உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயர் நீதிமன்ற தீர்ப்புகள்

உயர் நீதிமன்ற தீர்ப்புகள்

 ராமேஸ்வரம் கபே ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் தமிழகத்தை தொடர்புபடுத்தி பேசியதாக, மத்திய தொழிலாளர் நல இணை அமைச்சர் ஷோபா மீது பதிவான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளால், வாக்காளர்களை ஏமாற்றவில்லை என்று கூறி, வீட்டுவசதி அமைச்சர் ஜமின் அகமதுகானுக்கு எதிரான தேர்தல் தகராறு மனு தள்ளுபடி. திருமண அழைப்பிதழில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக ஓட்டு கேட்டதாக, சிவபிரசாத், 29 என்பவர் மீதான வழக்கு தள்ளுபடி. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை தரக்குறைவாக பேசியதாக, பா.ஜ., - -எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் மீதான வழக்கு ரத்து. ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி மீதான வழக்கு ரத்து. ஹாவேரி விவசாயி தற்கொலை குறித்து தவறான தகவல் பரப்பியதாக, பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா மீதான வழக்கு ரத்து. விசாரணை அமைப்புகள் மூலம் பன்னாட்டு நிறுவனங்களை மிரட்டி, தேர்தல் பத்திர நிதியாக 8,000 கோடி ரூபாய் பறித்ததாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ., தலைவர் நட்டா உட்பட 4 பேர் மீது பதிவான வழக்கு ரத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ