உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும்' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ஆங்கில செய்தி சேனலுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி: இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும். இந்த முடிவு தேச நலனுக்கு முன்னுரிமை அளித்து எடுக்கப்பட்டது. நமது தேவைகளுக்கு ஏற்றதை வாங்குவது நமது முடிவு, எங்கிருந்து எண்ணெய் வாங்குகிறோம், அதை நாம் தீர்மானிக்க வேண்டும். லாபம் ஈட்டுவதற்கு குறுக்குவழிகள் எதுவும் இல்லை.

விலை குறையும்

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சுமையாக விழும் மறைமுக வரியைப் பற்றி நாம் ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. ஜிஎஸ்டி சீரமைப்பால் அனைத்து பொருட்களில் விலை குறையும்.ஜிஎஸ்டி சீரமைப்பின்போது நடுத்தர குடும்பங்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

கட்டுக்குள் வரும்

சில பொருட்களைத் தவிர அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட்டது. சாமானிய மக்கள், பெண்கள், மாணவர்கள், நடுத்தர வகுப்பினர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலனுக்காக வரி விகிதங்களின் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பொருட்களின் விலையும் கட்டுக்குள் வரும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Prasath
செப் 05, 2025 22:40

இப்படியே திராவிட உருட்டு விளையாடு இவ்வளவு ரோஷம் பார்க்கிற நீ உன் காருக்கோ, இல்லை உன் டு வீலருக்கோ பெட்ரோல் போடாம நடந்து போ


Tamilan
செப் 05, 2025 21:29

அம்பானி அதானிகளுக்காக . திருப்பூர் தொழில்துறையினர் நாடெங்கும் உள்ள தொழில்கள் முடங்கும் அபாயம்


ஆரூர் ரங்
செப் 05, 2025 22:06

டிரம்ப் அழுவதற்கு காரணமே அவங்க பொருளாதார நிலைமைதான். இனியும் அமெரிக்காவை நம்பியிருந்தால் சரிவுதான்.ஆனா உங்களுக்கு இந்திய கார்பரேட்கள் அழிந்து பன்னாட்டு நிறுவனங்கள் வளரணும்னு மூர்க்கத்தனமான ஆசை.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 06, 2025 10:12

பயங்கர வாத தாக்குதல் அப்பாவி மக்களை கொல்வது குண்டு வைப்பது போன்றவைகளால் தான் தொழில்கள் முடங்கும். உதாரணம் கோவை குண்டு வெடிப்பு. தற்போதைய உதாரணம் காஷ்மீர் அப்பாவி மக்கள் மீது தாக்குதல். சுற்றுலா பிரதான தொழில் அது அங்கு முடங்கியது.


V Venkatachalam
செப் 05, 2025 21:10

உலக சந்தையில் டாலர் டாமினேட் பண்ணவிடாமல் பண்ணினாலே போதும்.‌ 70 வருடங்களுக்கு மேலாக இதை வைத்து கொண்டு தான் எல்லா நாடுகளுக்கும் பெரியண்ணன் வேலையை அமெரிக்கா செய்து கொண்டிருந்தது.பாகிஸ்தானுக்கு கடன் பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி. இதெல்லாம் அமெரிக்காவின் நேர்மையான செயலா? இந்தியா இப்போதுதான் நம்முடைய உண்மை முகத்தை காட்டியிருக்கிறது.‌ அதுக்கே ட்ரம்ப் அலறல் தாங்க முடியலை. பார்க்கலாம்.


ஆரூர் ரங்
செப் 05, 2025 21:01

இங்கிலீஷ்காரன் வெளியேறினால் நம்மால் ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்றார் ஈர வெங்காயம். இப்போ பாரதம் வாராவாரம் ராக்கெட் கூட விடுகிறது. அமெரிக்க பொருளாதாரமே சரிந்து விழுந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களது அச்சுறுத்தலுக்கு அஞ்ச வேண்டிய கட்டாயமில்லை. அவ‌ர்க‌ள் இல்லாமலும் சமாளித்துக் காட்டுவோம்.


Rathna
செப் 05, 2025 20:39

ரஷ்யாவில் தீவிரவாதம் ஜிஹாதிகளால் நடந்த போது புடின் ஜிஹாதிகளுக்கு அளித்த டிரீட்மெண்ட் நினைவில் நிற்கிறது.


அருண் பிரகாஷ் மதுரை
செப் 05, 2025 20:18

அமெரிக்காவிற்கு நாம் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் வாங்குவது பிரச்சினை இல்லை..நாம் தள்ளுபடி விலையில் இந்திய ரூபாயில் நேரடியாக வாங்குகிறோம்.. அமெரிக்க டாலரில் வாங்குவது இல்லை.. அதுதான் டிரம்பிற்கு எரிச்சல்.. நமது அந்நிய செலாவணி கையிருப்பு கட்டுக்குள் உள்ளது..யார் நினைத்தாலும் அதை நிறுத்த முடியாது.. அமெரிக்கா என்ன நம்மை ஆட்டுவிப்பது...?


அப்பாவி
செப் 05, 2025 19:52

யாவாரம்னு வந்துட்டா மனிதாபிமானம் ஏது? நாம சொல்லியா சண்டை நிக்கப் போகுது? மறுபடியும் இது போருக்கான நேரமில்லைன்னு ஆரம்பிக்க வேண்டியதுதான்.


vivek
செப் 05, 2025 21:17

கருத்து போட்டுட்டு நேரா டாஸ்மாக் போயிடு கோவாலு


ஆரூர் ரங்
செப் 05, 2025 19:52

உலக இஸ்லாமிய நாடுகளிலுள்ள 52 நாடுகளில் ஒன்று கூட பாகிஸ்தான் ஏவிவிடும் பயங்கரவாதத்தை கண்டிப்பதில்லை.பின் ஏன் நாம் அவர்களிடமிருந்து எண்ணெய் வாங்க வேண்டும்?.நமது அரசுத்துறை நிறுவனங்கள் கூட பெரிதும் ரஷ்ய எண்ணெய்யையே இறக்குமதி செய்கின்றன.வெறும் விலை மட்டுமே காரணமல்ல. உலக அரசியல் ராஜதந்திரம்.


MUTHU
செப் 05, 2025 20:14

உண்மையே. ஆனால் தீவிரவாதத்தினை அந்த நாடுகள் கொடூரமாய் நசுக்கி விடுவார். தீவிரவாதிகள் விசாரணை முடிந்த ஒரு மாதத்தில் கொல்லப்படுவார். இந்தியாவினைப்போல் விசாரணை நீட்டிப்பு என்று கொஞ்சிக் கொண்டிருக்க மாட்டார்கள்.