உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அங்கன்வாடியில் பிரியாணி வேணும்: சிறுவன் ஆசைக்கு செவிசாய்த்த அமைச்சர்

அங்கன்வாடியில் பிரியாணி வேணும்: சிறுவன் ஆசைக்கு செவிசாய்த்த அமைச்சர்

திருவனந்தபுரம்: 'வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்' என்பதை கண் எதிரே நிகழ்த்திக் காட்டி உள்ளான், கேரளாவைச் சேர்ந்த ஷங்கு என்ற சிறுவன்.திருவனந்தபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் படிக்கும் இந்த சிறுவன் பேசிய, 'வீடியோ' ஒன்றை அவனது தாயார் சமூக வலைதளத்தில் சமீபத்தில் வெளியிட்டார். அதில், 'அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதில் பிரியாணியும், வறுத்த கோழியும் தர வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளான்.பிரியாணி என்பதை உச்சரிக்க தெரியாமல், 'பிர்ணானி' என உச்சரித்துள்ள அந்த சிறுவனின் வெள்ளந்தியான பேச்சு, பார்ப்போரை நெகிழ்ச்சிஅடைய செய்துள்ளது. சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும்படி, சமூக வலைதள பயனர்கள் பலர் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.சிறுவனின் வீடியோ, மாநில சுகாதார துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பார்வைக்கு சென்றது. அந்த வீடியோவை வெகுவாக ரசித்த அமைச்சர் கூறுகையில், “குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்க வேண்டும் என்பதே அங்கன்வாடியில் உணவு வழங்குவதன் நோக்கம்.''ஷங்குவின் கோரிக்கையை ஏற்று, அங்கன்வாடி உணவு பட்டியலை மறு ஆய்வு செய்து, அதில் பிரியாணியை சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என, உறுதிஅளித்துள்ளார். ஷங்குவின் வீடியோ வெளியானதில் இருந்து, சிறுவனை பிரியாணி விருந்துக்கு அழைத்து வரும்படி கேரளாவில் அழைப்புகள் குவிவதாக அவனது தாயார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Tetra
பிப் 05, 2025 15:47

என்ன ப்ர்யாணி என்று சிறுவன் சொன்னானா? மட்டன், பீஃப் இல்ல சிக்கன் ப்ர்யாணியா?


subramanian
பிப் 05, 2025 09:59

இலவசம் நாட்டை அழிக்கும். ஒருவனுக்கு பணம் கொடுப்பதைவிட, பணம் சம்பாதிக்க கற்றுக் கொடுப்பது சரியாக இருக்கும்.


J.V. Iyer
பிப் 05, 2025 05:15

அதானே பார்த்தேன் சிறுவன் நெற்றியில் திருநீறு, குங்குமம். இப்படி பள்ளிக்கு போகமுடியுமா இந்த பயங்கரவாதிகள் மாடல் அரசில்? இது இருளகத்தில் நடக்குமா? என்ன இருந்தாலும் கேரளா, கேரளாதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை