உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய அணை கட்டுவது சாத்தியமா? மத்திய, மாநில அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதிய அணை கட்டுவது சாத்தியமா? மத்திய, மாநில அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி

டில்லி சிறப்பு நிருபர்

முல்லை பெரியாறு அணையின் பயன்பாட்டை நிறுத்தி, புதிய அணை கட்டக்கோரிய மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.உச்ச நீதிமன்றத்தில் கேரளாவைச் சேர்ந்த, 'சேவ் கேரளா பிரிகேட்' என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவில், 'கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையின் பயன்பாட்டை நிறுத்தி, புதிய அணை கட்ட உத்தரவிட வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.வி.கிரி, “முல்லை பெரியாறு அணை, 130 ஆண்டுகள் பழமையானது. ''இந்த அணைக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவர். எனவே, முல்லை பெரியாறு அணையின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்றார். உடன் தலைமை நீதிபதி, “அணை வலுவாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்கலாம்,” என யோசனை தெரிவித்தார்.அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதியான சந்திரன், “பழமைவாய்ந்த அணை எந்த வகையில் பாதுகாப்பு குறைபாடுடன் இருக்கிறது என்பதை மனுதாரரான நீங்கள் விளக்க வேண்டும். புதிய அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் பிரச்னை ஏற்படலாம்,” என்றார். இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கிரி, “உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை பின்பற்றியே புதிய அணை கட்டப்படும்,” என்றார்.இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக, மத்திய அரசு மற்றும் தமிழக அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

S.jayaram
அக் 16, 2025 16:39

இங்கே ஒரு முதல்வர் இருக்கிறார் தமிழ்நாட்டை தலை குனியவிடமாட்டோம் என்று கூறிக்கொண்டு, தமிழ்நாட்டு மக்களை கேரளமுதல்வரிடம் தலை குனியவைத்தார் எப்படி தெரியுமா? அந்த அணை பரமிப்பிற்கு சிலமரங்களை வெட்டவேண்டி இருந்தது ஆனால் அதற்கு கேரள அரசு பல்லாண்டுகளாக அனுமதி தரமருத்துவிட்டது. இவர்களின் நண்பரான அவரிடம் பேசி அனுமதி பெற்று இருக்கலாம் ஆனால் பெறவில்லை காரணம் அதனால் இவர்களுக்கு என்ன பிரயோஜனம் 5 மாவட்ட மக்கள் தானே பயன் பெறபோகிறார்கள் எனவே அதை கண்டு கொள்ளவே இல்லை இந்த சமயத்தில் கேரளாவின் வனத்துறை அதிகாரி தமிழக பொறியாளர்களிடம் அந்த மரங்களை அகற்றி விட்டு மராமத்துப் பணியினை செய்யுமாறு கூறியுள்ளார், இவரோ சென்னைக்கு போன் செய்து செய்தியை சொல்லியுள்ளார். அது முதல்வரின் காதுக்கு சென்றது விளம்பரப் பிரியரான ஸ்டாலின் உடனே என்னமோ இவர் பேசி சாதித்த மாதிரி கேரள முதல்வருக்கு தமிழக மக்களின் சார்பாக தங்கள் மரம் வெட்ட அனுமதியளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஊடகங்களுக்கு செய்தியை கொடுத்து விட்டார். இதனைக் கண்ட பினராயி உடனே கொதித்தெழுந்து எனக்குத்தெரியாமல் யார் அனுமதி கொடுத்தது என்று ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார், அத்துறை மந்திரி முதல் அதிகாரி வரை மறுக்க, கடைசியில் அனுமதிக்கொடுத்த அந்த வனத்துறை அதிகாரியை உடனடியாக அங்கிருந்து வேறிடத்திற்கு மாற்றப்பட்டார். மரம்வெட்ட மீண்டும் அனுமதி மறுக்க பட்டது. ஆக இதுதான் விளம்பர்விரும்பியின் நிர்வாக லட்சணம். இந்த அணை பிரச்சினைக்கு உள்ளாக காரணமே இந்த பினராயி விஜயன்தான் முதன் முதலில் அணை இடியப்போகிறது என்று கூறி அப்பகுதிமக்களை போராட்டத்தில் ஈடுபட வைத்தார் அப்போது அப்பகுதி எம் எல் ஏ. அதன் பின் அணையில் நீர்த்தேக்கும் உயரத்தை வழக்குபோட்டு 136 அடியாக நிறுத்தினான். அப்போது இருந்து அணை மராமத்து பார்ப்பதற்கு ஏதாவது இடையூறு செய்துகொண்டே நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் பார்த்துக் கொண்டனர். இந்த நேரத்தில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் இருந்த இடங்களில் மக்களை குடியேறினார் அங்கு ரிசார்ட் கலும் உருவாயின இப்போ மராமத்து பார்த்து மீண்டும் பழைய அளவு நீர் தேக்கினால் இந்த குடியிருப்புகள், ரெசோர்ட்ஸ்எல்லாம் நீரில் மூழ்கும் விடுவார்களா?. இப்படிபட்ட நிலையில் நன்றி தெரிவிக்கிறேன் என்ற பெயரில் அனைத்தையும் கெடுத்து குட்டி சுவராக்கி உள்ளார். நமது ஆள். இவர் அப்பா கருணாநிதியால் காவேரி உரிமை போச்சு, தமிழ்நாட்டு மக்களை. வாழவும் விடமாட்டார்கள் சாகவும் விடமாட்டார்கள். இந்தக் குடும்பம்.


veeramani
அக் 14, 2025 18:54

தென் பா ண்டி நாட்டில் வசித்துவரும் இந்திய குடிமகன் சொந்த கருத்து தேக்கடி முல்லை பெரியாறு தண்ணி யின் பயனாளி, சிவகங்கை மாவட்டத்தில் வசித்துவருபவர். முல்லை பெரியாறு தேனீ திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு குடிநீர், விவசாய தண்ணீர் கொடுக்கிறது. தென் பாண்டி நாட்டுக்காரர்களுக்கு தற்போதுள்ள அணையிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் ஒரு புதிய ஆணை கட்டுவதால் எந்த பாதிப்பும் வராது . தென் கேரளா அக்கல் ஆணை கட்ட எங்களுக்கு ஆட்சேபனை இல்லை


Diraviam s
அக் 14, 2025 16:12

Actually speaking ,Idukki district is under earth quake zone. It is more vulnerable than Mullai periyar dam.


ஆரூர் ரங்
அக் 14, 2025 15:27

ஆயிரமாண்டு பழைய ஆலயங்களுக்கு நீதிபதிகளே செல்கிறார்கள். அவற்றுக்குள் ஜெஜெ ன்னு திருவிழாக்கள் நடக்கின்றன. எந்த நீதிமன்றமும் ஆட்சேபிக்கவில்லை. நேற்று கட்டிய பள்ளிக்கட்டிடம் இன்று இடிக்கிறது. கோர்ட் தானாக விசாரித்ததா? முடிந்து போன விஷயம் என்று முன்பு கோர்ட் தீர்ப்புக் கூறிய அதே அணை விவகாரத்தை கையிலெடுக்கும் காரணமென்ன?.


தமிழ்வேள்
அக் 14, 2025 12:10

முல்லைப்பெரியார் டேம் உடையும் என்பதெல்லாம் கட்டுக்கதை. அப்புறம் ஏன் இடுக்கியில் 354 அடி உயர அணை? அப்போது நிலநடுக்கம் வராதா? காரணம், முல்லைப்பெரியாறு அணையை உடைத்தால், இடுக்கி அணைக்கு முழு நீர்வரத்து இருக்கும். முழு கொள்ளளவு இருந்தால், மின்சாரம் தயாரிப்பது மற்றும் கொள்ளை காசுக்கு டுமீல் நாட்டுக்கே விற்று காசுபார்ப்பது ...இது மல்லுக்களின் எண்ணம் ...எந்த திருட்டு திராவிஷா அரசாக இருந்தாலும் ,கமிஷன் கொடுத்தால் , எக்ஸ்ட்ரா விலைக்கு மின்சாரம் வாங்கும் என்பது குழந்தைக்கு கூட தெரியும் ....விவசாயம் எல்லாம் இவர்களுக்கு டுபாக்கூர்


Kulandai kannan
அக் 14, 2025 12:09

மதமாற்ற சக்திகள் நிறைந்த கன்னியாகுமரி யைப் பெற்றுத்தந்த காமராஜர், முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களை பெறத் தவறியது பெரும் பிழை. குமரி மீது மட்டும் அவருக்கு ஏன் பாசம்?


M Ramachandran
அக் 14, 2025 11:05

மலிவான அரசிலை விட்டு விவசாயிகளின் நலம் கருதி இந்த திட்டத்துக்கு சரியான பதிலை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.


Thravisham
அக் 14, 2025 10:45

கொலிஜிய நீதி எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து கொண்டிருக்கிறதே?


சாமானியன்
அக் 14, 2025 10:25

ஏதோ ஒரு வெளி நாட்டு படத்தைப் பார்த்து விட்டு அது போலவே அணை உடைந்துவிடும் என கேரளாவில் சில எதிர்மறையாளர்கள் தேவையில்லா பயம். இந்தியாவில் எங்குமே அணை இதுவரை உடையவில்லை. கேரளா குறுகிய நிலப்பரப்பு கொண்டது. அணைகள் சாத்தியமில்லை.இது அவர்களுக்கும் தெரியும். தமிழகத்தை வெறுப்பேற்றவே இந்த மாதிரி அரசியல் நாடகம். அல்ப சுயநலம். மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டும்போதே இவர்களின் அகங்கார முகம் வெளிப்பட்டது.


Palanisamy T
அக் 14, 2025 10:14

1. ஏன் முல்லைப் பெரியாறு அணை மட்டும் இவர்களின் கண்களை அடிக்கடி இப்படி ஓயாது உறுத்திக் கொண்டேயிருக்கின்றது. அப்படிப் பார்த்தால் இந்திய நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப் பட்ட எல்லாக் கட்டிடங்களின் பாதுகாப்பையும் மறு ஆய்வு பண்ண வேண்டியிருக்கும். ஏனென்றால் கோரிக்கைய கொண்டுவந்தது முதலில் அவர்கள்தானே. 2. Anrub1952 - இல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் போது தமிழகத்திற்கு சேரவேண்டிய ஒருப் பகுதி கேரளாவுக்கு சென்றுவிட்டது. அநேகமாக அந்தப் பகுதி இந்த இடுக்கி மாவட்டமாகத்தான் இருக்கலாம். தமிழக மக்கள் அந்த பழைய கோப்பை மீண்டும் தூசிதட்டி மறுஆய்வுச் செய்து அந்த மாவட்டத்தை தமிழகத்தோடு இணைப்பதற்கு உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை வைக்கலாமே . சரித்தானே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை