உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் முழுவதையும் சேரவிடாமல் தடுத்தது நேருதான்! : படேல் விழாவில் மோடி பேச்சு

காஷ்மீர் முழுவதையும் சேரவிடாமல் தடுத்தது நேருதான்! : படேல் விழாவில் மோடி பேச்சு

ஏக்தா நகர் : 'சர்தார் வல்லபபாய் படேல், காஷ்மீர் முழுவதையும் நம் நாட்டுடன் இணைக்க விரும்பினார்; ஆனால், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான் அதை மறுத்தார்; காஷ்மீரை முழுதாக நம்முடன் சேரவிடாமல் தடுத்து விட்டார்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார். சுதந்திர போராட்ட வீரரும், நாட்டின் முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபபாய் படேலின், 150வது பிறந்த நாள் நேற்று நாடு முழுதும் கொண்டாடப்பட்டது.

மலரஞ்சலி

இதையொட்டி, குஜராத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே ஏக்தா நகரில் கட்டப்பட்டுள்ள அவரின் 597 அடி உயர சிலைக்கு, பிரதமர் மோடி நேற்று மலரஞ்சலி செலுத்தினார். அப்போது, படேலின் சிலைக்கு ஹெலிகாப்டர் வாயிலாக மலர்கள் துாவப் பட்டன. படேலின் பிறந்த நாள், தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படும் வேளையில், அதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் ஒருங்கிணைப்புக்கு மிகப்பெரிய உந்து சக்தியாகவும், தேசத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாகவும் சர்தார் வல்லபபாய் படேல் திகழ்ந்தார். சுதந்திரத்துக்கு பின், 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் சிக்கலான பணியை, சர்தார் வல்லபபாய் படேல் வெற்றிகரமாக செய்து முடித்தார். அவரின் கொள்கைகள், முடிவுகள் புதிய வரலாற்றை உருவாக்கின. 'ஒரே இந்தியா; சிறந்த இந்தியா' என்ற கருத்து, அவருக்கு மிகவும் முக்கியமானது. இந்த பிரச்னையை முந்தைய காங்கிரஸ் அரசு கையாள தவறியது. பிற சமஸ்தானங்களை போல, முழு காஷ்மீரையும் நாட்டுடன் ஒருங்கிணைக்க சர்தார் படேல் விரும்பினார். ஆனால், முன்னாள் பிரதமர் நேரு அதை அனுமதிக்கவில்லை. இதனால், காஷ்மீர் பிரிக்கப்பட்டு, தனி அரசியலமைப்பு மற்றும் தனிக்கொடி வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தவறு காரணமாகவே, நாடு பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டது.

சவாலாக மாறின

நாட்டின் இறையாண்மையே, படேலுக்கு எல்லாவற்றிற்கும் மேலாக இருந்தது. ஆனால், அவரது மரணத்துக்கு பின், அடுத்தடுத்து வந்த அரசுகள், அதை பின்பற்றவில்லை. காஷ்மீர் விஷயத்தில் செய்த தவறுகள், வடகிழக்கு மாநிலங்களில் எழுந்த பிரச்னைகள், நாடு முழுதும் பரவிய நக்சல் பயங்கரவாதம் போன்றவை, நாட்டின் இறையாண்மைக்கு சவாலாக மாறின. காங்கிரசின் பலவீனமான கொள்கைகளால், காஷ்மீரின் ஒரு பகுதி, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக்கு கீழ் வந்தது. இதனால், அங்கு பயங்கரவாத செயல்கள் அரங்கேறின. அதற்கு காங்கிரஸ் அடிபணிந்தது. படேலின் தொலைநோக்கு பார்வையை மறந்தது. ஆனால், நாம் மறக்கவில்லை-. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது பிரிவை ரத்து செய்ததன் வாயிலாக, அது நம் நாட்டுடன் ஒன்றுபட்டுள்ளது. இந்தியாவின் உண்மையான பலம் என்ன என்பதை, இப்போது பாகிஸ்தானும், பயங்கரவாதிகளும் அறிந்திருப்பர். நம் நாட்டின் மீது யாராவது கை வைத்தால், அவர்களது நாட்டிற்கே சென்று தாக்குவோம் என்ற செய்தியை, இன்று உலக நாடுகள் அறிந்துள்ளன. தேசிய பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது; இது தான் வல்லபபாய் படேலின் இந்தியா. கடந்த, 11 ஆண்டுகளாக, நக்சல்களுக்கு எதிரான வேட்டையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. 2014க்கு முன், நாட்டில் உள்ள, 125 மாவட்டங்கள் நக்சல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டன. தற்போது, 11 மாவட்டங்களில் தான் நக்சல்கள் உள்ளனர். குறிப்பாக, மூன்று மாவட்டங்களில் மட்டுமே, நக்சல்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. நக்சல் அமைப்பினர் அனைவரையும் வேரறுக்கும் வரை, அவர்களுக்கு எதிரான போர் தொடரும். அதேபோல, சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களும், ஊடுருவல்காரர்களும், நாட்டின் ஒற்றுமைக்கும், உள்நாட்டு பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்கள், நம் வளங்களை ஆக்கிரமித்து, மக்கள்தொகை சமநிலையை சீர்குலைத்து, நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த கால அரசுகள், ஓட்டு வங்கி அரசியலுக்காக இப்பிரச்னையை கண்டுகொள்ளாமல் இருந்தன. ஊடுருவல்காரர்களுக்கு எதிராக, ஒரு தீர்க்கமான போரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தேசிய ஒற்றுமை தினத்தில், நம் நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு சட்டவிரோத குடியேறிகளும் வெளியேற்றப்படுவதை நாம் உறுதி செய்வோம். படேல் மற்றும் அவரின் சந்ததியினருக்கு, காங்கிரஸ் அரசால் நேர்ந்த நிலை அனைவருக்கும் தெரியும். அம்பேத்கருக்கு அவரது வாழ்நாளிலும், மரணத்துக்கு பின்னும் என்ன நேர்ந்தது? நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், டாக்டர் லோஹியா, ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு என்ன செய்தனர்? ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் தாக்குதல்களுக்கும், சதிகளுக்கும் உள்ளானது. வந்தே மாதரம் பாடலில் சில பகுதிகளை மத அடிப்படையில் காங்கிரஸ் நீக்கியது. இது, இந்தியாவின் பிரிவினைக்கு அடித்தளமிட்டது. இது, நடக்காமல் இருந்திருந்தால், நாட்டின் வரைபடம் முற்றிலும் வேறுபட்டிருக்கும். நாட்டின் ஒற்றுமைக்கு மொழி ஒரு முக்கிய துாண். இங்கு, நூற்றுக்கணக்கான மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகள், நாட்டின் ஆக்கப்பூர்வமான சிந்தனையை அடையாளப்படுத்துகின்றன. அதனால் தான், நாடு மொழியியல் ரீதியாக வளமான தேசமாக மாறியுள்ளது. நம் மொழிகள், பல்வேறு இசைக்குறிப்புகளை போலவே, நம் அடையாளத்தை வலுப்படுத்தியுள்ளன. உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ், நம் நாட்டில் உள்ளது என்று பெருமையுடன் கூறுகிறோம். சமஸ்கிருதம் போன்ற அறிவுப்புதையல் நம்மிடம் உள்ளது. ஒவ்வொரு குழந்தையும், தங்கள் தாய்மொழியில் முன்னேற வேண்டும் என்பதையே மத்திய அரசு விரும்புகிறது. அதனால், ஒவ்வொரு இந்திய மொழியையும் ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

ராஜா
நவ 02, 2025 03:21

என் பக்கத்து வீட்டு ஆட்கள் கூட இந்த மனுசன் வந்தபின்னர் பேச விடாமல் வெறுக்க தொடங்கி வைத்தார் . குசராத் தவிர மற்ற எல்லா மாநிலத்திலும் ஒரு நன்மை செய்யாம இத்தனை வருஷம் கழித்து விட்டார்.


krishnamurthy
நவ 01, 2025 21:22

இந்த நாட்டை முழுதும் கெடுத்தது நேருவும் காந்தியும் தான்


K.n. Dhasarathan
நவ 01, 2025 21:19

பிரதமர் எப்போது பாட்டி மற்றும் தாத்தா கதைகளை கைவிடுவார் ? இவருக்கு இன்திரா காந்தி, ஜவாஹர்லால் நேரு, மோதிலால் நேரு கதைகளை பற்றி என்னவேனாலும் பேசலாம், யாருக்கும் எதுவும் தெரியாது என்கிற எண்ணம் போலும். ஒரு பேச்சுக்கு நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும், நீங்கள் இந்த 12 வருடங்களில் என்ன பண்ணினீர்கள் ?


aaruthirumalai
நவ 01, 2025 21:11

பிரிக்காமல் ஒரே இந்தியாவாக இருந்திருந்தால் இன்று நாமதான் வல்லரசு... நினைக்க நினைக்க ஆத்திரமாக வருகிறது.


Kalyanaraman
நவ 01, 2025 20:28

நேருவும் காந்தியும் நம் பாரதத்தின் சாபக்கேடு.


முருகன்
நவ 01, 2025 21:05

இருவரும் இல்லை என்றால் பல வருடங்கள் ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்திருப்பீர்கள்


என்றும் இந்தியன்
நவ 01, 2025 19:11

1947ல் நாடு சுதந்திரம் அடையும் போது 14 வோட்டு சர்தார் வல்லபாய் படேலுக்கு 3 வோட்டு நேருவுக்கு. ஆனால் காந்தி காங்கிரஸ் கமிட்டியிடம் இதை ஒத்துக் கொள்ளமுடியாது நேரு தான் பிரதமர் என்று ஒத்துக்கொள்ளவேண்டும் என்று வம்படியாக செய்தவர். இந்தியா நாசமாக ஆவதற்கு எல்லாவித முயற்சி செய்தது முஸ்லீம் காந்தி முஸ்லீம் நேரு ரெண்டு பேர் தான்.


பேசும் தமிழன்
நவ 01, 2025 16:55

காந்தியும் நேருவும் இந்த நாட்டுக்கு செய்த துரோகங்கள் ஏராளம் ......அதில் ஒன்று தான் காஷ்மீர் ....அதற்கான பலனை இன்றும் அனுப்பித்து வருகிறோம் ..... மதத்தின் பெயரால் நாட்டை பிரித்த பின்பு எஞ்சிய ஆட்களை இங்கே இருக்க அனுமதித்தது .....காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது....இப்படி கூறி கொண்டே போகலாம் ....550 சமஸ்தானங்களை வல்லபாய் படேல் அவர்கள் ஒன்றிணைத்து விட்ட போது ....நேரு தன் பொறுப்பில் எடுத்த காஷ்மீர் ..... ஜூனாகத் ...ஹ ஹைதராபாத் சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையாமல் போக்கு காட்டின ....படேல் சுதாரித்து கொண்டு ஹைதராபாத் மீது ராணுவ நடவடிக்கை எடுத்து இந்தியாவுடன் இணைத்தார் ....ஆனால் நேருவின் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீர் பிரச்சினை இன்றைக்கு இழுத்து கொண்டு இருப்பதற்கு காரணம் நேரு மற்றும் கான் கிராஸ் கட்சியே காரணம் !!!


மனிதன்
நவ 01, 2025 15:51

காஷ்மீர் முழுவதையும் சேரவிடாமல் தடுத்தது நேருதான் :...... "ஜி" இன்னுமா இந்த ரெக்கார்டு தேயல??? ஆடத்தெரியாதவ வாசல் கோணைனாளாம்...நேரு, நேரு, நேரு இந்த ரெண்டெழுத்த சொல்லியே பத்து வருஷத்த ஒட்டிடீங்க இல்ல? ப்ப்ப்ப்பாஆ.... உங்களமாதிரி ஒரு பிரதமரை கிடைக்க நாடு என்ன புண்ணியம் பண்ணுச்சோ???


நிமலன்
நவ 01, 2025 18:23

நேருவை பற்றி பேசினால் இங்குள்ள மர்ம நபர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறதே. 400 வருடங்களுக்கு முன்பு ஆட்சி செய்த அவுரங்கசீப் பற்றியும் திப்பு சுல்தானை பற்றியும் இன்றளவும் பேசி கொண்டுதான் இருக்கிறோம். இவர்கள் நேரடியாக இந்து மக்களை கொன்று குவித்தார்கள். திரைமறைவில் இந்துக்களுக்கு துரோகங்கள் செய்தனர். அவ்வளவுதான் வித்தியாசம்.


Rathna
நவ 01, 2025 14:21

ஒரு நாட்டு மக்களுக்கு, தனது பழைய வரலாறு தெரியாவிட்டால் அவனது நாட்டின் பெருமை அவனுக்கு தெரியாமல் போகும். உதாரணமாக காமராஜரை பற்றி தமிழனுக்கு தெரியாவிட்டால் அவனுக்கு, நேர்மையான ஆட்சியை பற்றி தெரியாது. கக்கனை பற்றியோ, வெங்கட்ராமன், சி சுப்பிரமணியம் பற்றியோ தெரியாது. அதேபோல தான் இந்த நாடு பாலைவன காட்டன்களாலும், ஆங்கிலேயனாலும், போர்துக்கீசியன், டச்சு காரனாலும் படை எடுக்கப்பட்டோம் கொள்ளை அடிக்கப்பட்டோம். பல லக்ஷக்கணக்கான பேர் தங்கள் உயிரையும், அன்பு உறவினர்களையும், செல்வத்தையும் இழந்தனர். செல்வ செழிப்போடு இருந்த பாரதம், கொள்ளையர்களால் கொள்ளை அடிக்கப்பட்டு பிச்சை எடுக்கும் நாடாக மாறியது. தமிழ்நாட்டின் உயரிய நகரங்கள் மதுரை, ஸ்ரீரங்கம், கொள்ளை அடிக்கப்பட்டது. சில நகரங்களில் காட்டாட்சி நடந்தது. 50 வருடங்கள் மதுரை மீனாட்சி கோவில் பூட்டி கிடந்தது. மக்கள் கொல்லப்பட்டு தென்னை மரங்களில் அவர்கள் தலைகள் தொங்க விடப்பட்டது. இதுவெல்லாம் யாருக்கு தெரியும். இதை எதாவது உங்கள் வரலாறு புத்தகத்தில் படித்து இருக்கிறீர்களா. இதனால் தான் ஒவ்வருவரும் உண்மை வரலாறை படிக்க வேண்டும். கேள்வி கேட்க வேண்டும். இதனால் நீங்கள் திருப்பவும் அடிமைப்படாமல் இருக்க உதவும்.


NALAM VIRUMBI
நவ 01, 2025 14:09

ஊடுருவல் காரர்களை நாட்டை விட்டு அப்புறப் படுத்தும் வரை தேசத்திற்கு பாதுகாப்பு இல்லை. இந்த விசயத்தில் முழு மூச்சுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும். மாநில அரசுகள் செய்யாது என்பது அறிந்த விசயம். ஓட்டுக்காக அவர்களுக்கு கால் கழுவி விடும் தமிழ்நாடு, கேரள, கர்நாடக, மேற்கு வங்க அரசுகள் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே.


புதிய வீடியோ