உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவியை ஆபாசமாக சித்தரித்த கடன் நிறுவனம்; கணவர் தற்கொலை

மனைவியை ஆபாசமாக சித்தரித்த கடன் நிறுவனம்; கணவர் தற்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விசாகப்பட்டினம் : ஆந்திராவில் 2,000 ரூபாய் கடனை திருப்பிக் கொடுக்காததை அடுத்து, மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து கடன் வழங்கும் நிறுவனம் வெளியிட்டதால், அவமானம் தாங்காமல் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நரேந்திரா, 25. மீனவரான இவர், அகிலா என்ற பெண்ணை காதலித்து கடந்த அக்டோபர் 28ல் திருமணம் செய்தார். மோசமான வானிலை காரணமாக மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாததால், நரேந்திராவுக்கு வருமானம் தடைபட்டது. இதனால், பண நெருக்கடியில் சிக்கித் தவித்த அவர், கடன் செயலி ஒன்றில் தன் அவசர தேவைக்காக 2,000 ரூபாய் கடன் பெற்றார். அதை உரிய நேரத்தில் திருப்பி அளிக்க முடியவில்லை.இதனால், கடன் அளித்த நிறுவனத்தின் ஏஜன்டுகள் மொபைல் போனில் அழைத்தும், குறுஞ்செய்திகள் அனுப்பியும் அழுத்தம் கொடுத்தனர். இதற்கிடையே, நரேந்திராவின் மனைவி அகிலாவின் மொபைல் போன் எண்ணிற்கு, அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, கடன் கொடுத்த நிறுவனம் அனுப்பி உள்ளது.இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தன் கணவரிடம் அதை காட்டியுள்ளார். அப்போதுதான், கடன் செயலியில் 2,000 ரூபாய் வாங்கியதை தன் மனைவியிடம் கூறியுள்ளார்.அதற்குள், அந்த ஆபாச புகைப்படங்களை நரேந்திராவின் உறவினர்கள், நண்பர்களுக்கு கடன் செயலி நிறுவன ஏஜன்டுகள் அனுப்பியுள்ளனர். இதனால், மன வேதனை அடைந்த நரேந்திரா நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.ஆந்திராவில் கடன் செயலி நிறுவனங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று பேர் தற்கொலை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

தமிழ்வேள்
டிச 12, 2024 20:40

அந்த லோன் கம்பெனி எவனாவது ஆளும் கட்சி அரசியல் வாதியுடையதாக இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.. அரசியல் வாதிகள் பணம் இப்படி தான் அநியாய வட்டி தண்டல் மூலம் பெருகுகிறது.. ஆகவே மேல் நடவடிக்கை எதுவும் இருக்காது...


Madras Madra
டிச 12, 2024 11:47

கடன் செயலிகள் பற்றி எச்சரிக்கைகள் வந்து கொண்டு தானிருக்கிறது என்ன செய்வது ஜனநாயக நாட்டில் எல்லாருக்கும் எல்லா உரிமையும் இருக்கு சட்டப்படி குற்றம் என்றாலும் சட்டப்படி எந்த தண்டனையும் நாட்டில் யாருக்கும் வழங்கப் படுவதில்லை நீதி மன்றம் மீது நம்பிக்கை குறைவானதே இப்படிப்பட்ட தற்கொலைகளுக்கு காரணம்


Sampath Kumar
டிச 12, 2024 08:47

நிதி நிறுவங்களின் செயல்பாடுகள் கவனிப்பார் அற்று கால்போன போக்கில் போய்க்கொண்டு உள்ளது கட்டுப்பாடு என்ற பேரில் சில திட்டத்தை அரசு கொண்டு வந்தாலும் அதுக்கு உள்ளூர் அரசியல் வியாதிகள் உடன் படுவது இல்லை நிதி நிறுவனம் நடத்தும் 90 சதா விகிதம் பேரு அரசியல் வியதிலகே இந்த பீடைகளை அளித்தால்தான் நாட்டுக்கு நல்லது இல்லாவிட்டால் இப்படித்தான் நடக்கும்


RAMAKRISHNAN NATESAN
டிச 12, 2024 09:57

திக்கித் திணறி தம் கட்டி மூணு வரி கருத்து எழுத்திட்ட... ஆனா இந்த ஒரு கருத்துல மோடியை இழுக்கலியே... மறந்துட்டியா சம்பத்து ..... உனக்கு இன்னக்கி கோலு மாலு புர அன்பளிப்பு பிரியாணி கட் ...


Barakat Ali
டிச 12, 2024 08:36

புகைப்படம் பெறக்கூடிய அளவுக்கு மொபைல் என்றால் ஸ்மார்ட் மொபைல் ஆக இருக்கலாம் .... அப்படியிருக்கையில் இரண்டாயிரம் ரூபாயைத் திருப்பிக்கொடுக்க என்ன பிரச்னை ????


RAMAKRISHNAN NATESAN
டிச 12, 2024 10:01

இதுவரை யாருக்கும் இங்கே வராத டவுட்... திராவிட மாடலுக்கு அடிமையா நீங்க வாழ விரும்பாததால் சிந்திச்சிருக்கீங்க .....


Barakat Ali
டிச 12, 2024 08:34

வெறும் இரண்டாயிரத்துக்கா ???? நம்ப முடியவில்லை ....


RAMAKRISHNAN NATESAN
டிச 12, 2024 10:04

Visakhapatnam man ends life due to harassment over Rs 2000 loan by loan app utives என்கிறது இந்தியன் எஸ்பிரஸ்.. இரண்டாயிரம்தான் ....


அப்பாஜி
டிச 12, 2024 07:54

ஒன்றிய அரசு பெண்களுக்கு சூப்பர் பாதுகாப்பு குடுக்குது ஹைன்.


Mohan
டிச 12, 2024 09:37

...ன்னாலும் அதுக்கும் மத்திய அரசுதான் காரணம் அப்படிதானே


RAMAKRISHNAN NATESAN
டிச 12, 2024 10:00

ஊட்டுல வாரிசு உருவானாலும் ஒன்றிய அரசு மொத்தமும் சேர்ந்து செய்த சதி ஹை ன்னுவானுங்க ....


hari
டிச 12, 2024 10:43

இவன்தான் பல பெயரில் வரும் அப்பாவி, அப்புசாமி,.. எல்லாத்துக்கும் கிண்டல்.. கேடுகெட்டவன்.......வளர்ப்பு அப்படி ஹை


Sudha
டிச 12, 2024 07:19

இந்தியா எனும் ஏமாளி அரசு எனும் கோமாளி


நிக்கோல்தாம்சன்
டிச 12, 2024 06:20

அந்த ஏஜெண்டுகள் இன்னமும் உயிரோடு இருக்க என்ன தகுதி இருக்கு ? மீனவர்கள் அவர்களை இழுத்து கடலில் உயிரோடு தள்ளி தள்ளி விளையாடலாம் , அங்கே இருக்கும் உயிரினங்களை அவர்கள் உடை இல்லாமல் கண்டு களைக்கட்டும்


Senthoora
டிச 12, 2024 05:56

மூணாவது நபரும் சாகும்வரை அந்த நிறுவனத்தின்மேல் Action எடுக்கவில்லையா?


Kasimani Baskaran
டிச 12, 2024 05:52

கடன் கொடுத்து காலி செய்வது என்பது இதுதான்.


சமீபத்திய செய்தி