உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்காக 5 கோடி விண்ணப்பங்கள் வினியோகம்

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்காக 5 கோடி விண்ணப்பங்கள் வினியோகம்

புதுடில்லி: தமிழகத்தில் 5 கோடியே 67 ஆயிரத்து 45 எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன என்று தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.நாடு முழுவதும் சரியான வாக்காளர்கள் யார் என்பதை கணக்கெடுக்கும் பணிகளை தேர்தல் கமிஷன் துரிதப்படுத்தி இருக்கிறது. அதன் முக்கிய கட்டமாக எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் கமிஷன் அமல்படுத்தி உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்று 15 ஆண்டுகளை கடந்துவிட்டது. எனவே, வாக்காளர்கள் இடப்பெயர்ச்சி, அவர்களின் மரணம் ஆகியவற்றை கணக்கெடுத்து பட்டியலில் இருந்து நீக்கவும், 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.முதல் கட்டமாக பீஹாரில் இந்த பணிகள் தொடங்கின. தற்போது தமிழகம், மேற்கு வங்கம், உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு, சரியான வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நவ.4ல் தொடங்கி டிச.4 வரை நடக்கிறது. தற்போது இந்த பணிகள் தொடங்கி ஒரு வாரம் முடிந்துவிட்டது. எனவே எந்ததெந்த மாநிலங்களில் என்ன மாதிரியான பணிகள் நடைபெற்று வருகின்றன, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எத்தனை விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன என்ற விவரங்களை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.அதன்படி, தமிழகத்தில் மட்டும் 5 கோடியே 67 ஆயிரத்து 45 எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த பணிக்காக 68,467 பூத் லெவல் அதிகாரிகள், 2,11,445 பூத் லெவல் முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அக்.27, 2025ம் ஆண்டு கணக்கீட்டின் தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர் இருக்கின்றனர். இவர்களுக்காக 6 கோடியே 41 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் இதுவரை 5 கோடியே 67 ஆயிரம் பேருக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அதாவது, விண்ணப்பங்களில் 78.09 சதவீதம் வினியோகிக்கப்பட்டு விட்டன.மற்ற மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளுக்காக எத்தனை வாக்காளர் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன என்ற விவரங்களையும் தேர்தல் கமிஷன் வெளியிட்டு இருக்கிறது. அதில் அதிகபட்சமாக உ.பி.யில், 10 கோடியே 80 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 6 கோடியே 80 லட்சம் விண்ணப்பங்களும், மத்திய பிரதேசத்தில் 3 கோடியே 9 லட்சம் விண்ணப்பங்களும் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kulandai kannan
நவ 12, 2025 21:06

BLO க்களுக்கு சரியான புரிதல் இல்லை. தமிழக தேர்தல் அதிகாரி சொல்வது ஒன்று, இவர்கள் செய்வது வேறு.


தமிழ்வேள்
நவ 12, 2025 20:30

இந்த படிவங்களுடன், இந்தியர்கள் என்பதற்கான சான்றுகள் இணைக்கப்பட வேண்டாமா? வீடு வீடாக விநியோகம் செய்யும் திமுக ஆத்மிகள் திமுகவினர் மட்டுமே எதுவும் வேண்டாம்.தற்போதைய ஓட்டர் விபரங்களை மட்டும் எழுதவும் என கூறுகிறார்கள்.. அப்போது பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆசாமிகளை அப்படியே வைப்பார்கள் போல.. நிரப்பப்பட்ட படிவங்களை வாங்கி இவனுங்களிடம் கொடுக்க அந்தந்த ஏரியாவில் முஸ்லிம் குடும்பங்களை நியமித்துள்ளார்கள்.இன்று சென்னை பெருங்களத்தூர் நிலவரம் இது.. இப்படி இருந்தால் எஸ் ஐ ஆர் ஒழுங்காக நடக்காது... இந்த மாநில அரசை கலைத்து கவர்னர் ஆட்சியில் இதை செய்தால் மட்டுமே தமிழகம் உருப்படும்...


திகழ்ஓவியன்
நவ 12, 2025 18:54

இனி DMK கோர்ட்டுக்கு போகாது என் எனில் இந்த விஷயம் முழுவதும் DMK தொண்டர்கள் தான் பேருக்கு அங்கன்வாடி தொழிலாளர் கூட சென்று வேலை செய்க்கிறார்கள் , மோடி நினைப்பது வேறு இங்கு நடப்பது வேறு இது பீஹார் அல்ல ஷா அவர்களே


Srinivasan Narasimhan
நவ 12, 2025 18:53

கொடுத்த படிவத்தில் எந்த வில்லங்கமும் இல்லையே


திகழ்ஓவியன்
நவ 12, 2025 18:52

அறிவித்து ஒரு வாரம் ஆகுது இப்போ தான் எஸ்ஐஆர் பணிக்காக 5 கோடி விண்ணப்பங்கள் வினியோகம் , சிறப்பு இதில் ஒரு மாதத்தில் முடிக்கணும் அருமை


GMM
நவ 12, 2025 18:37

விண்ணப்ப விநியோகம் சரி. சில கட்சிகளில் ரவுடி, அடியாள், மறைந்து வாழ வேண்டிய நபர்கள் அதிகம் இருப்பர்? அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் ஓட்டு பதிவாகும். வாக்காளர் பிறந்த தேதி, ஆதார், செல் போன்... விவரம் கொடுத்தால் தேர்தல் ஆணையம் சரி பார்க்க எளிது. மேலும் உறவினர் பற்றி விவரம் பெரியார் கொள்கைக்கு எதிர்.? வாக்காளர் பட்டியலில் பிழை குறையும். திராவிட கட்சி அடியாட்கள், இறந்தும் ஓட்டு போட்டு வரும் வாக்காளருக்கு இதுவரை இருந்த உரிமையை மீட்க தான் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதம்?


V Venkatachalam, Chennai-87
நவ 12, 2025 18:20

புதைக்கப்பட்ட வர்கள் புதையுண்டு போனவரகள் வெள்ளத்தில் காணாமல் போனவர்கள் வானத்தில் மேகமோடு மேகமாக சஞ்சாரம் செய்பவர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட ரொபோட்டுகள் வரை வாக்காளர் பட்டியலில் இருக்கிறார்கள். இந்த விபரங்கள் திருட்டு தீயமுக காரனுங்களுக்கு நன்கு தெரியும். தங்களுக்கு வேண்டாத கட்சி காரன் பேர்களை அறவே நீக்கி அல்வா குடுத்திருப்பான்கள். இவனுங்க பண்ற அடாவடிக்கு பயப்படாமல் இந்த வேலையை செய்து முடிக்க வேண்டும். ரொம்ப தகராறு பண்ற இடங்களில் ராணுவத்தின் உதவியுடன் நடத்தி முடிக்க வேண்டும். பணியை சிறப்பாக நடத்த வாழ்த்துக்கள்.


ஈசன்
நவ 12, 2025 18:17

5 கோடி விண்ணப்பங்களிலிருந்து போலியான வாக்காளர்கள் எவ்வளவு பேர் நீக்க பட்டார்கள், அதை தேர்தல் கமிஷன் வெளியிட வேண்டும்.


V Venkatachalam, Chennai-87
நவ 12, 2025 19:37

கருத்து கந்தசாமி ஆர் டி ஐன்னு ஒண்ணு இருக்குதானே அதுல மனு குடுத்தா இந்த விபரங்கள் எல்லாமே கிடைக்கும். அது சரி அதை வச்சிகிட்டு என்னா மேன் பண்ணப்போற. இதை இங்கே எழுதுனதுக்கு உனக்கு லஞ்சம் எவ்ளோ மேன் அதை சொல்லு மேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை