உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மன்மோகன் சிங்கின் பங்களிப்பை பாரதம் என்றென்றும் நினைவு கொள்ளும்; ஆர்.எஸ்.எஸ்., இரங்கல்

மன்மோகன் சிங்கின் பங்களிப்பை பாரதம் என்றென்றும் நினைவு கொள்ளும்; ஆர்.எஸ்.எஸ்., இரங்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை இந்த பாரதம் என்றென்றும் நினைவில் கொள்ளும் என்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும், நிதியமைச்சருமான மன்மோகன் சிங்,92, நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை 9.30 மணியளவில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் மற்றும் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே ஆகியோர் கூட்டாக இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில்; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு ஒட்டுமொத்த நாட்டையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், அவரை விரும்புபவர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண பின்னணியில் இருந்து வந்தாலும், நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகித்தவர். புகழ்பெற்ற பொருளாதார நிபுணராக இருந்து அவர் நாட்டிற்கு வழங்கிய பங்களிப்பை என்றென்றும் இந்த பாரதம் நினைவில் கொள்ளும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
டிச 28, 2024 08:54

ஆர் எஸ் எஸ் தலைவர்களுக்காவது உண்மை தெரியும் என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது!


Perumal Pillai
டிச 27, 2024 21:05

இறந்தவர்களை நல்லவர்களாக்கும் மாயை ஒழிக்கப்பட வேண்டும் .


Anand
டிச 27, 2024 18:42

முறையான இரங்கல் .


ஆரூர் ரங்
டிச 27, 2024 18:39

ஆம். பிஜெபி வெற்றிபெற்று ஆட்சி அமைய வெற்றிக்கு அவரும் காரணம் . (மன்மோகன் தயாரித்த சட்டத்தை நான்சென்ஸ் எ‌ன்று கிழித்துபோட்டு ராகுல் கூட உதவினார்).


Rama
டிச 27, 2024 18:29

1991 இல் இந்தியா எப்படி இருந்தது என்பதை அறிந்திடாதவர்கள் புரிந்திடாதவர்கள் தான் இவரை திட்டுவார்கள் ஐம்பது சதவிகிதத்திற்கும் மேல் உள்ளவர்கள் வறுமையில் வாடிய தருணம் அது . எந்த தொழிலை தொடங்கவும் லைசன்ஸ் தேவைப்பட்ட லைசன்ஸ் ராஜ் காலம் அது . இந்தியா தனது கதவு ஜன்னல் எல்லாவற்றையும் பூட்டு போட்டு பூட்டி வைத்துக்கொண்ட இருண்ட காலமது இன்று பலரும் வறுமையில் இருந்து மீண்டுள்ளானார் என்றால் அதற்கு இவரின் தொலைநோக்கு பார்வை பொருளாதார கொள்கை ஒன்று மட்டுமே காரணம் நன்றி இல்லாவிட்டாலும் பரவாயில்லை இவரை திட்டி பாவி ஆகாதீர்கள்


ஆரூர் ரங்
டிச 27, 2024 20:43

அய்யா. 1991 இல் அந்த லட்சணத்துல நாடு இருந்ததற்கு காரணமும் 40 ஆண்டுகளாக ஆண்ட அதே காங் . கட்சிதானே? அவங்க கிழிச்ச வேட்டியை அவங்களே தைத்தது ஒரு சாதனையா?


veera
டிச 28, 2024 07:51

இவர் பிரதமர் ஆன கதையே வேறு...லண்டன் கரருகு தெரிய வாய்ப்பில்லை


சமீபத்திய செய்தி