உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!

கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா கோழிக்கோடு விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.இதுபற்றிய விவரம் வருமாறு; கோழிக்கோடு விமான நிலையத்தில் வழக்கம் போல் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரிகில்(35), ரோஷன் பாபு(33) என்ற இருவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை கூட்டவே அவர்களிடம் விசாரணை நடத்தினர். விமான நிலையத்தை சுற்றி பார்க்கவும், போட்டோ எடுத்துக் கொள்ளவும் வந்திருப்பதாக இருவரும் கூறினர்.அவர்களின் பதிலால் திருப்தி அடையாத விமான நிலைய போலீசார் கண்காணிக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் இருவரையும் தீவிர விசாரணை வளையத்தில் கொண்டு சென்றனர். அப்போது இருவரும் அளித்த தகவல்கள் அவர்களை திடுக்கிட வைத்தது. அபுதாபியில் இருந்து வரவுள்ள விமானம் ஒன்றில் 18 கிலோ எடையில் உயர்ரக கஞ்சா (இதன் மதிப்பு ரூ.9 கோடி) கடத்தி வரப்படுவதாகவும், அதை பெற்றுக் கொள்ளவே இருவரும் வந்திருப்பதாகவும் கூறி இருக்கின்றனர். அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற போலீசார் துரிதமாக செயல்பட ஆரம்பித்தனர்.கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான ரோஷன் பாபுவின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் அபுதாபியில் இருந்து வரும் பயணி ஒருவர் 14 பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட உயர் ரக கஞ்சாவை கடத்தி வருவதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, குருவியாக செயல்பட்ட அந்த பயணியை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி ப்ரிபெய்டு டாக்சி மூலம் தப்பிச் சென்றுவிட்டார். வழியில் டிரைவரிடம் புகைபிடிக்க வேண்டும் என்று கூறி வழியில் வண்டியை நிறுத்தி உள்ளார்.பின்னர், அவர் வைத்திருந்த பைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பித்துச் சென்றிருக்கிறார். தகவலறிந்த போலீசார் பைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கஞ்சா பாக்கெட்டுகளை கைப்பற்றினர். தப்பியவரை பிடிக்க ஏதுவாக, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

panneer selvam
மே 13, 2025 16:58

Bit hard to believe . Abu Dhabi is very strict in security . Even transit passengers and their luggage will undergo touch security check . Every passenger gets in and out of India are well documented . So tracing out is much simpler . Please clarification as non traceable is hard to believe .


என்றும் இந்தியன்
மே 13, 2025 16:39

போலீஸ் ஆளை தப்பிவிட்டது ஏன்???ரூ 9 கோடி கஞ்சா???இதை விற்பனை செய்து அந்த பணத்தை பங்கு போட்டுக்கொள்ளத்தான் என்று முடியுமா இந்த கணக்கு???அபுதாபியிலிருந்து 14 பாக்கெட்டுகளில் 18 கிலோ உயர் ரக கஞ்சா கடத்தல்??? அப்போ அபுதாபியில் இதெல்லாம் சகஜமா என்ன???


Arul. K
மே 13, 2025 15:14

இது நம்பும்படியாக இல்லை. விமானம் இறங்குவதற்குள்தான் தகவல் கிடைத்துவிட்டதே . அதுவும் கஞ்சா கொண்டுவருவதாக. அப்புறம் எப்படி தப்பிக்க முடியும். பொருளை பெற காத்திருந்தவரிடம் கண்டிப்பாக குருவியாக வந்தவரின் புகைப்படம் மற்றும் கடவு சீட்டின் புகைப்படம் இருந்திருக்கும். இந்த தகவல் குடிபுகல் அலுவலர்களிடம் கொடுத்திருந்தால் அவர்களே பிடித்துக்கொடுத்திருப்பார்கள்


V Venkatachalam
மே 13, 2025 14:37

கேரளா ஏர் போராட்.. எப்பவுமே கடத்தல் காரர்களின் லோக்கல் வழித் தடம். இது மோடி கவர்ன்மென்ட் என்பதால் பிடித்து இருக்கலாம்.


amuthan
மே 13, 2025 21:37

தற்போது அது அதானி கட்டுப்பாட்டில் உள்ளது


m.arunachalam
மே 13, 2025 14:28

பணப்புழக்கம் அதிகமானால் குடும்பம் சீரழியும் ஏதோ ஒரு விதத்தில் . அதை பூர்த்தி செய்ய இதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றது .


முக்கிய வீடியோ