உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு தொடரும் பதிலடி; செனாப் நதி நீர் மின் திட்டத்துக்கு டெண்டர் கோரியது இந்தியா!

பாகிஸ்தானுக்கு தொடரும் பதிலடி; செனாப் நதி நீர் மின் திட்டத்துக்கு டெண்டர் கோரியது இந்தியா!

புதுடில்லி: செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காக ரூ. 5129 கோடியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பதிலடி தரும் வகையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. மேலும் ராம்பன் மாவட்டத்தில் செனாப் நதி நீரை பயன்படுத்தி பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைத்து, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தையும் மத்திய அரசு வேகப்படுத்தி உள்ளது. சாவல்கோட் நீர்மின் திட்டம் எனப்படும் திட்டத்திற்காக மட்டும் ரூ.5129 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மின் திட்டத்தின் மூலம் 1856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். திட்டம் தொடங்கும் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோருதல் மார்ச் 12ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 20ம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான காலக்கெடு முடிகிறது. தேசிய நீர்மின் கழகம் (National Hydro electric Power Corporation NHPC) இதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டு இருக்கிறது. மத்திய அரசானது 3285 நாட்களுக்குள் நீர் மின்திட்டத்தை அமைக்க வேண்டும் என்று உத்தேசித்துள்ளது.இந்த திட்டம் நிறைவு பெற்றால், ஜம்மு காஷ்மீரின் மின் உற்பத்தி திறனானது கணிசமாக அதிகரிக்கும். பாகிஸ்தானுக்கு சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் கிடைக்கிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், இந்தியாவுக்கு நீர் மின் சக்தியும், கூடுதல் தண்ணீரும் கிடைக்கும்; பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய தண்ணீரின் அளவு கணிசமாக குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rajan
பிப் 09, 2026 18:39

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் சம்பா என்ற ஊரிலிருந்து இமயமலை ஆரம்பமாகி லே & லடாக் வடக்கே சீனா எல்லை மேற்கே பாகிஸ்தான் எல்லை . உதம்பூரிலிருந்து ஸ்ரீநகர் செல்லும் வழியில் தான் ராம்பன் உள்ளது . ராம்பன் பகுதியை பார்த்தால் அங்கு செனாப் நதி நீர் மின் நிலையம் கட்டுவதற்கு அரசாங்கம் சொல்கின்ற மாதிரி வருடங்கள் ஆகலாம் . நான் அந்த பகுதி வழியாக பல ஸ்ரீநகர் சென்று வந்துள்ளேன் . மத்திய அரசு நல்லது தான் செய்கிறது . இந்த நதி நீர் ராஜஸ்தான் வரை கொண்டு செல்ல வேண்டும் . ராஜஸ்தான் மக்கள் குடிநீருக்காக கஷ்டப்படுவதை பார்த்தால் கண்ணீர் தான் வரும் . சிந்து நதிநீர் நிரந்தரமாக பாகிஸ்தானுக்கு கொடுக்கக் கூடாது


அசோகன்
பிப் 09, 2026 11:13

இமயமலையை சுற்றி பார்த்துவிட்டு பிறகு கருத்து போடுங்கள் இறை.... கடந்த பத்து ஆண்டுகளில் பல நீர் மின் நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது...ஹிமாச்சல் காசா செல்லும் வழியில் இரண்டு நிலையங்கள் மட்டுமே 2800MW தயாரிகிறது.


சண்முகம்
பிப் 09, 2026 06:52

அடிச்சான்யா அதானி லக்கி பிரைஸ்.


RAMESH KUMAR R V
பிப் 08, 2026 21:04

சரியான முடிவு.


இறைவி
பிப் 08, 2026 21:00

அரசியல் வியாதிகளின் டப்பா பொறியியல் கல்லூரியில் படிக்காமல் புகழ் பெற்ற நல்ல பொறியியல் கல்லூரியில் படித்த ஒரு பொறியாளரைக் கேள்ளுங்க. இமய மலை பகுதியில் அஸ்திவாரம் போட்டு அணை கட்ட எத்தனை வருடங்கள் பிடிக்கும் என்று. தளவாடங்களை கொண்டு செல்வதே பெரும்பாடு.


Thravisham
பிப் 08, 2026 21:55

முடியாதது என்று எதுவுமே இல்லை. சீனவின் 3 கோர்ஜ்ஸ் என்கின்ற உலக பிரமாண்டமான அணை சில வருடங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது. கூகுளை தேடி பாருங்கள் விவரம் கிடைக்கும். சமீபத்தில் அங்கு சென்றிருந்தேன். அந்த அணை மிக பிரம்மாண்டம்.


MARUTHU PANDIAR
பிப் 08, 2026 19:36

அவ்வளவு காலம் பிடிக்குமா?


SANKAR
பிப் 08, 2026 20:18

building dam among valley d by mountains takes long time..at normal areas not as tough as Himalayas it can take about 8 years ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை