உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரிப்டோகரன்சி மூலம் கேரளாவில் ரூ.330 கோடி ஹவாலா பரிவர்த்தனை

கிரிப்டோகரன்சி மூலம் கேரளாவில் ரூ.330 கோடி ஹவாலா பரிவர்த்தனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மலப்புரம்: கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த இருவருக்கு சொந்தமான நிறுவனம், தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவிற்கு பூக்களை பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து வருகிறது. சமீபத்தில், இவர்கள் கிரிப்டோகரன்சி மூலம் வருவாய் ஈட்டியதை, வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு கண்டறிந்தது. இது தொடர்பாக கேரளாவின் கொச்சியில் உள்ள புலனாய்வு பிரிவினர், குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களின் வீடுகள், அலுவலகங்கள் அமைந்துள்ள மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், பண பரிவர்த்தனைகளை மறைக்கும் நோக்கில் பல்வேறு நபர்களின் பெயர்களில் பல கிரிப்டோ கணக்குகளை உருவாக்கியது தெரியவந்தது. இதில், ஒரு நபர் கேரளாவின் மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டை மையமாக வைத்தும், மற்றொரு நபர் மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் இருந்தபடியும், கிரிப்டோ கணக்குகளை கையாண்டதை வருமான வரித்துறையினர் கண்டறிந்தனர். இவர்கள், கிரிப்டோகரன்சி மூலம் மட்டும், 330 கோடி ரூபாய் வரை ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதை வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்தனர். எனினும், முழு பரிவர்த்தனை தொடர்பான விபரங்கள், ஆய்வுக்குப்பின் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sudha
நவ 02, 2025 12:55

வருமான வரித்துறை அவ்வப்போது பணி புரிய யார் அனுமதித்தது? முதலில் அவர்களை கவனிக்க வேண்டும், 2ஜி ஊழலில் எவ்வளவு நஷ்டம் என்று உளறியது போல, இந்த துறையின் செயலபாடின்மையால் எவ்வளவு இழப்பு என்று பார்க்க வேண்டும். இத்துறை ஆராயப்பட வேண்டிய ஒன்று


Rathna
நவ 02, 2025 11:47

மர்ம நபர்களின் ஆட்டம் சொல்லி மாளாது.


Kulandai kannan
நவ 02, 2025 10:36

தமிழகத்திலும் பல காற்று வாங்கும் கடைகளில் ஹவாலா படுஜோர். நேர்மைக்கும் அவர்களுக்கும் காத தூரம்


Kasimani Baskaran
நவ 02, 2025 07:10

கள்ளத்தனம் செய்ய அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியது கிடையாது.


வாய்மையே வெல்லும்
நவ 02, 2025 06:29

என்னது குல்லா வைத்த சேட்டனுக்கு குங்குமம் அடிச்சு மந்திரிச்சு விட்டீர்களா கோபால் ? ரணகளம் தான் போங்க . ஹாஹாஹா அப்படியே பிரசுரிக்கவும்


சமீபத்திய செய்தி