உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்துக்கு பின் விலையை குறைக்காமல் பொருட்களின் அளவை அதிகரிப்பது மோசடி: ஐகோர்ட்

ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்துக்கு பின் விலையை குறைக்காமல் பொருட்களின் அளவை அதிகரிப்பது மோசடி: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஜி.எஸ்.டி., குறைப்புக்குப் பின், பொருட்களின் விலையை குறைக்காமல், அளவை அதிகரித்து விற்பனை செய்வது மோசடி செயல்' என, டில்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாடு முழுதும் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரி குறைக்கப்பட்டு, கடந்த மாதம் 22ம் தேதி அமலுக்கு வந்தது. லாப தொகை நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., தற்போது 5 மற்றும் 18 சதவீத அடுக்குகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், மளிகை உட்பட பெரும்பாலான பொருட்கள் விலை குறைந்துள்ளன. முன்னதாக 2017ல் 28 சதவீத ஜி.எஸ்.டி.,யில் இருந்த பொருட்கள், 18 சதவீத வரிக்கு மாற்றப்பட்டன. அப்போது, 'ஹிந்துஸ்தான் யூனிலீவர்' நிறுவனம் விலையை குறைக்காமல், பொருளின் அளவை உயர்த்தி, எம்.ஆர்.பி., எனப்படும் அதிகபட்ச சில்லரை விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் விற்பனை செய்தது. வணிக நிறுவனங்களின் விலையை கட்டுப்படுத்தும் என்.ஏ.பி.ஏ., எனப்படும் லாபநோக்கமற்ற ஆணையத்திடம் இந்த மோசடி குறித்து முறையிடப்பட்டது. இது குறித்து விசாரித்த அந்த ஆணையம், 2018ல், வரி குறைப்பின் பலன் நுகர்வோருக்கு சேர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும், எம்.ஆர்.பி., விலையை குறைக்காமல் விற்ற லாபத் தொகையை நுகர்வோர் நல நிதியில் சேர் க்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதிகள் பிரதீபா எம்.சிங் மற்றும் ஷெயில் ஜெயின் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஜி.எஸ்.டி., விகிதங்கள் குறைக்கப்பட்ட பிறகும், அதே எம்.ஆர்.பி., விலைக்காக, பொருட்களின் அளவை லேசாக அதிகரித்து விற்பது, மோசடியானது. எம்.ஆர்.பி., விலை ஜி.எஸ்.டி., குறைப்பின் பலன்கள் நுகர்வோரை சென்றடைய வேண்டும். வரி குறைப்புக்குப் பின் விலையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு சில காலம் பிடிக்கும். அதே நேரம் ஜி.எஸ்.டி., கு றைப்புக்கான அர்த்தம் பாழாகி விடக்கூடாது. ஆனால், உற்பத்தியாளர்களும், சில்லரை வர்த்தகர்களும் நுகர்வோருக்கு பலன் சென்றடையாத வகையில், சாமர்த்தியமாக வியா பாரம் செய்கின்றனர். வரி குறைப்பு உடனடியாக அமலுக்கு வரும்போது, எம்.ஆர்.பி., விலை அப்படியே தான் இருக்கும். ஆனால், வரி குறைந்திருக்கும். எ னவே, அந்த பொருளின் எம்.ஆர்.பி., விலை யை குறைத்து விற்பது தான் சரியாக இருக்கும். அதற்கு மாறாக, நுகர்வோருக்கு தெரியாமல் பொருளின் அளவை ரகசியமாக அதிகரித்து, எம்.ஆர்.பி., விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் விற்பது மோசடியான செயல். இது நுகர்வோரின் தேர்வு உரிமையையும் பறிக்கும் செயல். எனவே, ஜி.எஸ்.டி., குறைப்புக்கு ஏற்றபடி எம்.ஆர்.பி., விலையை குறைக்காவிட்டால், அந்நிறுவனத்தின் உரிமத்தை பறிக்கலாம். வரிக்கு ஏற்ப விலையை குறைக்க சொல்லும் அதிகாரம், சம்பந்தப்பட்ட ஆணையத்திற்கு இருக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Kannan
அக் 08, 2025 11:41

வியாபாரிகள் அதிகம். MRP ₹ 2000 போடுவானுங்க... But, ₹ 600 விற்பனை கொடுப்பாங்க. பலர், 2000₹ டிஸ்கோவுண்ட் போக 1200₹ ன்னு ஏமாற்றி விற்பனை செய்கிறார்கள். லஞ்ச அரசும் கண்டுக்கவில்லை.


Kannan
அக் 08, 2025 11:33

டீக்காரன் &கோ கற்றுக்கொடுத்த பிராடு தனம்.


Bharathi Raja
அக் 07, 2025 12:06

இது போல கச்சா எண்ணெய் விலை குறையும் பொழுது அரசு அந்த பயனை மக்களுக்கு சென்றடையாமல் வரியை உயர்த்தி பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் விட்டதே அதற்கு என்ன பண்ணுவது...


Radhakrishnan Meiyappan
அக் 07, 2025 13:02

Ask State government and ask them to include in GST.


rajesh
அக் 07, 2025 07:10

1 கிலோ 1/2 கிலோ 1/4 கிலோ 100 மற்றும் 50 கிராம் என்று விற்பனை செய்யப்பட்ட அனைத்தும் விற்பனையாளர்கள் அவர்கள் விருப்பத்திற்கு 45 கிராம் 92 கிராம் என்று விற்பனை செய்தனர் இதை அரசு கண்டு கொள்ளவில்லை அதன் விளைவை தற்போது அரசியல்வாதிகள் அனுபவிக்கின்றனர்.


Ram pollachi
அக் 06, 2025 15:00

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தவிர்க்க முடியாத பொருள்களுக்கு கூட தொலைகாட்சி, வானொலி, துண்டு பிரசுரங்கள் என ஏகப்பட்ட விளம்பரங்கள் தருகிறார்கள். ஒருநிமிடம் வந்து செல்லும் பிரபலமான நபர் மற்றும் விளம்பர நிறுவனங்களுக்கு பல கோடிகளை வணிக நிறுவனங்கள் தருகிறார்கள் அதை செலவினங்களாக வருமான வரி துறையும் ஏற்றுக் கொள்கிறது ... அதை முதலில் ஏற்றுக் கொள்ளாமல் விட்டு விட்டாலே பொருட்கள் விலை இறங்கி விடும்.... வரி குறைப்பதால் பொருட்கள் விலை மீண்டும் ஏறும் என்பதில் சந்தேகமே இல்லை.


அப்பாவி
அக் 06, 2025 13:34

ஏமாத்தறதுக்கு ஏற்ற நாடு இந்தியா.. ஏமாறுகிறவர்கள் நிறைந்த நாடு இந்தியா. எல்லாம் அவனவன் சாமர்த்தியம்.


ஆரூர் ரங்
அக் 06, 2025 11:15

வரி குறைப்பு அடிப்படையில் ஒரு பொருளை 4 ரூ 65 பைசா MRP போட்டு விற்பது சாத்தியமா? ஒரு ரூபாய்க்கு குறைந்த சில்லறை காசு கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக 35 பைசா பெறுமான பொருளை கூடுதலாக அளிப்பது எளிது. கொஞ்சம் பிராக்டிக்கலாவும் சிந்திக்க வேண்டும்.


VENKATASUBRAMANIAN
அக் 06, 2025 08:31

எடையை குறைத்து ஏமாற்றுவார்கள். ஆனால் அரசு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள். ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இதை உடனே சரி செய்ய வேண்டும். ஊழல் அதிகாரிகளுக்கு தண்டனை வேண்டும். வியாபாரிகள் எப்போதுமே ஏமாற்றுவதில் வல்லவர்கள். எல்லா பொருட்களிலும் ஜிஎஸ்டி குறைப்பிற்கு முன் பின் என்று இரண்டு விலைகளை களையும் போய் வேண்டும் அப்போதுதான் மக்களுக்கு புரியும். எடையில் மாற்றம் கூடாது. இதை அரசு கவனிக்க வேண்டும்


vbs manian
அக் 06, 2025 08:05

பெரும்பாலான கடைகளில் மால்களில் பொருட்கள் பழைய விலையில்தான் விற்பனை. யாரும் கண்டு கொள்வதில்லை. கார்களின் விலைகுறைப்பு சாமானியனுக்கு எந்தவிதத்தில் பலன்.


visu
அக் 06, 2025 06:32

fortune சூரியகாந்தி எண்ணெய் 950 கிராம் 145 ரூபாய் இன்று Gst க்கு பின் 870 கிராம் 132 ரூபாய் Modern பிரட் புதுச்சேரி தயாரிப்பு Gstக்கு முன் 145 ரூபாய் இன்றும் அதே விலை 145 ரூபாய் இதுதான் தயாரிப்பாளர்களின் பித்தலாட்டம்


Saravanan
அக் 07, 2025 10:30

பிரட், பால் போன்றவற்றுக்கு வரியே இல்லை பிறகு எப்படி விலை குறையும். கருத்து சொல்வதற்கு முன் யோசித்து எழுதவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை