உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோசடி வழக்கு; நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக பிடிவாரன்ட்

மோசடி வழக்கு; நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக பிடிவாரன்ட்

லூதியானா: மோசடி வழக்கில் பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக பஞ்சாப் கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. லூதியானாவைச் சேர்ந்த வக்கீல் ராஜேஷ் கண்ணா என்பவர் மோகித் சுக்லா என்பவருக்கு எதிராக ரூ.10 லட்சம் மோசடி வழக்கை தொடர்ந்தார். இதில், முதலீடு செய்ய தூண்டியதாக நடிகர் சோனு சூட் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நடிகர் சோனு சூட்டுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், கோர்ட் உத்தரவை மீறியதாக, நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக லூதியானா மாவட்ட கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. மும்பையின் ஒஷிவாரா போலீஸ் ஸ்டேசனுக்கு இந்த பிடிவாரன்ட் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ