உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏமாத்துறதுல பி.எச்டி., படிச்சிருப்பாங்களோ; போலியாக வங்கி நடத்தி மோசடி செய்த கும்பல்!

ஏமாத்துறதுல பி.எச்டி., படிச்சிருப்பாங்களோ; போலியாக வங்கி நடத்தி மோசடி செய்த கும்பல்!

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் எஸ்.பி.ஐ., பெயரில் போலியாக வங்கி நடத்தி , ஏழைகளிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.நாட்டில் ஏதோ ஒரு வகையில் மோசடி நடந்து வருகிறது. ஏ.டி.எம்., கார்டு தகவல்களை பெற்று பணம் திருடுதல், லிங்க் ஒன்றை அனுப்பி அதன் மூலம் தகவல்கள் திருடுதல் , போலியாக ஆவணங்களை கொடுத்து பணம் வாங்கி மோசடி என பல வகைகளில் நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இதையெல்லாம் மிஞ்சும் வகையில் சத்தீஸ்கரில் நடந்த மோசடி பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. அதுவும் நாட்டின் முன்னணி வங்கியான எஸ்.பி.ஐ., -ன் பெயரை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.இது தொடர்பாக வெளியான தகவல் பின்வருமாறு: சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரின் 250 கி.மீ., தொலைவில் உள்ளது சபோரா கிராமம். இங்கு மர்ம நபர்கள் சிலர், கட்டடம் ஒன்றை, 7 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து எஸ்.பி.ஐ., கிளை என பெயர் பலகை வைத்து உள்ளனர். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக உண்மையான வங்கி போல், மேஜை, நாற்காலிகள், கண்ணாடி கூண்டுகள் வாங்கி வைத்துள்ளனர். அதில் பணி அமர்த்துவதாக கூறி மோசடியில் ஈடுபட்டனர்.இதற்காக ஏழைகள், வேலை இல்லாதவர்களை குறிவைத்து ரூ.30 ஆயிரம் சம்பளம் என ஆசை காட்டி உள்ளனர். அவர்களிடம் இருந்து லட்சக் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கான உத்தரவை வழங்கி உள்ளனர். அதில் சந்தேகம் வராதவகையில், உண்மையான எஸ்.பி.ஐ., வங்கி வழங்கும் உத்தரவை போல் கொடுத்துள்ளனர். அரசு வேலை எனக்கருதி, பலர் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் பணம் கொடுத்து உள்ளனர்.போலி வங்கி மீது சந்தேகம் வராத அப்பகுதி மக்கள் வரவு, செலவு வைக்க துவங்கி உள்ளனர். இந்த போலி வங்கி அமைந்துள்ள நகரில் இருந்து சற்று தொலைவில் உள்ள தாப்ரா நகரில் செயல்படும் எஸ்.பி.ஐ., கிளையில் கணக்கு வைத்துள்ளவருக்கு போலி வங்கி மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அங்கு சென்று விசாரித்துள்ளார். ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால், இந்த கிளை குறித்து தனது கணக்கு வைத்துள்ள வங்கி மேலாளரிடம் தகவல் கொடுத்துள்ளார். அவர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.போலீசாரும், எஸ்.பி.ஐ., அதிகாரிகளும் இங்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால், அதற்குள் மோசடியாளர்கள் பணத்துடன் தலைமறைவாகிவிட்டனர். அவர்களில் 4 பேரை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் நிதி இழப்பு ஏற்பட்டதுடன், சட்டச்சிக்கலையும் எதிர்கொண்டு உள்ளனர். இதனால், அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Lion Drsekar
அக் 04, 2024 07:10

உண்மைக்கும் போலிக்கும் உள்ள வேறுபாடு என்று எடுத்துக் கொண்டால் முடியாட்சியும் குடியாட்சியும் போல்தான், ஒரு சாரார் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம், லஞ்சம் வாங்குகிறார்கள் மற்றொரு சாரார் ஏமாற்றி பிழைக்கிறார்கள், தகுதிக்கும் திறமையுக்கும் வேலைகொடுத்தால் இதுபோன்ற தில்லும் முல்லுகளுக்கு வேலையே இல்லை,


Ramesh Sargam
அக் 03, 2024 21:16

மக்கள் ஏமாந்தால் Reserve Bank of India கிளையை ஆரம்பித்தும் ஏமாற்றுவார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 03, 2024 19:22

\ எஸ்.பி.ஐ., கிளையில் கணக்கு வைத்துள்ளவருக்கு போலி வங்கி மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அங்கு சென்று விசாரித்துள்ளார். // ஒரிஜினல் வங்கியில் அக்கவுண்ட் வைத்துள்ளவர் போலி வங்கி செல்லக்காரணம் மிரட்டி பேரம் பேச ...... அதனால் அவர்கள் உஷாராகி எஸ்கேப் ஆகிவிட்டனர் .....


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 04, 2024 14:07

நீங்கள் அந்த போலி வங்கி ஆசாமிகளை விட அதற்கும் மேலே யோசிக்கிறீர்கள். கண்டுபிடித்தவரையே குற்றவாளி ஆக்கும் இது போன்ற செயல்களால் தான் கண் எதிரே நடக்கும் குற்றங்களை கூட தடுக்க யாரும் முன் வருவது இல்லை சாட்சி சொல்ல போவதும் இல்லை. இதனால் குற்றவாளிகளுக்கு எப்பொழுதும் ஜாலி தான்


Jysenn
அக் 03, 2024 18:19

Some years ago a fake SBI was functioning in a northern district of Madras State. The employees of the fake bank were very decent, polite and helpful to the public. The civilized behavior of the fake bank staff was in stark contrast to the real bank staff who as all know are rude, arrogant and highly indecent. This decent behavior of the staff of the fake bank raised suspicion in the mind of a customer and he reported it to the police leading to the arrest.


தங்கப்பன்
அக் 03, 2024 17:43

எங்கேயும்.போயிருக்க மாட்டாங்க. பக்கத்திலே இன்னொரு கிராமத்திலே படிப்பறிவே இல்லாதவங்களுக்காக ஒரு SBI பிரான்ச் துவங்கியிருப்பாங்க. முப்பது லட்சம் குடுத்தா மூணு லட்சம் சம்பளம் போட்டு வேலையும் குடுக்கறாங்க. போங்க... போங்க.


Dharmavaan
அக் 03, 2024 17:40

இவ்வளவு வெளிப்படையாக குற்றம் செய்பவனை பல நாட்களில் பிடிக்க முடியவில்லையென்றால் என்ன சட்டம் ஒழுங்கு கேவலம்


raja
அக் 03, 2024 17:37

பஞ்சாப் ஐ ஆளுவது யார் துடப்ப கட்டை ஆச்சே


ஜெய்ஹிந்த்புரம்
அக் 04, 2024 00:17

ராய்ப்பூர், சத்தீஸ்கர் எப்போ பஞ்சாபில் சேர்த்தாங்க? சங்கி ஜியாகிரபியில் இப்படி தான் இருக்கோ?


babusrinivasan
அக் 03, 2024 17:28

முதலில் வாடகைக்கு இடம் கொடுத்த உரிமையாளரை கைது செய்ய வேண்டும் முறையாக விசாரிக்காமல் இடம் கொடுத்ததற்கு இரண்டாவது அங்குள்ள காவல் ஆய்வாளரை கைது செய்யவேண்டும் இவ்வளவு நாட்கள் இவர் என்ன செய்து கொண்டு இருந்தார் தூங்கி கொண்டு இருந்ததற்கு


ஜனக்சிங்
அக் 03, 2024 17:03

சௌக்கிதார்? இப்பிடி நேராவே திருடறாங்களே சவ்க்கிதார்?


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 03, 2024 18:48

எங்க இருட்டு திருட்டு சுருட்டு இருக்கோ ஒரு மார்கமாக அமைதியாகாவே நடக்கும் ...சோவ்கிடார் கிட்டமாட்டினா கவலை படக்கூடாது நயினா


Ganesun Iyer
அக் 03, 2024 16:27

சட்டமும் சரியில்ல, கட்டமும் சரியில்ல..


முக்கிய வீடியோ