உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு பணத்தை பரிசு பொருட்களுக்காக செலவிடக் கூடாது; நிதியமைச்சகம்

அரசு பணத்தை பரிசு பொருட்களுக்காக செலவிடக் கூடாது; நிதியமைச்சகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தீபாவளி மற்றும் பிற பண்டிகைகளின் போது, பொது நிதியை பரிசு பொருட்களுக்காக செலவிடுவதற்கு மத்திய நிதியமைச்சகம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவினத்துறை வெளியிட்ட சுற்றறிக்கை; நிதிக் கட்டுப்பாடு மற்றும் அத்தியாவசியமில்லா செலவினங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி மற்றும் பிற திருவிழாக்களுக்கான பரிசு உள்ளிட்ட பொருட்களுக்கு அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசின் பிற துறைகளுக்கு எந்தச் செலவும் ஏற்படுத்தப்படக்கூடாது.செலவினத்துறை செயலாளர் ஒப்புதல் அளித்த இந்தக் கட்டுப்பாடு, உடனடியாக அமலுக்கு வருகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
செப் 23, 2025 12:14

எல்லா பிரச்சனையிலும் மூக்கை நுழைக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏன்? மக்கள் வரி பணத்தை உதவி தொகை என்ற பெயரில் லஞ்சமாக கொடுக்கிறார்கள் என்று கேள்வி கேட்கவும் வேண்டும். இதற்கு ஒரு தடை உத்தரவையும், மிக மிக கடுமையான தண்டனையையும் கொடுக்க வேண்டும்.


venugopal s
செப் 23, 2025 11:00

இது என்னவோ மத்திய பாஜக அரசு புதிதாக செய்து விட்டது போல் மெச்சிக் கொள்ள அவசியமில்லை. இது போன்ற சுற்றறிக்கை மத்திய அரசு பல வருடங்களாக அனுப்பிக் கொண்டு தான் உள்ளது! எனக்குத் தெரிந்து பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் இருபது வருடங்களுக்கு முன்பிருந்தே அனுப்புவது வழக்கம்!


Natarajan Ramanathan
செப் 23, 2025 02:35

காங்கிரஸ் காலத்தில் வங்கிகள் நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு என்று கோடிக்கணக்கில் செலவு செய்யும். அந்த அநியாயங்கள் எல்லாம் மோடி பிரதமராக வந்தபிறகு வெகுவாக குறைத்துவிட்டது. ஆனால் இப்போதும் டெல்லியில் இருந்து வரும் நிதி அமைச்சக அதிகாரிகள் சென்னை வங்கிகளின் விருந்தினர் விடுதிகளில் இலவசமாக தங்கும் அநியாயம் மட்டும் தொடர்கிறது.


Ramesh Sargam
செப் 23, 2025 02:29

வரவேற்கப்படவேண்டிய உத்தரவு. இப்படித்தான் அரசு பணத்தை, மக்களின் வரிப்பணத்தை அனாவசியமாக பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.


ManiMurugan Murugan
செப் 22, 2025 23:06

ManiMurugan Murugan அருமை வரவேற்கிறேன் அதே ப் போல் பொங்கல் தொகுப்பு என்று பொது விநியோக க் கடை களில் தரப்படும் பரிசுகளும் அடங்குமா பொங்கல் தொகுப்பு என்று மக்களுக்கு கொடுப்பது போக நிறை யா பொருட்கள் விலைக்கும் அமைச்சர்கள் கணக்கு க்கும் செல்கிறது இவையும் தடுக்க ப் பட வேண்டும்


முக்கிய வீடியோ