உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் ஓட்டுப்பதிவில் முறைகேடு இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு

கேரளாவில் ஓட்டுப்பதிவில் முறைகேடு இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு

புதுடில்லி: கேரளாவின் காசர்கோடில் நடந்த மாதிரி ஓட்டுப்பதிவில் பா.ஜ.,வுக்கு ஒரு ஓட்டு போட்டால் 2 ஓட்டுகள் பதிவானதாக கூறப்பட்டதற்கு இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது போன்று ஏதும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளது. கேரளா மாநிலம் காசர்கோடு சட்டசபை தொகுதியில் மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அதில் பா.ஜ.,வுக்கான பொத்தானை ஒரு முறை அழுத்தினால் அக்கட்சிக்கு இரண்டு ஓட்டுகள் விழுந்ததாக கூறப்படுகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தையும், விவிபாட் ஒப்புகைச்சீட்டையும் சரி பார்த்தபோது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பா.ஜ.,வுக்கு கூடுதல் ஓட்டுகள் பதிவானது சொல்லப்பட்டது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eg9udfu9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வழக்கு விசாரணை

இதற்கிடையே, ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும், விவிபாட்டில் உள்ள ஒப்புகை சீட்டுகளையும் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் நடவடிக்கைகள் புனிதமானதாக இருக்க வேண்டும்' எனக் கூறியதுடன், 'ஒப்புகை சீட்டு இயந்திரம் எப்படி செயல்படுகிறது? அதில் முறைகேடு செய்ய முடியுமா?' என்றும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக விசாரித்து பதிலளிக்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

NicoleThomson
ஏப் 20, 2024 12:45

இந்த வோட்டு முறையில் மிக பெரிய அதுவும் மனதளவில் பாதிக்கப்படுவது அரசு வேளையில் இருக்கும் பெண்களே அதனுள்ளம் பேப்பர் சீட்டு தான் வேண்டும் என்றால் உங்களை போன்ற எனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலை உள்ளவர்களால் ஆகும் கடினம்


Selvakumar Krishna
ஏப் 19, 2024 11:12

திருடங்கிட்டேயே கேட்டால் எப்படி சொல்வான்? அறிவுரை சொன்ன நீதி மன்றமே ஏன் நேரடியாக ஒரு சோதனையை நடத்தி தெளிவுபடுத்த கூடாது?


M S RAGHUNATHAN
ஏப் 18, 2024 21:13

Why not our Honourable CJI himself the validity, efficacy , credibility of the function of EVM He is a highly technically qualified person who can challenge Sunder Pitchai or Nadellaa Or Bill Gates He can take the assistance of IITians Jayaram Ramesh, Aravind Kejriwal and lawyers Kapil Sibal, P Chidambaram, Prashant Bhushan and settle the matter for once and all Nowadays our SC is the panacea for everything that is happening in the Country and the present CJI is the Godsend Messiah to save our country


S ANBUSELVAN
ஏப் 18, 2024 19:25

வல்லரசு நாடுகளே வாக்குப்பதிவு இயந்திரத்தை கைவிட்டுவிட்டன வாக்குப்பதிவு இயந்திரத்தை கண்டுபிடித்தவனும் அதனை கைவிட்டு விட்டான் ஆனால் இந்த அரைகுறை முட்டாள்கள் மக்களை ஏமாற்றி அவர்களின் பணத்தை ஆட்டையைப்போடுகிற திருடர்களான காங்கிரஸ் பாஜக மட்டுமே இன்னும் இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கட்டிக்கொண்டு அழுகின்றன


C.SRIRAM
ஏப் 19, 2024 08:13

நூறு கோடி வாக்காளர்களை கொண்ட நாட்டில் பேப்பர் என்பது சாத்தியப்படாது இந்த மாதிரி அரைகுறை முட்டாள்தனமான கருத்துக்களை விஷயம் தெரியாமல் போடக்கூடாது ஆட்டை என்பது உங்க திருட்டு த்ரவிட கட்சிகளுக்கு மட்டுமே உரித்தானது


S ANBUSELVAN
ஏப் 18, 2024 19:22

வருடங்களுக்கு முந்தைய ஷிப்பா அதுவும் மோசடி என தேர்தலுக்கு முன்னாடியே கண்டுபிடித்தது இதுவே தேர்தலுக்கு பிறகு என்ன ஆகி இருக்கும் பாஜக லட்சம் வாக்குகள் இருக்கும் மொத்த வாக்குகள் லட்சம் வாக்குகள் என்றால்


venugopal s
ஏப் 18, 2024 18:47

எந்தத் திருடன் தான் திருடன் என்று இதுவரை ஒப்புக் கொண்டு இருக்கிறார்?


Hari Bojan
ஏப் 18, 2024 16:05

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள் அது இதுதானோ?


GOVINDHASAMY
ஏப் 18, 2024 15:42

கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு "ஆடத்தெரியதவன் வாசல் கோணல்"என்பார்கள்


Ramanujadasan
ஏப் 18, 2024 15:11

இப்போது உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் இதற்க்கு விளக்கம் அளித்து விட்டது அந்த மெஷினில் ஐந்து வருடங்களுக்கு முந்தைய ஆப் இருந்துள்ளது அது இப்போது சரி செய் யப்பட்டு விட்டது , நன்கு சரியாக வேலை செய்கிறது அந்த எந்திரம்


Saai Sundharamurthy AVK
ஏப் 18, 2024 14:59

ஆஹா! எதிர்க்கட்சிகள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டி ருக்கின்றன. தேர்தல் கமிசன் என்ன லூஸா??? ஒரு தொகுதியில் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர்? எவ்வளவு வாக்காளர்கள் ஓட்டு போட்டிருக்கின்றனர்? சதவிகிதம் எவ்வளவு? இது போன்ற தகவல்கள் இல்லாமலா வேலை செய்கிறார்கள். எதிர்க்கட்சிகள் நீதிமன்றங்களை இளிச்சவாய அமைப்பாக கருதுகின்றனர் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி