உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சர் சிராக் பஸ்வானின் நண்பர் வீட்டில் ஈ.டி., ரெய்டு

அமைச்சர் சிராக் பஸ்வானின் நண்பர் வீட்டில் ஈ.டி., ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும், லோக் ஜன்சக்தி ராம் விலாஸ் கட்சி தலைவருமான சிராக் பஸ்வானுக்கு நெருக்கமான நண்பர் ஹுலாஸ் பாண்டேவின் வீடு, அலுவலகங்களில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை, சோதனை நடத்தியது.பீஹாரில் செயல்படும் லோக் ஜன்சக்தி ராம் விலாஸ் கட்சி, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கிறது. அக்கட்சி தலைவர் சிராக் பஸ்வான், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். முன்னாள் எம்.எல்.சி., ஹுலாஸ் பாண்டே, இவருக்கு நெருக்கமானவர். இந்நிலையில், பாட்னாவில் ஹுலாஸ் பாண்டேவின் வீடு, அலுவலகங்களில், அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதே போல், டில்லியிலும், கர்நாடகாவின் பெங்களூரிலும் சோதனை நடந்தது. இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நிதி முறைகேடு தொடர்பாக சோதனை நடந்ததாகக் கூறப்படுகிறது. வழக்கு விபரங்களை அமலாக்கத் துறையினர் தெரிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஜெய்ஹிந்த்புரம்
டிச 28, 2024 02:15

பார்லிமெண்டில் சட்டம் தாக்கல் செய்யப்படப்போகிறது. மாத்தி வோட்டு போடாமல் இருக்க இந்த கிடுக்கி. மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் இது நடக்கும்.


V வைகுண்டேஸ்வரன், chennai
டிச 28, 2024 08:31

யோவ் மதுரை, அறிவாலயத்தில் மேலே ரெய்டு கீழே தொகுதி பங்கீடு. எப்புடி...? தன் வினை தன்னை சுடும்.