உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமரின் ஆலோசனை குழுவில் முன்னாள் ஈ.டி., இயக்குநர்

பிரதமரின் ஆலோசனை குழுவில் முன்னாள் ஈ.டி., இயக்குநர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர உறுப்பினராக, அமலாக்கத் துறையின் முன்னாள் இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா, 65, நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் பொருளாதார ஆலோசனைகளை வழங்கும் பணியை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு செய்து வருகிறது. இதன் தலைவராக பொருளாதார நிபுணர் சுமன் பெர்ரி உள்ளார். இதன் முழு நேர உறுப்பினராக இருந்த முன்னாள் தலைவர் பிபேக் ஓபராய், கடந்த ஆண்டு நவம்பரில் காலமானார். இதையடுத்து, அந்த பதவிக்கு அமலாக்கத் துறையின் இயக்குநராக பணியாற்றிய சஞ்சய் குமார் மிஸ்ரா நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2023 செப்டம்பர் மாதம் வரை அமலாக்கத் துறை இயக்குநராக பணியாற்றியவர் சஞ்சய் குமார் மிஸ்ரா. இவரின் பதவிக் காலத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா, எம்.பி.,க்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீதான பண மோசடி வழக்குகளில் விசாரணை நடத்தினார். அமலாக்கத் துறையின் இயக்குநராக இருந்தபோது, அவரின் பதவியை மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

J.Isaac
மார் 27, 2025 18:26

இவர் பதவில் உண்மையாக நேர்மையாக பணி செய்யவில்லை என்பதை காட்டுகிறது.


Rajarajan
மார் 27, 2025 13:15

இவ்ளோ பில்ட்அப் எல்லாம் தேவையே இல்லை. இந்தியா WTO ல் கையெழுத்து இட்டது முதல், தற்போதைய நிலவரம் வரை, எந்த எந்த துறைகள் தனியார்மயத்துக்கு காத்திருக்கிறது, தேவையுள்ள / அத்தியாவசிய துறைகள் தவிர, மற்றவற்றை தனியார்மயமாக்க என்ன நடவடிக்கை மற்றும் அவற்றினால் பொருளாதார ரீதியாக நாட்டின் வளர்ச்சி போன்றவற்றை செயல்படுத்தினால், இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டு வளர்ச்சி அபரிதமாக இருக்கும். இதற்கு எதற்கு இத்தனை பேர்கள் என தெரியவில்லை. தாடிக்கு ஒரு சீகைக்காய், தலைக்கொரு சீகைக்காய் தேவையா ??


venugopal s
மார் 27, 2025 11:19

அவர் அதிகாரத்தில் இருந்த போது நமக்கு செய்த உதவிக்கு இப்போது நாம் அவருக்கு எவ்வளவு செய்தாலும் போதாது என்று செய்நன்றி மறவாதவர்கள் நமது மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள்!


Anand
மார் 27, 2025 10:37

தன்னோட பதவி காலத்தில் ஊழலின் ஊற்றுக்கண்ணாகிய கூட்டுக்களவாணிகளை அடக்கி ஒடுக்கியவர்.. மீண்டும் அவருக்கு இந்த பதவியை கொடுத்ததன் மூலம் மேற்படி கூட்டுக்களவாணிகளை வேரோடு அழிக்க எடுக்கும் நடவடிக்கையாக தான் தெரிகிறது...


raju
மார் 27, 2025 12:00

ஆமாம் .. மோடிக்கு கை தடியா


Anbuselvan
மார் 27, 2025 10:30

என்ன பிரயோஜனம். எவ்வளவோ கேஸ்களில் ED எவ்வளவோ கண்டு பிடிக்கிறார்கள் என செய்தி வருகிறது. அத்தனையும் பிசு பிசுக்கும் புஸ்வாணம் போல அல்லவா மாறுகிறது. ED மத்திய அரசு தலையீடு துளி கூட இல்லாமல் நேரடியாக குடியரசு தலைவர் கீழ் வந்தால் ஒரு வேளை ஊழல்களை முழுதுமாக வெளிக்கொண்டு வர முடியுமோ என்னவோ. நீதித்துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை டெல்லி நீதிபதி விஷயத்திற்கு அப்புறம் மிகவும் குறைந்து விட்டது.


அப்பாவி
மார் 27, 2025 10:25

ரெண்டு கோடி வேலைவாய்பு திட்டம். சின்ன வயசு ஆளுங்களே கிடைக்கலே.


Narayanan Muthu
மார் 27, 2025 07:54

பதவியில் இருந்தபோது அக்கிரமான நடவடிக்கை மற்றும் அக்கப்போர் நடத்தியதற்கான நன்றி கடன்?


புதிய வீடியோ