| ADDED : நவ 09, 2025 04:57 AM
மணிலா: ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் பிலிப்பைன்சின் 'ரமோன் மகசேசே' விருதை, ராஜஸ்தானைச் சேர்ந்த, 'எஜுகேட் கேர்ள்ஸ்' என்ற அரசுசாரா தொண்டு நிறுவனம் பெற்றுள்ளது. இந்திய தொண்டு நிறுவனம் ஒன்று இந்த விருதைப் பெறுவது இதுவே முதல்முறை. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், துணிச்சல், தன்னலமற்ற சமூக சேவையில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் ரமோன் மகசேசே விருது வழங்கி கவுர வித்து வருகிறது. நடப்பாண்டுக்கான இவ்விருது ராஜஸ்தானைச் சேர்ந்த, 'எஜுகேட் கேர்ள்ஸ்' என்ற தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த 67வது விருது வழங்கும் விழாவில், பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த, 2007ல் ச பினா ஹுசைன் என்பவரால் துவங்கப்பட்ட இத்தொண்டு நிறுவனம், வட மாநிலங்களில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில், பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட, 24 லட்சத்துக்கும் அதிகமான ஏழை பெண்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்வி அளித் துள்ளது.