உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய வரலாற்று சம்பவங்கள் பிரிட்டிஷாரால் திருத்தப்பட்டன

இந்திய வரலாற்று சம்பவங்கள் பிரிட்டிஷாரால் திருத்தப்பட்டன

ஜெய்ப்பூர் : ''பிரிட்டிஷ் ஆட்சியின்போது, பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்களால் நம் நாட்டின் வரலாற்று சம்பவங்கள் திருத்தி எழுதப்பட்டன,'' என, ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாவ் பகாடே கூறினார்.ராஜஸ்தானின் உதய்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மாநில கவர்னர் ஹரிபாவ் பகாடே பேசியதாவது: நம் நாட்டின் உண்மையான வரலாறுகள் பல மறைக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஆட்சியின்போது, பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்களால் திருத்தி எழுதப்பட்டன. குறிப்பாக, முகலாய மன்னர் அக்பர், ராஜ்புத் அரசரின் மகளான ஜோதா பாயை திருமணம் செய்ததாக வரலாறு மாற்றி எழுதப்பட்டுள்ளது. உண்மையில், தன் வேலைக்காரர் ஒருவரின் மகளையே, அக்பருக்கு, ராஜ்புத் அரசரான பர்மால் திருமணம் செய்து வைத்தார்.இது போலவே ராஜ்புத் அரசர் மஹாராணா பிரதாப், போரை நிறுத்திக் கொள்வதாக அக்பருக்கு கடிதம் எழுதியதாக வரலாற்று உண்மை மாற்றி எழுதப்பட்டுள்ளது. அவர் எப்போதும் தன்மானத்தை விட்டுக் கொடுத்ததில்லை.ஆனால், மஹாராணா பிரதாப் பற்றி கற்றுக் கொடுக்காமல், நம் வரலாற்று புத்தகங்கள், அக்பர் குறித்தே அதிகம் பேசுகின்றன. இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

KSB
மே 30, 2025 23:00

Unfortunately many of us, especially the Dravidian folks believe only the western scholars views even though they have written without any valid proof, but with prejudice.


Bhaskaran
மே 30, 2025 16:56

வடாபாவ் பக்கோடா என்று சொல்வது போல் இருக்கு இவர் பெயர்


பெரிய குத்தூசி
மே 30, 2025 16:31

நாம் படித்த வரலாறு அனைத்தும் நூறு சதவிகிதம் திரிக்கப்பட்டது என்பது உண்மை. பிரிட்டிஷாரால் இந்தியாவை நாசப்படுத்தி பார்க்க உருவாக்கப்பட்டதுதான் பாகிஸ்தான். சுதந்திரத்திற்கு பின் வந்த காங்கிரஸ் அரசில் சுமார் 20 ஆண்டுகள் பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமி இந்திய முஸ்லீம் MP க்கள் உள்நோக்கத்திற்காகக் மத்திய கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு இஸ்லாமிய மொஹலாயர்களை பெருமையாக மட்டுமே இந்திய மாணவர்கள் படிக்கும் வரலாறு பாடம் உள்நோக்கத்திற்க்காக உருவாக்கப்பட்டது. உண்மையான இந்திய வரலாற்றை கூறினால் மாணவர்களுக்கு தேசப்பற்று வரும் என முஸ்லீம் MP க்கள் மத்திய கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர்களாக இருந்தவர்கள் தீர்க்கமாக திட்டமிட்டு பிரிட்டிஷ் அஜெண்டா வை நிறைவேற்றி கொண்டிருந்தனர். நமது நாட்டின் இரும்பு மனிதர் யார் என கேட்டால் சர்தார் வல்லபாய் பட்டேல் என கூறுவார். அனால் அவரை ஏன் இரும்பு மனிதர் என அழைக்கப்படுகிறார் என 99 சதவீத மக்களுக்கு தெரியாது. முக்கியமாக 90 கிட்ஸ் க்கு எதுவுமே தெரியாது. ஏனெற்றால் சர்தார் வல்லபாய் படேல் செய்த சிறப்பான காரியம் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சுமார் 550 சிறு சிறு மாகாணங்களை முஸ்லீம் நவாபுகள் ஆண்டுவந்தனர். சுதந்திரம் அடைந்தவுடன் 550 முஸ்லீம் நவாபுகள் ம் சொல்லி வைத்ததுபோல் நாங்கள் ஆளும் பகுதியை பாகிஸ்தானுடன் செய்துகொள்ள திட்டமிட்டனர். அப்படி அனுமதித்து இருந்தால் இந்தியா உள்ளே ஒவொரு தாலுகா சைஸ் ல் இருந்த 550 தாலுகா பாகிஸ்தான் வசம் இருந்திருக்கும். இதற்க்கு பிரிட்டிஷ் கைப்பாவைவான நம் ஜவர்ஹலால் நேரு பிரதமராக இருந்த மாமாவும் உடந்தை. நேரு லண்டன் சென்ற சமயம் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் ஒரே இரவில் இந்திய ராணுவத்தை வைத்து அணைத்து நவாபுகளையும் ஒரே இரவில் வெச்சு செய்து ஓவர் நைட் ல் 550 மகாணத்தையும் இந்தியாவுடன் இணைத்தார். ஆதலால் தான் படேலுக்கு இரும்பு மனிதர் என பெயர் வந்தது. இதை விளக்கமாக எந்த பாடப்புத்தகத்திலாவது வல்லபாய் படேலின் பெருமை, நமது ராணுவத்தினரின் பெருமை சொல்லப்பட்டுள்ளதா? இந்த தேச ஒருங்கிணைப்பு நடக்கவில்லையேல் இல்லையேல் தமிழ்நாட்டுக்குள்ளே 2 இடங்கள் வேலூர் மற்றும் சென்னையின் ஒரு சிறு பகுதி மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளத்தின் ஒரு பகுதி என ஒவொரு மாநிலத்திலும் 5-10 தாலுகா பாகிஸ்தானிடம் போயிருக்கும், வடக்கே ஒரு ஓரமாய் பாகிஸ்தானை ஒடுக்கி வைத்திருக்கும் போதே இவளவு ஆட்டம் போடுகிறது. முதலில் இந்திய உண்மை வரலாற்றை தேடி படியுங்கள், அப்போதுதான் தானாக தேசப்பற்று வரும். திராவிஷம் உடம்பிலிருந்து இறங்கும். jaihind


தஞ்சை மன்னர்
மே 30, 2025 11:39

இப்படி மாற்றி எழுதுவதால் அவர்களுக்கு ஒன்றும் பிரோயஜனம் இல்லை அவர்கள் இருப்பதையும் இருந்தததையும் கண்டதையும் தான் குறிப்பில் எழுதுவார்கள் அப்படி இருக்க மாற்றி எழுத அவசியம் இல்லை மேலும் வரலாற்றையும் நடந்த நிகழ்வுகளையும் மாற்றி மாற்றி எழுதுபவர்கள் யார் என்று இந்திய மக்களுக்கு தெரியும் அதில் பொய்யும் புரட்டையும் கலந்து எழுதவேண்டிய கட்டாயம் யாருக்கு என்றும் நன்றாக தெரியும் தன கையலதனத்தை மறைக்க முயற்சிக்கும் அடிமை சாசன கூட்டம் யார் என்றும் எல்லோருக்கும் தெரியும்


நாஞ்சில் நாடோடி
மே 30, 2025 15:11

தேசிய சிந்தனை அற்று போய் குறுகிய வடடத்துக்குள் உழல்பவர்களுக்கு பாரதத்தின் பெருமை தெரிவதில்லை. பாரதத்துக்கு களங்கம் விளைவிக்கும் திருத்தி எழுதப்பட்ட பொய் வரலாறு மீதே அதிக அக்கறை கொள்வார்கள் ..


S Lakshmana Kumar
மே 30, 2025 10:00

உண்மை தான். கஜினி 18வது முறை ஜெயித்தது சொல்லப்பட்டதே ஒழிய 17 முறை யாரால் தோற்கடிக்கப்பட்டார் என்பது மறைக்கப் பட்டது உண்மை தானே. இதையெல்லாம் சொன்னால் நான் சங்கி என்பார்கள். உண்மை எப்போதுமே கசக்கத்தானே செய்யும்.


மூர்க்கன்
மே 30, 2025 15:28

வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தை நன்றாக படியுங்கள் கஜினி நிலையான அரசாங்கத்தை நிறுவவோ நாடு பிடிக்கவோ இந்தியா மீது படையெடுக்கவில்லை சொல்ல கஷ்டமாக இருந்தாலும் உண்மை அதுதான் ஒவ்வொரு முறையும் கொள்ளையடிக்கவே படையெடுத்தான் அதானல் ஒவ்வொரு முறையும் அவனை பொறுத்தவரை அது பெரு வெற்றிதான் ...நமது நாட்டு அரசர்கள் அந்தக்காலத்தில் வலுவான ராணுவத்தை கட்டமைக்கவில்லை பிருத்விராஜ் அரசரும் அவரது மாமனாரின் துரோகத்தால் வீழ்ந்தார் முதன் முதலில் மொஹம்மது கோரி நிலையான அரசாங்கத்தை நிறுவினார் பால்பன் அரசர் திறமையாக மங்கோலிய படையெடுப்பை கட்டுபடுத்தினார் இதுதான் உண்மையான வரலாறு.


rajan
மே 30, 2025 09:06

ஆங்கிலேய ஆட்சியின் பொது அவர்களுக்கு அடிமையாய் வேலை செய்து காந்தியை எதிர்த்த ஆர்எஸ்எஸ் அப்போது ஏன் சரித்திர மாற்றத்தை எதிர்த்து போராடவில்லை


RAJ
மே 30, 2025 09:02

ஆமாம் சார். இந்திய வரலாற்றை மறைத்து உள்ளனர்.. நல்ல எடுத்துக்காட்டு... மீசையில் மண் ஒட்டவில்லை என்று திரியும் எதிரி நாட்டு கோமாளிகள்...


VENKATASUBRAMANIAN
மே 30, 2025 07:56

இது காங்கிரஸ் வேலை. கல்வி அமைச்சர்கள் அனைவரும் இஸ்லாமியரே


மூர்க்கன்
மே 30, 2025 17:25

கல்வி அமைச்சர்கள் மட்டுமல்ல கல்வி கற்றவர்களும் அவர்கள் மட்டும்தான் போல??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை