உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்காலத்துக்கு தேவையான திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம்: பிரதமர் மோடி மகிழ்ச்சி

எதிர்காலத்துக்கு தேவையான திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம்: பிரதமர் மோடி மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் உள்ளிட்ட எதிர்காலத்துக்கு தேவையான திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்து உள்ளது.பிரிட்டனை சேர்ந்த கியூஎஸ்(QS) என்ற உயர்கல்வி குறித்த அமைப்பு ஆண்டுதோறும், பல்கலைகள் மற்றும் கல்லூரிகள் குறித்து பட்டியல் வெளியிட்டு வருகிறது. எதிர்கால வேலை சந்தைக்கான தேவைகளை கருத்தில் கொண்டு, நாடுகள் எவ்வாறு தங்களை தயார்படுத்தி வருகின்றன என்பது குறித்த பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி எதிர்கால திறன் போட்டியாளர் பிரிவில் இந்தியா 25வது இடத்தில் உள்ளது.அதேநேரத்தில், எதிர்கால வேலைக்கான திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=681pbuoy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கான ஆய்வு 190 நாடுகளில் 28 கோடி பணியிடங்களிலும், 5 ஆயிரம் பல்கலைகளிலும், 50 லட்சம் பணியாளர்களிடமும் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த பத்து ஆண்டுகளில், இந்திய இளைஞர்களை சுயசார்புடையவர்களாக, வளங்களை உருவாக்க உதவும் திறன்களை கொண்டு உள்ளவர்களாக, மத்திய அரசு வலிமைப்படுத்தி வருகிறது. கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைக்கான மையமாக இந்தியாவை மாற்ற தொழில்நுட்பத்தின் சக்தியை பயன்படுத்தி உள்ளோம். இளைஞர் முன்னேற்றத்திற்கான பாதையில் இந்தியா முன்னேறும் நேரத்தில் இந்த அறிக்கை முக்கியமானது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mediagoons
ஜன 16, 2025 22:40

எப்போதுமே இந்தியா திறமையானவர்களை கொண்டது தான்


அப்பாவி
ஜன 16, 2025 20:03

எப்புடியெல்லாம் ஏமாத்துறாங்க. டிஜிட்டல் புரட்சில டிஜிட்டல் அரெஸ்ட் மாதிரி அப்பப்போ தேவையானதை கத்துக்குவாங்க. நாம முதலிடத்தில் இல்லாம ரெண்டாமிடத்தில் எப்புடி இருக்கோம்?


தாமரை மலர்கிறது
ஜன 16, 2025 19:54

திறனை மேம்படுத்த முதலில் சாதி அடிப்படையான கோட்டாவை ஒழிக்க வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 16, 2025 18:21

Matteo Quacquarelli, vice president, strategy and analytics at QS, said, "Indias exceptional GDP growth, developing economy, and youth population position it uniquely on the global stage. However, to sustain this growth, it is crucial to equip the workforce with relevant skills through comprehensive higher education reforms." அதாவது கற்றவர்களுக்கு திறன் மேம்பாடு, உயர்கல்வியில் சீர்திருத்தம் அவசியம் என்கிறார் .... இங்கேதான் இருக்கு மேட்டரே .... இளைய தலைமுறையை பாழாக்க போதையை பரவலாக்குகின்றன மூர்க்க கின்சிர்கள் .... உயர்கல்வியில் குழப்படி செய்ய துவக்கக் கல்வியையே உருப்படியாக்கத் தரமுடியாத பிற்போக்கு மாநிலங்கள் விழைகின்றன ....


முக்கிய வீடியோ