உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் பிரதமர் இந்திரா வந்தாலும் முடியாது:காங்.,ஐ சாடிய அமித்ஷா

முன்னாள் பிரதமர் இந்திரா வந்தாலும் முடியாது:காங்.,ஐ சாடிய அமித்ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துலே: '' முன்னாள் பிரதமர் இந்திரா சொர்கத்தில் இருந்து வந்தாலும், காஷ்மீருக்கு சிறப்பு சட்டம் வழங்கும் 370 வது பிரிவை கொண்டு வர முடியாது,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நவ.,20 ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. துலே பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்னர் முஸ்லிம் சமுதாயத்தினர், காங்கிரஸ் தலைவரை சந்தித்தனர். அப்போது கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கூறினர். அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். ராகுலின் 4 தலைமுறையினர் வந்தாலும், இந்த இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க முடியாது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jz0illus&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சொர்க்கத்தில் இருந்து இந்திரா வந்தாலும், காஷ்மீர் சிறப்பு சட்டத்தை மீண்டும் கொண்டு வர முடியாது. மாநில பாஜ., அரசு சத்ரபதி சிவாஜி மற்றும் சவார்க்கரின் கொள்கைகளை பின்பற்றுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Smba
நவ 14, 2024 08:17

இந்திராவை பேச இப்ப உள்ள எந்த அமைச்சருக்கும் யோக்கியத இல்ல


Dharmavaan
நவ 14, 2024 07:29

தீவிரவாதம் ப ரவி நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை தான் பதவிக்கு வந்து கொள்ளை அடிக்க வேண்டும் ராகுல்கானுக்கு


J.V. Iyer
நவ 14, 2024 04:49

இதை எதிர்த்து பேசுபவர்களுக்கு கடுமையான சட்டம் கொண்டு வாருங்கள்.


அப்பாவி
நவ 14, 2024 03:48

எவ்ளோ நல்லவரோ.


அப்பாவி
நவ 14, 2024 00:49

எது முடியும் முடியாது என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.


Balakumar V
நவ 13, 2024 23:01

புதைக்கப்பட்டு விட்டது. தெரிவிக்கப் பட்டுவிட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை