உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம்: ராகுல் கடும் தாக்கு

இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம்: ராகுல் கடும் தாக்கு

புதுடில்லி: இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம் இருப்பதாகவும், இது பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் தவிர அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர் என காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார். இது தொடர்பாக பார்லி., வளாகத்தின் வெளியே நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:''இந்தியாவில் பா.ஜ., அரசு பொருளாதாரத்தை சீரழித்துள்ளது. இந்திய வெளியுறவு கொள்கை மற்றும் பாதுகாப்பு துறை மத்திய அரசால் கீழ் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்திய பொருளாதாரம் இறந்த நிலையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகிய இருவருக்கு மட்டும் தெரியவில்லை. கவுதம் அதானிக்கு ஏற்ப உதவி செய்து இந்திய பொருளாதாரம் சீரழிக்கப்படுகிறது'' என்றார்.இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் விமர்சனம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ; 'ஆம் டிரம்ப் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். இவர் உண்மையை சொல்லி இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் டிரம்ப் சொல்வது போலத்தான் செயல்படுத்தப்படுகிறது. ஒரு புறம் அமெரிக்கா கடுமையாக இந்தியாவை விமர்சிக்கிறது. மறுபுறம் சீனா உங்களை மிரட்டுகிறது. ஆனால் இந்திய வெளியுறவு துறை கொள்கை சிறப்பாக உள்ளதாக அமைச்சர் கூறுகிறார். உலகம் முழுவதும் எம்பிக்கள் குழுவை அனுப்பினீர்களே எந்த நாடாவது பாகிஸ்தானை கண்டித்ததா ? இந்த நாட்டை எப்படி நடத்தி செல்வது என்று ஆளும் அரசாங்கத்திற்கு தெரியவில்லை. இவ்வாறு ராகுல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 72 )

Chandhra Mouleeswaran MK
ஆக 06, 2025 20:19

ராவுல் அல்பிநோ வின்சி, "செத்துப்[ போன எங்கள் நாட்டுப் பொருளாதாரத்தில் இருந்து கொண்டு சோறு தின்ன உனக்கென்ன யோக்கியதை? உயிருள்ள பொருளாதாரமாக ஜொலிக்கும் பிசைக்காரஸ்தான் உன்னுடைய சின்னத்தாத்தன் வீடுதான் அங்கெ போய் விடு பப்புக் குட்டன்


Chandhra Mouleeswaran MK
ஆக 06, 2025 20:12

இந்த இத்தாலிக்கார ராவுல் அல்பினோ வின்சி "இந்தியாவினுடையது இறந்த பொருளாதாரம்" என்று பினாத்தி இருப்பது நமது நாட்டைப் பற்றிய விமர்சனம் அல்ல அது காங்கிரஸ் கமிஷன் மண்டியின் தற்போதைய போண்டி போண்டி ஆகிப் போன பொருளாதாரம் ஆடசியிலும் இப்போது இல்லை கப்பல் கப்பலாகப் பதுக்கி வைத்திருக்கும் ஐநூறு ருபாய்க் கட்டுக்களையும் செலாவணியாக்க முடியவும் இல்லையா அதனால் காங்கிரஸ் கமிஷன் மண்டிக் கட்சியின் பொருளாதாரம் செத்து விட்டது அதை இந்தியாவின் பொருளாதாரம் செத்து விட்டது" என்று அம்மி சொல்லச் சொல்லி இருக்கிறது


சிட்டுக்குருவி
ஆக 02, 2025 05:31

Rahul Gandhi was involved with a company in England called Backops Limited, incorporated in the United Kingdom in 2003. He was one of two directors, the other being Ulrik McKnight. According to his 2004 election affidavit, Backops Limited had a bank account with HSBC UK with a balance of US$18,600. ஹாஹா உங்கள் நாட்டுப்பற்று மிகவும் போற்றக்கூடியது .எவ்வளவு ஆனந்தம் இந்திய பொருளாதாரம் இறந்தநிலையில் உள்ளது என்பதை கேட்க .இப்படி ஒருவர நாட்டில் பிறந்ததற்கு நாடு பெருமையடையவேண்டும் .அதுபோகட்டும் மேலே உள்ள ஆங்கில வரிகளுக்கு என்ன பொருள் என்று கூறமுடியுமா ?நீங்கள் இங்கிலாந்து பிரஜை என்று எழுத்துபூர்வமாக மனுவில் குறிப்பிட்டு உள்ளதாக தகவல் உள்ளது. அதைப்பற்றி மக்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிடுவீர்களா? வேறு நீங்கள் இந்திய பிரஜையாக இருந்தால் வேறு ஒரு நாட்டில் அந்தநாட்டின் பிரஜை என்று பொய்யக கூறி கம்பெனி தொடங்கி இருக்கலாமா ? வேறு ஒரு நாட்டில் இந்திய பிரஜை தாய்நாட்டின் அனுமதி இல்லாமல் கம்பெனி தொடங்கலாமா? தொடங்கிய கம்பனிக்கு முதலீடு எவ்வளவு எப்படி கொண்டு செண்றீர்கள் .இதை எல்லாம் தெரிந்து கொல்ல ஒரு பொறுப்பான மக்கள் பிரதிநிதியாக ,மக்களுக்கு முன் உதாரணமாக இருக்கக்கூடிய நீங்கள் தெளிவு படுத்தவேண்டும் .சந்தேகத்திற்கு இடமளிக்கக்கூடிய விஷயமாக இருப்பதால் அரசு இதை முழு விசாரணைக்கு உட்படுத்தி மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் .


Venukopal, S
ஆக 01, 2025 10:55

பப்பு. நீர் தான் ஒரு மெஷின் வைத்துள்ளாராம். அதில் ஒரு கிலோ உருளைக்கிழங்கை போட்டால் ஒன்னரை கிலோ தங்கம் வருமாம். அந்த மெஷிநில் உற்பத்தியை தொடங்கி செத்த பொருளாதாரத்தை உயிர்பிக்கவும்


S.V.Srinivasan
ஆக 01, 2025 09:00

டிரம்ப் இந்தியாவின் வளர்ச்சி பொறுக்காமல் எதோ உளறிட்டாருன்னா அதை வச்சுக்கிட்டு இவனும் பெரிய பொருளாதார மேதை மாதிரி கூவறான் பாருங்க. இந்திய பொருளாதாரத்தை பற்றி உனக்கு என்ன தெரியும்?


shyamnats
ஆக 01, 2025 08:22

இவர், இறந்து போன கான்கிராஸை சவப்பெட்டியில் வைத்து, இறுதி ஆணி அடிக்காமல் ஓய மாட்டார் என்பது உறுதி.


Raghavan
ஜூலை 31, 2025 22:03

லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் பொருளாதாரம் படித்து அதில் Phd பட்டம் வாங்கியவர். இவன் உலக பொருளாதாரத்தைப்பற்றி எல்லாம் படித்து கரைத்துக்குடித்தவர். தினம் ஏதேனும் சொல்லி வாங்கிக்காமல் இருந்தால் இவருக்கு தூக்கம் வராதுபோல.


Ramesh Sargam
ஜூலை 31, 2025 20:51

பொருளாதார நிபுணர், பொருளாதாரத்தில் நோபல்பரிசு வென்றவர் ராகுல் சொல்லிட்டார், இறந்த நிலையில் இந்திய பொருளாதாரமாம். சும்மா போவீரா?


தாமரை மலர்கிறது
ஜூலை 31, 2025 20:49

கடந்த ஐந்தாண்டில், இந்தியர்களின் சம்பளம் இரண்டு மடங்கு ஏறிவிட்டது. இந்தியா மூன்றாவது பெரிய பணக்கார பொருளாதார நாடாகிவிட்டது. இருந்தும் ராகுல் பொய் தகவல்களை பரப்பி வருகிறார். ட்ரம்பின் 25% புதிய வரியை இந்தியா பொருட்படுத்தவில்லை. காரணம் இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியும் செழுமையும் தான். இந்தியாவின் பொருளாதார வலிமையை உலகிற்கு காட்டவேண்டிய தருணம் வந்துவிட்டது.


Rajasekar Jayaraman
ஜூலை 31, 2025 20:30

ஜனநாயக கொலைகாரன் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட குள்ளநரித்தனம்.


புதிய வீடியோ