உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெடிபொருள் வெடித்து காயம்

வெடிபொருள் வெடித்து காயம்

ஷிவமொகா: பையில் வைத்திருந்த பொருள் வெடித்ததில், பலர் காயமடைந்தனர்.ஷிவமொகா, ஷிகாரிபுராவின், ஷிராளகொப்பா கிராமத்தில், சிலர் சாலையில் நேற்று, பெட்ஷீட் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு உமேஷ் என்பவர், தன் கையில் இருந்த பையை, பெட்ஷீட் வியாபாரி அந்தோணி அருகில் வைத்து விட்டு, எங்கோ சென்றிருந்தார்.இந்த வேளையில் பையில் இருந்த பொருள், திடீரென வெடித்து சிதறியது. இதில் அந்தோனி உட்பட, பலர் காயமடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உமேஷ் பன்றி வேட்டைக்காக, வெடி பொருளை பையில் கொண்டு வந்தார். இது வெடித்துள்ளது.ஷிராளகொப்பா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ