

ஸ்ரெசான் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது.. அதுவும் தமிழகத்தை இருளில் ஆழ்த்திய காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தது..... தமிழகத்தில் அதன் மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவையா? ஆம், தரச்சான்று/அனுமதி பெற்றவை என்றால் தமிழக அரசையும் வழக்கில் சேர்க்க வேண்டும் ...


Hari
அக் 05, 2025 10:52

இதில் இரக்கம் படுவதற்கு ஒன்றும் இல்லை டாக்டர் மற்றும் அந்த மருந்து கம்பெனி ஓனர் இருவரும் குற்றவாளிகள். தூக்கில் போடவேண்டும் அதனால் மற்ற உயிர்கள் என்ன விலை இல்லாத பொருளா அவர்கள உயிர்கள் காக்கப்பட வேண்டாமா ?


Barakat Ali
அக் 05, 2025 12:42

மருந்து கம்பெனிக்கு ஓகே பண்ணிய தமிழக அரசுக்கு [எந்த கழக அரசோ] பொறுப்பு இல்லீங்களா ????


Rathna
அக் 05, 2025 10:28

மருத்துவர்கள் மத்தியில் உள்ள கமிஷன் வாங்கும் குணம் அப்பாவி குழந்தைகளை பலி வாங்குகிறது.


R SRINIVASAN
அக் 05, 2025 10:21

At times I get annoyed about people quitting India to settle abroad. But when I read news like this I feel they are doing the right thing


PALANIAPPAN. S
அக் 05, 2025 10:18

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்தை ப்ரைஸ்கிரைப் செய்யக் கூடாது. இதை மீறியதால் தான் டாக்டர் கைது செய்யப் பட்டிருக்கிறார்.


P. SRINIVASAN
அக் 05, 2025 10:09

பிஜேபி மேதாவிகள் போயி விசாரணை செய்வார்களா?


Field Marshal
அக் 05, 2025 10:32

நீங்க என்ன?


Barakat Ali
அக் 05, 2025 14:28

நியாயமாகப் பார்த்தால் நிறுவனத்துக்கு தமிழக அரசு எப்படி அனுமதி வழங்கியது என்றுதான் விசாரணையைத் துவங்கவேண்டும் ......


krishna
அக் 05, 2025 09:51

அராஜகம். தயாரித்த கம்பெனியை விட்டு டாக்டரை கைது செய்வது.


முக்கிய வீடியோ