வாசகர்கள் கருத்துகள் ( 23 )
இனிமேலாவது நம்ம பிரதமர் கட்டிபுடிக்காம பிசினஸ் தான் பேசணும் டிரம்ப் ஒட
போர் துவங்குவதற்கு முன்பெ பாக்கிஸ்தான் பயந்து விட்டது , இது வரை நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றவர்கள் இந்த முறை அந்த தாக்குதலை நாங்கள் செய்ய வில்லை என்று சொன்னனர் , இந்தியா பாகிஸ்தானில் பல இடங்களை தாக்கி உள்ளது , போருக்கு முன்பு அணு ஆயுதம் பற்றி பேசியவர்கள் இப்ப அது பற்றி பேச வில்லை , சீனா ஆயுதங்கள் வேலை செய்ய வில்லை , போர் மேலும் நடந்தால் இந்தியாவின் பலம் உலகம் அறியும் , இந்த போரால் சீனா அமெரிக்கா ஆயுத மதிப்பு குறைந்து உள்ளது ,அது சில நாடுகளுக்கு பிடிக்க வில்லை , இந்தியாய்வுக்கு தொல்லை கொடுக்க பாக்கிஸ்தான் போன்ற ஒரு நாடு அவர்களுக்கு தேவை , சீனாவின் பல பில்லியன் DOLLOR முதலீடு அங்கு உள்ளது , அதையும் சீனா காப்பாற்ற வேண்டும் , போர் வந்து பாக்கிஸ்தான் அழிந்தால் பாக்கிஸ்தான் வாங்கிய கடனை யார் கட்டுவது , வராக்கடன் கணக்கில் எழுதவாவது அவர்களுக்கு பாக்கிஸ்தான் என்று ஒரு இடமாவது வேண்டும் , பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருக்க வாய்ப்பு இல்லை , அவர்களுக்கு அணு ஆயுதம் செய்ய உதவிய நாட்டுக்கு நன்கு தெரியும் அதை அவர்கள் விற்பனை செய்வார்கள் அல்லது உதவிய நாட்டுக்கு எதிராக பயன்படுத்துவார்கள் என்று , ஆண்டுக்கு இரண்டரை லட்சம் கோடி ராணுவத்துக்கு அவர்கள் செலவு செய்வதாக கணக்கு காண்பித்தாலும் , அதில் பெரும் தொகையை அவர்கள் ஊழல் செய்து இருக்கலாம் அதனால் அந்த நாடு ராணுவ ரீதியாக பலமாக இல்லை , அவர்கள் சண்டை நிறுத்தம் எல்லாம் சற்று ஒய்வூ எடுக்கவேய , மீண்டும் எந்த வகையில் தாக்கினாலும் இப்போது தாக்கியதைவிட பலமாக தாக்க வேண்டும் , சிறிய அளவில் அணு ஆயுதம் தாக்குதல் நடத்தினாலும் சரி அப்போதான் மற்ற நாடுகள் நெடு நிலைமையுடன் இந்த போரை கையாளும் இல்லை என்றால் அவர்கள் இப்போது போன்று மறைமுகமா பாகிஸ்தானை ஆதரிப்பார்கள் ....
போரை தீவிரப்படுத்தி பலூசிஸ்தானை தனியாக பிரித்து இருக்கலாம் அதன் பின்பு பாகிஸ்தான் வாலை சுருட்டி இருப்பான் ஆனால் அதற்கெல்லாம் பெண் சிங்கம் இந்திராவின் தைரியம் வேண்டும்.
அப்போதிருந்த நிலை வேறு..
ஏற்கவே நாம் பங்களாதேஷ் என்று பிரித்து கொடுத்ததை நினைவில் வையுங்கள்.அதே பங்களாதேஸ் நன்றி மறக்க வில்லையா???அதே கதைதான் பலுச்சிஸ்தானும்.இவர்கள் யாருமே நம் நாட்டுடன் ஒத்து போக மாட்டார்கள்.
பாக்கிகளுக்கு ஆயூத தளவாடங்களைசீனா விற்பதை டிரம்ப் அழுத்தம் தந்து நிறுத்தவேண்டும் அல்லது பெரியண்ணன் அதிக வரி விதிக்கவேண்டும்.. இல்லையெனில் இப்பிராந்தியத்தில் அணு ஆய்த போட்டி ஏற்பட்டு ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும்.இதில் டிரம்புக்கு பொறுப்பு உண்டு.
சீனாவை ஓரம் கட்டிட்டு இதான் சாக்குன்னு அமெரிக்கா காரன் ஆயுதங்களை சப்ளை செய்வான்.இந்தியா எவனையுமே நம்ப கூடாது...இங்கே முன்பு பலர் குறிப்பா ஹிந்துவாதிகள் அமெரிக்கா நம்ம ஆளு..ட்ரம்ப் நம்ம ஜீயோட நண்பர் என்றெல்லாம் புலகாங்கிதம் அடைந்தார்கள்.அமெரிக்காவை பொறுத்தவரை அந்த நாட்டிற்கு எது லாபமோ அதையே செய்வார்கள்.
போர் நிரந்தர தீர்வாகாது என்பது எல்லோருக்கும் தெரியும். பயங்கரவாதத்திற்கு எதிராக நான்கு நாட்களுக்கு பிறகு சீனா தனது குரலை பதிவு செய்திருக்கிறது என்றால், நமது ராணுவம் பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்தியது மற்றும் பாகிஸ்தான் ட்ரோன் களை இடைமறித்து பந்தாடியதை பார்த்து வல்லரசு நாடுகளுக்கு பயம் வந்திருக்க கூடும். டெல்லி நோக்கி வீசிய பெரிய ஏவுகணை பந்தாடப்பட்டதும் முக்கிய நிகழ்வாக பார்க்கிறேன். வல்லரசு நாடுகளின் வர்த்தகம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்பதாலே அமெரிக்கா உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வர காரணமாக இருக்கும். சீனாவும் பாகிஸ்தானை கடிந்திருக்க கூடும். எதுவாக இருந்தாலும் நமது ராணுவத்தின் பலம் உலக நாடுகளுக்கு தெரிந்திருக்கும். சீனாவின் பெரியண்ணன் மனப்பான்மையில் ஒரு நெத்தியடியை இந்தியா தந்திருக்கிறது. நமது ராணுவத்திற்கு வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
சித்தே பொறுங்கோ. பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதி உதவி அளிப்பதே போர் நிறுத்தம் செய்யச் சொல்லி மெடல் குத்திக்கத்தான். இந்தியா பாகிஸ்தானுக்கு இது போருக்கான நேரமில்லைன்னு ட்ரம்ப் நினைக்கிறாரு. அவிங்க நாட்டை யாராவது தாக்கினால் சீறுவாரு .
கிஜன்ஜி பயம் காரணமாக கைது செய்யப்பட்ட 93000 பாக் ராணுவத்தினரை பாகிஸ்தானிடம் திரும்ப ஒப்படைத்தார் இந்திரா. அதற்கு பதிலாக ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பரிமாற்றம் செய்திருந்தால் இப்போ நடக்கும் பயங்கரவாதம் பிறந்திருக்க வாய்ப்பில்லை. காஷ்மீர் தேர்தலில் இந்திரா செய்த முறைகேடுகள்தான் அம்மாநில மக்களை தீவீரவாத அனுதாபிகளாக மாற்றியது.
அண்ணா அறிவாலயமும் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு இருக்கும், போர் ஏற்பட்டு 2026 தமிழக தேர்தலில் எதிரொலித்தால் என்ன ஆவது என்று தூக்கத்தை இழந்த முதல்வருக்கும் இது நல்ல செய்தி தான்
இது இந்தியமக்களுக்கு நல்ல செய்தி அல்ல போர் நிறுத்தம் என்னும் செய்தி இந்தியர்களுக்கு நல்ல செய்தி அல்ல பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் மாநிலங்களில் பா ஜா கா வின் செல்வாக்கு குறைய போகிறது போர் நிறுத்தினால், இத்தனை ஆண்டுகள் இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு விமோசனம் கிடைத்துவிட்டது, போர் ஏற்பட்டு என்று எண்ணிய மக்களுக்கு இடியாய் இறங்கி இருக்கிறது போர் நிறுத்த செய்தி .
நடப்பதை பார்த்தால் என்ன ஊகிக்க முடிகிறது? சமாதானத்தை மீறி பாக் தாக்கினால் அதையே சாக்காக வைத்து அடித்து நொறுக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஒரு நல்ல சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறது இந்தியா. இன்னொரு விஷயம் பாக் இப்படித்தான் நடந்துகொள்ளும் என்று இந்தியாவும் எதிர்பார்த்துள்ளதை அறிய முடிகிறது ....