உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பண்டிகையானாலும் செய்யும் தொழிலே முக்கியம்; சுந்தர் பிச்சையின் சுவாரஸ்ய தீபாவளி பதிவு

பண்டிகையானாலும் செய்யும் தொழிலே முக்கியம்; சுந்தர் பிச்சையின் சுவாரஸ்ய தீபாவளி பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ள தீபாவளி வாழ்த்து, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், புத்தாடை அணிந்தும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து சமூகவலை தளத்தில் பதிவிட்டு உள்ளார்.அதில் கூகிள் லோகோவை சுவையான இனிப்பு பர்பியால் வரைந்திருக்கிறார்.சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பர்பிகள் சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் என வெவ்வேறு வண்ணங்களில் உள்ளன. அவை கூகுள் லோகோவைப் போலவே அமைக்கப்பட்டு இருக்கின்றன. படத்தில் ரங்கோலி, பூக்கள் மற்றும் ஒரு தட்டு லட்டுகளும் இடம்பெற்றுள்ளன.அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:என் வீட்டில் பர்பி பரிமாற ஒரே வழி இதுதான் என்பது தெளிவாகத் தெரிகிறது.அனைவருக்கும் ஒளி, மகிழ்ச்சி மற்றும் உங்களுக்குப் பிடித்த பண்டிகை விருந்துகள் (கூகுள் கருப்பொருள் அல்லது வேறு) நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள். இவ்வாறு சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.இந்தப் பதிவு, சமூக ஊடக பயனர்களின் கவனத்தை விரைவாகப் பெற்று வருகிறது. சுந்தர் பிச்சைக்கு தீபாவளி வாழ்த்துக்கள் என்று கூறி பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். பண்டிகையானாலும் செய்யும் தொழிலே முக்கியம் என்று சுந்தர் பிச்சையின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Padmasridharan
அக் 21, 2025 11:40

செய்யும் தொழிலே முக்கியமென்று வரி கட்டுபவர்களெல்லாம் குடும்பத்தில் பிரச்சனைகளோடு சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கோடிகளைப் பார்த்து நூறும் ஆயிரங்களும் தங்கள் குடும்ப வாழ்க்கைக்கு சூடு வைத்துக் கொண்டிருக்கின்றனர்.


சண்முகம்
அக் 21, 2025 05:31

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே! காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே!!


Kasimani Baskaran
அக் 21, 2025 04:12

பணியாளர்களுக்கு அள்ளிக்கொடுப்பதால் பொதுவாகவே கூகிள் இவர்களின் இரத்தத்தில் புகுந்து உறவாடுகிறது..


Prabu
அக் 20, 2025 18:36

இதையே ஒரு அமெரிக்க குடிமகனிடம் கிறிஸ்துமஸ் அன்று சொல்வாரா ? சொன்னால் கேஸ் போட்டு விடுவான்


rama adhavan
அக் 21, 2025 05:04

அவரும் அமெரிக்கா குடிமகன் தான். இங்கு உள்ள இந்தியர்கள் ஹல்லோவீன், கிறிஸ்துமஸ் எல்லாம் வீட்டு முகப்பில் விளக்கு அலங்காரம் செய்து தீபாவளியுடன் கொண்டாடும் மனநிலையில் தான் உள்ளனர். நமது ஊர் போல் பிரிவினை செய்யும், பேசும்அரசியல் வாதிகள் இங்கு இல்லை. இருந்தால் வளர்ந்து இருக்காது.


RAMESH KUMAR R V
அக் 20, 2025 17:14

வாழ்க நீடுழி. இந்தியனாக படைத்திடு சாதனைகள் பலப்பல .


sengalipuram
அக் 20, 2025 17:06

ஒரு தமிழினிடம் தமிழில் பேசி தமிழ்நாட்டுக்கு முதலீடு கொண்டுவந்திருந்தால் நம் முதல்வரை பாராட்டியிருக்கலாம் . பிரதமரிடம் 5 பைசா தேறாத கேள்விகேட்டு நம் முதல்வர் பெருமைப்பட்டு கொண்டுயிருக்கிறார் . 15 பில்லியன் டாலர் முதலீடு பக்கத்துக்கு மாநிலத்துக்கு போய் விட்டது . இந்த விஷயம் முதல்வருக்கு தெரியுமா?


Easwar Kamal
அக் 20, 2025 16:50

சுந்தர் பிச்சை கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும். நீங்கள் ஒன்றும் இந்தியாவுக்கு மட்டும் கூகுளை நடத்தவில்லை என்றும் தெரிந்து கொள்ளவேண்டும். இப்படி ரொம்ப அதிக பிரசிங்கித்தனதோடு நடப்பதால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்காகத்தான் பிரச்சனை.


rama adhavan
அக் 21, 2025 07:54

ஒரு பிரச்சனையும் மண்ணும் இல்லை. சுமார் 100 நாடுகளின் மக்கள் இங்கு குடிமக்களாக உள்ளனர். இன்னாடுகளில் தமிழகம் போல் 1000 மாநிலங்கள் இருக்கும். பலர் 2 நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். அமெரிக்காவய்ப் பொருத்த மட்டில் அந்த நாட்டுக்கு உண்மையாய் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.


Priyan Vadanad
அக் 20, 2025 15:40

இந்த மாதிரி வாழ்த்து ஒன்றை திமுக செய்திருந்தால் நமது நடுநிலை வாசகர்கள் ...... நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது.


raja
அக் 20, 2025 15:18

வாழ்த்துக்கள் சுந்தர் பிச்சை பணி மேலும் மேலும் சிறக்க


ஆரூர் ரங்
அக் 20, 2025 14:46

நீங்க ஆந்திராவில் முதலீடு செய்த சேதி கேட்டுஉள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்துள்ளாராம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை