உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் ரயில் ஜூன் 29 வரை நீட்டிப்பு

ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் ரயில் ஜூன் 29 வரை நீட்டிப்பு

பெங்களூரு: 'பொது மக்கள் வசதிக்காக, ஹூப்பள்ளியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்பட்ட வாராந்திர ரயில் போக்குவரத்து, 2025 ஜூன் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் மண்டபம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:பொது மக்கள் வசதிக்காக, ஹூப்பள்ளி ஸ்ரீசித்தார்த் சுவாமிகள் ரயில் நிலையத்தில் இருந்து தமிழகம் ராமேஸ்வரத்துக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது, பாம்பன் பாலத்தில் பணிகள் நிறைவு பெறாததால், ரயில்கள் மண்டபத்தில் நிறுத்தப்படுகின்றன. ரயில் எண் 07355: ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில், 2025 ஜன., 4ம் தேதி முதல் சனிக்கிழமை தோறும் ஹூப்பள்ளியில் இருந்து காலை 6:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:25 மணிக்கு மண்டபம் சென்றடையும். இந்த ரயில் போக்குவரத்து, ஜூன் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.மறுமார்க்கத்தில் எண் 07356: ராமேஸ்வரம் - ஹூப்பள்ளி சிறப்பு ரயில், 2025 ஜன., 5ம் தேதி முதல் ஞாயிற்றுகிழமை தோறும், மண்டபத்தில் இருந்து இரவு 9:55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7:40 மணிக்கு ஹூப்பள்ளி வந்தடையும்.இந்த ரயில் போக்குவரத்து, ஜூன் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிவகங்கை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.ரயில் எண்: 06519: எஸ்.எம்.வி.டி., - கலபுரகி சிறப்பு ரயில், இன்றும், நாளையும் எஸ்.எம்.வி.டி.,யில் இருந்து இரவு 9:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:40 மணிக்கு கலபுரகி சென்றடையும்.மறுமார்க்கத்தில், எண் 06520: கலபுரகி - பெங்களூரு எஸ்.எம்.வி.டி., சிறப்பு ரயில், டிச., 28, 29 ம் தேதிகளில் கலபுரகியில் இருந்து காலை 9:35 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 8:00 மணிக்கு பெங்களூரு எஸ்.எம்.வி.டி.,யை வந்தடையும்.இவ்விரு ரயில்களும், எலஹங்கா, தர்மாவரம், அனந்தபூர், குண்டக்கல், அத்தானி, மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர், கிருஷ்ணா, யாத்கிர், சஹாபாத் வழியாக இயங்கும்.எண் 07153: ஆந்திர மாநிலம், நரசாபூர் - பெங்களூரு எஸ்.எம்.வி.டி., வாராந்திர சிறப்பு ரயில், 2025 ஜன., 3ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரையும்; மறு மார்க்கத்தில், எண் 07154: பெங்களூரு எஸ்.எம்.வி.டி., - நரசாபூர் வாராந்திர சிறப்பு ரயில், 2025 ஜன., 4ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரையும் இயக்கப்படும்.இவ்வாறு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை