உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் பாலம் இடிந்ததில் 10 பேர் பலி: ஆற்றில் விழுந்த லாரி, கார்கள்

குஜராத்தில் பாலம் இடிந்ததில் 10 பேர் பலி: ஆற்றில் விழுந்த லாரி, கார்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆனந்த்: குஜராத்தில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்ததில் 10 பேர் பலியாகி உள்ளனர். பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.இதுபற்றிய விவரம் வருமாறு; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qshjpshh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குஜராத்தில் மாநில நெடுஞ்சாலையில் கம்பீரா என்ற பாலம் பயன்பாட்டில் உள்ளது. மாஹிசாகர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள இந்த பாலத்தின் மீது தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இந்த பாலம் இணைக்கிறது. இந்நிலையில் கம்பீரா பாலம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. பாலத்தின் ஒரு பகுதி அப்படியே ஆற்றில் விழ, அப்போது வந்து கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள் உள்பட 6 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்தன. விபத்தில் முதல்கட்டமாக 3 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தகவலறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., கவுரவ் ஜசானி கூறியதாவது; ஆனந்த், வதோதராவை இணைக்கும் இந்த பாலத்தின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. ஆற்றில் பல வாகனங்கள் விழுந்திருக்கலாம் என்று தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.43 ஆண்டுகள் பழமையான இந்த பாலம், கடந்தாண்டு தான் பழுது பார்க்கப்பட்டது. கண்டெய்னர் லாரி, வேன் என மொத்தம் 6 வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

தாமரை மலர்கிறது
ஜூலை 09, 2025 18:58

லாரி பாலத்தின் சுவர்களை இடித்ததால், பாலம் இடிந்துவிட்டது. அவ்வளவுதான். இந்த சின்ன செய்தியை ஊதிப்பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.


SANKAR
ஜூலை 09, 2025 21:19

news says NOTHING about walls. By the way walls demolished when heavy traffic?!.no warning or stoppage of traffic?!


திகழ்ஓவியன்
ஜூலை 09, 2025 23:36

நான் கூட மனிதர்கள் நடந்து சென்றதால் இடிந்துவிட்டடது என்று எண்ணினேன் , 10 பேர் இறப்பு உனக்கு சாதாரணம் , கோத்ரா கூட்டத்திற்கு இது எல்லாம் ஜுஜுபி தான்


மூர்க்கன்
ஜூலை 10, 2025 11:35

இல்லன்னா ??


மூர்க்கன்
ஜூலை 10, 2025 11:36

உண்மையை சொல்லு நீ திமுக ஸ்லீப்பர் செல்தானே ???


SANKAR
ஜூலை 09, 2025 15:47

1985.so congress built it BJP still using it WITHOUT any maintenance?!


Vijay D Ratnam
ஜூலை 09, 2025 15:35

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமர்சிங் செளத்ரி முதலமைச்சராக இருந்த காலத்தில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பரிதாப சாவு


Annamalai
ஜூலை 09, 2025 15:19

Yean da 43 years palam na udaiyalam athukum current govt kum samatham aa ille tha mathiri pesuringa .. who did the maintenance work for it , when it got assessed .. please talk sensible .. If kamarajar kalathuile Kattuna bridge udajuthu iruntha kooda you guys will say DMK is responsible.


RAAJ68
ஜூலை 09, 2025 14:35

அப்படி என்றால் பராமரிப்பு பணிகள் சரியாக செய்யவில்லை. ஊழல் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.


RAAJ68
ஜூலை 09, 2025 14:33

விடியல் பஸ்களின் பெயர்கள் கழன்று ஓடுகின்றன. பம்பர்கள் ஒருபுறம் தரையை தொட்டுக்கொண்டு செல்கிறது. மழை வந்தால் உள்ளே கொடை பிடிக்க வேண்டும். வாழ்க விடியல் ஆட்சி


விருதுகுமார்
ஜூலை 09, 2025 14:27

யாரங்கே? ஆர்டர் அப் தி ஆப்பீசர் ஆப் தி க்ரேட் ஸ்டேட் ஆப் குஜராத் விருது யாருக்கு எப்போ குடுக்கலாம்?


ஆரூர் ரங்
ஜூலை 09, 2025 14:27

ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் மற்றொரு பால விபத்து. இதுவே கடைசியாக இருக்கட்டும். பாதுகாப்பற்ற பாலங்கள்தான் இருக்கும் என்றால் அப்படிப்பட்ட முதல்வர் தேவையே இல்லை.


மூர்க்கன்
ஜூலை 10, 2025 11:37

ரொம்ப நாளைக்கப்புறம் சரியான கருத்து???


GMM
ஜூலை 09, 2025 14:04

43 ஆண்டுகள் பழைய பாலம். ஆண்டு தோறும் பராமரிப்பு பாலத்தின் வலு தன்மை அறியாது. மண், பில்லர், பாலம் வலு தன்மை சோதித்து, வலுப்படுத்த வேண்டும். சோதனையில் பாலத்தின் வலு தன்மை தெரியும். அதற்கு ஏற்ப அதிக எடை வாகனங்கள் அனுமதிக்க கூடாது. தற்போது தொழில் நுட்பம் அதிகம். தொழில் நுட்ப பரிமாற்றம் செய்ய மாநில நெடுஞ்சாலை நிர்வாகத்திற்கு தேசம் முழுவதும் ஒருங்கிணைப்பு இல்லை. இது அவசியம்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூலை 09, 2025 14:03

அதாவது அங்க ரயில் விமானம் எதுவும் பாதுகாப்பு இல்ல, கேட்டா காங்கிரஸ் பேர் சொல்லிடுவோம் , குஜராத் மாடெல்


புதிய வீடியோ