உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதரவாக ஜிஎஸ்டி சீர்திருத்தம்: பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதரவாக ஜிஎஸ்டி சீர்திருத்தம்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதரவாக ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மக்களுக்கு மகிழ்ச்சி

டில்லியில் நடந்த தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: உரிய காலத்தில் மாற்றங்கள் செய்யாமல் தற்போதைய சூழ்நிலையில் நமது நாட்டை சரியான இடத்தில் நிலைநிறுத்த முடியாது. ஆகஸ்ட் 15 ல் செங்கோட்டையில் உரையாற்றும் போது இந்தியாவை தன்னிறைவு பெறுவதற்காக, அடுத்த தலைமுறையினருக்கான சீர்திருத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது எனத் தெரிவித்தேன். இந்த தீபாவளி மற்றும் சாத் பண்டிகைக்கு மக்களுக்கு இரட்டிப்பு பரிசு கிடைக்கும் என உறுதியளித்து இருந்தேன்.

தேவையானது

தற்போது ஜிஎஸ்டி இன்னும் எளிதாக மாறி உள்ளது. நவராத்திரியின் முதல்நாளான செப்டம்பர் 22 அன்று அடுத்த தலைமுறையினருக்கான இந்த சீர்திருத்தம் அமல்படுத்தப்படும். இந்த சீர்திருத்தம் சாமானிய மக்களுக்கு உதவும். அனைத்து பொருட்களின் விலையும் குறையும். அடுத்த தலைமுறையினருக்கான சீர்திருத்தம் இது. ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் தேவையானதாக இருந்தது.

முன்னரே விவாதம்

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய சீர்திருத்தம் ஜிஎஸ்டி. நாட்டின் வளர்ச்சிக்கு இது இரு மடங்கு ஊக்கம் அளித்தது. ஒரு புறம் சாமானிய மக்களிடம் பணம் சேமிக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதாரம் அமல்படுத்தப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது, பல ஆண்டு கனவு நனவானது. ஜிஎஸ்டிக்கான விவாதம் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு துவங்கவில்லை. அதற்கு முன்னரே விவாதம் நடந்தது. ஆனால், அதற்கான பணிகளில் யாரும் ஈடுபடவில்லைஜிஎஸ்டி இன்னும் எளிதாகி உள்ளது. தற்போது 5 மற்றும் 18 சதவீதம் என்பது நவராத்திரியின் முதல் நாளன்று அமலாகும். 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதரவாக ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து புதிய ரத்தினங்கள், இந்தியாவின் துடிப்பான பொருளாதாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் பயன்

ஜிஎஸ்டி சீர்திருத்தம் காரணமாக,சாமானிய மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதுடன், நுகர்வு அதிகரித்து நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும். எளிதாக தொழில் செய்வதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இதனால், முதலீடு மற்றும் வேலைவாய்ப்புக்கு ஊக்கம் கிடைக்கும். வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான கூட்டாட்சி ஒத்துழைப்பை இது பலப்படுத்தும். ஏழைகள் நடுத்தர வகுப்பினர், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் அனைவரும் பயன்பெறுவர்.

அதிருப்தி

ஜிஎஸ்டிக்கு முன்பு காங்கிஸ் ஆட்சியில் ஏராளமான வரிகள் இருந்தன. மருந்துக்கும், காப்பீட்டுக்கும் கூட வரி வசூலிக்கப்பட்டது. குழந்தைகள் சாப்பிடும் மிட்டாய்களுக்கும் வரி விதிக்கப்பட்டதுடன், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும் அதிக வரி விதிக்கப்பட்டது. இதனால், ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். நடுத்தர மக்களின் வாழ்க்கையை காங்கிரஸ் அரசு கடினமாக மாற்றியிருந்தது. அதிக வரி வசூலிக்கப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தியில் இருந்தனர்.பாஜ அரசு இளைஞர்களின் நலனை உறுதி செய்துள்ளோம். சிறுகுறு நடுத்தர தொழில் துறையினருக்கான வரி குறைக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு ஆதரவான கொள்கையே எங்களது நோக்கம். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்யும். நாட்டின் தேவை குறித்து ஒவ்வொரு மாணவரும் அடுத்த தலைமுறையினரும் சிந்திக்க வேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Kudandhaiyaar
செப் 04, 2025 21:42

வரி குறைப்பு நல்லது. செப்டம்பர் 22 தேதி முதல் என்பதில் சரியான விளக்கம் தேவை. யாரும் குறைக்க மாட்டார்கள். செப்டம்பர் 22 தேதி முதல் தயாரிக்கும் பொருட்கள் சந்தைக்கு வரும் போது குறைப்போம் என்பார்கள். அந்த நேரம் பொருளின் விலையை ஏற்றி விடுவார்கள். ரசீது கொடுக்கும் போது வரி குறைத்து போட வேண்டும் என்று விளக்கம் கொடுக்கவேண்டும்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 04, 2025 21:33

கம்பி கட்டுற கதையெல்லாம் என்னம்மா சொல்றாங்க பாருங்க


KRISHNAN R
செப் 04, 2025 21:23

நல்லா டீடெயில்ஸ் சொல்கிறார்கள்


ஆரூர் ரங்
செப் 04, 2025 21:10

காங்கிரஸ் ஆட்சியில் 60 ஆண்டுகளாக விதவிதமான 17 வகை வரிகளை கசக்கிப் பிழிந்து வசூலித்த போது மக்களும் வணிகர்களும் மகிழ்ச்சியாகவே இருந்தார்களா?இப்போ ஒரே ஜிஎஸ்டி வரியாக செலுத்தும்போது மட்டும் வருத்தப்படுகின்றனரா?. எல்லா மாநிலங்களும் கூட்டாக எடுத்த GST முடிவை யாரும் சொந்தம் கொண்டாட வேண்டாமே.


Sivakumar
செப் 04, 2025 20:56

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய சீர்திருத்தம்னு இத சொல்லுறீங்க. 18 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் இதே GST ஐ கொண்டுவர முயற்சிக்கும்போது அன்றய குஜராத் முதல்வராக இருந்த நீங்களும் ஜெயாவும் சேர்ந்து கூச்சல்போட்டு வரவிடாமல் செய்தீர்களே?


ஆரூர் ரங்
செப் 04, 2025 21:52

காங்கிரஸ் பசி மூலம் கொண்டு வர முயன்ற சட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கிடையாது. முடிவெடுப்பதில் மாநிலங்களுக்கு பங்கு கிடையாது. இப்போது போல உடனடியாக 50 சதவீதம் மாநிலங்களுக்கு கிடைத்திருக்காது. ஆக மொத்தம் மாநில உரிமைகளுக்கு வேட்டு வைக்கும் சட்டத்தை காங்., கொண்டு வர முயன்றது. அதனால் மோதிஜி எதிர்த்தார்.


Sivakumar
செப் 04, 2025 22:52

முற்றிலும் தவறு அன்பரே. 18-20 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் கொண்டு வந்ததும் இன்று பிஜேபி திருத்தியபின் கொண்டு வந்துள்ளதும் ஒன்றே. மற்றவர்களாவது ஒருமுறை google செய்தாவது பாருங்கள்.


Sivakumar
செப் 04, 2025 23:00

இந்தியநாட்டின்மீது உண்மையான அக்கறை இருந்தால் இதை அன்றே காங்கிரஸ் கொண்டு வந்தபோது எதிர்த்திருக்க மாட்டீர்கள். இப்படியெல்லாம் நீங்கள் எதிர்வரிசையில் இருந்து அரசியல் செய்துவிட்டு இன்று எதிர்வரிசையில் இருப்பவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் என்ன நியாயம் ?


GMM
செப் 04, 2025 20:55

ஜி எஸ்.டி. வரி பகிர்வு மத்திய அரசு , மாநில நிர்வாகம் போல் மாநிலம் + மாவட்டம், மாநிலம்+ உள்ளாட்சி அமைப்புகள் வரி பகிர்வு நிர்ணயிக்க வேண்டாமா? ஏன்? இந்த நிர்ணயம் இல்லாமல் சமமான வளர்ச்சி மாநில அளவில் இருக்காது. GST வரி என்பதை விட கட்டணம் என்று கூறலாம். வரி தன் உழைப்பில் பொது நலம் கருதி அரசுக்கு கட்டுவது. கட்டணம் பிறர் உழைப்பை பயன்படுத்த அரசுக்கு செலுத்துவது என்று கூறலாமா? தொண்டு நிறுவனங்கள், விவசாயம் போன்ற எதற்கும் 100 சதவீத வரி விலக்கு கூடாது. அரசு புள்ளி விவரங்கள் சேகரிக்க குறைந்த பட்சம் வரி வசூலிக்க வேண்டும்.


Mario
செப் 04, 2025 20:04

அப்போ இந்த 10 வருடம் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிராக ஜிஎஸ்டி இருந்ததா?


Vasan
செப் 04, 2025 20:45

True


திகழ்ஓவியன்
செப் 04, 2025 20:03

காங்கிரஸ் கொண்டு வந்த GST என்று இன்று சொல்லும் நீங்கள் 28 % என்று எல்லாம் வரி விதித்து சிறு குறு தொழில் எல்லாம் நசிந்து கடந்த 8 ஆண்டுகால ஒழிந்து போய் விட்டார்கள் அவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் , 8 வ்ருடம் மாதம் 2 லட்சம் கோடி என்று ஏழை நடுத்தர மக்களிடம் சுரண்டி அவர்களை ஓட்டாண்டி ஆக்கிவிட்டு இப்போ வரி குறைத்து என்ன பயன் சொல்லுங்கள் , என் அவ்வவளவு விதித்தீர்கள் விதித்தீர்களே இப்ப என்ன ஜானோதயம் வரி குறைக்க , BEHAAR மேலும் 8 மாநில தேர்தல் வருவதாலா


T.sthivinayagam
செப் 04, 2025 19:57

பெட்ரோல் டீசல் விலையை குறைத்தால் பெரும்பாலான மக்களுக்கு உபயோகமா இருக்கும்


சமீபத்திய செய்தி