உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது: பிரதமர் மோடி

அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி, அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது என்றும் கூறினார்.இடைக்கால பட்ஜெட் நாளை (பிப்.,1) தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்காக இந்தாண்டின் முதல் பார்லி., கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. முன்னதாக பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=98l3z6lz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மூலம் மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழா அணிவகுப்பில் பெண் சக்திகளின் வலிமை பறைசாற்றப்பட்டது. அதேபோல், இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையும், நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் தாக்கலும் உள்ளது.பார்லி., விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம். இடையூறு செய்யும் வகையில் இருக்கக்கூடாது. பார்லி.,யில் அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது. கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று வந்த பின் பா.ஜ., அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

ராம்.. ராம்..

இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பேட்டியின் முடிவில், பிரதமர் மோடி, 'ராம்.. ராம்..' எனக் கூறி பேட்டியை முடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

K.Ramakrishnan
ஜன 31, 2024 21:51

ஆமாம்.. மன்மோகன்சிங் பத்தாண்டு ஆட்சியில் நீங்கள் படுத்தாதா பாடா.. பார்லிமென்டை எத்தனை நாள் முடக்கினீர்கள்? அதை மக்கள் நினைவில் வைக்காததால் தான் உங்க வண்டி ஓடுது சாரே.... கம்யூனிஸ்டுகள் 45பேர் இருந்து கொண்டு மன்மோகனை படாதபாடு படுத்தினர். இப்போது என்ன ஆச்சு? மே.வங்கத்தில் பூஜ்யம்.கேரளாவில் ஒற்றைக்கு ஒரு ஆள் கடந்த முறை வென்றனர். இந்த முறை அதுவும் நடக்காது. மே.வங்க மக்கள் போல இந்தியா முழுவதும் இருந்தால், பா.ஜனதா ஆட்சிக்கே வந்திருக்க முடியாது.


A1Suresh
ஜன 31, 2024 15:12

நாற்பத்தேழு வரை பாஜக அரசு தான் . வாழ்க பாரதம் .ஜெய் ஸ்ரீராம்


MANIMARAN R
ஜன 31, 2024 14:32

ஆமாம் என்ன விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும். நீங்கள் செய்த கூத்தை விடவா இப்போது நடக்கிறது.


Sridhar
ஜன 31, 2024 13:26

உண்மையில் அவ்வாறு அமளியில் ஈடுபடுபவர்களை மக்கள் நினைவு வைத்துக்கொண்டு இன்றுபோல் என்றென்றும் புறக்கணிக்கவேண்டும். திருட்டு கும்பல் செய்த ஊழல்களையம் நில அபகரிப்புகளையும் மக்கள் மறந்ததனால்தான் மீண்டும் ஆட்சியை பிடித்தனர். இனிவரும்காலங்களில் இந்த தேசத்துரோக கும்பல் செய்த செயல்களை மக்கள் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ கூடாது.


sundar
ஜன 31, 2024 12:16

பி ஜே பியின் கடைசி பட்ஜெட் இதுவாகத்தான் இருக்கும்


அப்புசாமி
ஜன 31, 2024 11:54

இவிங்க எதிர்க்கட்சியா இருந்த போது நடத்தாத அமளியா?


தமிழ்
ஜன 31, 2024 11:52

அதேபோல் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கூட்டத்தொடர் முழுவதையுமே அமளி செய்து பிஜேபி முடக்கியதும் எப்போதும் மறக்காது.


Narayanan Muthu
ஜன 31, 2024 11:09

உலக சரித்திரத்தில் அழிக்கமுடியாது.


Shankar
ஜன 31, 2024 11:05

எல்லாம் வருகிற நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் தான் இந்த அமளி துமளி எல்லாம் மோடிஜி. தேர்தலுக்கு பிறகு நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகளின் யாருமே இருக்க மாட்டார்கள்.


குமரி குருவி
ஜன 31, 2024 11:05

வில்லன்கள் போல் எதிர்க்கட்சிகள் அமளி பண்ணலாம் ஆனால் ரசிகர்கள் வில்லன்களை திட்டுவது தான் வழக்கம் பழக்கம் ஆக காங்கிரஸ் வில்லன் ரகம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை