வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த வழக்கின் முழுமையான விவரங்கள் தெரியவில்லை. பொதுவாக இந்தியப் பெண் திருமணமானவராக இருப்பின் தங்கத்தில் தாலிக் கொடி+திருமாங்கல்யம், ஒரு ஜோடி தோடு, இரண்டு கைகளிலுமாக நான்கு வளையல்கள், இவை தவிரவும் ஒரு செயின்/நெக்லஸ் அணிகிறார்கள் என வைத்துக் கொள்வோம். இதைப் பல மத்ய தர குடும்ப்பப் பெண்கள் எப்போதுமே அணிகிறார்கள். இவற்றையெல்லாம் சேர்த்தாலே 15 பவுன் அதாவது 120 கிராம் ஆகி விடும். குறிப்பிட்ட இந்தப் பெண்மணி கொஞ்சம் வசதி படைத்தவராக இருப்பின் 200 கிராம் தங்க நகைகளை எப்போதும் அணிபவராக இருக்கலாம். இதை வைத்துப் பார்க்கும்போது கனம் கோர்ட்டார் அவர்களின் உத்தரவு நியாயமானதாகத் தெரிகிறது. குறைந்த நாட்கள் சுற்றுலா என வெளிநாடு செல்லும் நம் பெண் மணிகள் இங்கிருந்து வெளிநாடு செல்லும்போதே சுங்க அதிகாரிகளிடம் தாங்கள் எப்போதும் அணிந்தபடி இருக்கும் நகைகளைக் காண்பித்து டிக்ளேர் செய்து அதற்கான படிவத்திலோ அல்லது தங்கள் பாஸ்போர்ர்டிலோ பதிவு செய்து கொண்டால் இது போன்ற அனாவசிய சோதனைகளைத் தவிர்க்கலாம்.
சுங்க வரி என்பதே ஒரு பாடா வதி விதிதான்? இந்த காலாவதி விதியை நீக்கினாலே அரசின் வருவாய் மிச்சமாகும் . தண்ட கருமந்திர அதிகாரிகளுக்கு மட்டும் வருவாய் இழப்பு.
இனி வெளிநாடுகளில் மலேஷியா தாய்லந்து சிங்கப்பூரில் எல்லாம் கடைகளில் பயன் படுத்திய நகைகளுக்கு விலை உயரும் . இந்தியர்கள் நாடு திரும்பும்போது அல்லது விடுமுறையில் செல்லும்போதோ வாங்கி செல்வார்கள் அல்லவா ?
பயன்படுத்திய வெளிநாட்டு நகையாக இருந்தாலும் சுங்க வரி செலுத்த வேண்டும். பயன் படுத்துவதை அதிகாரி அறிய முடியாது. பெண் பயணி விமானத்தில் பல ஆயிரம் செலவு செய்து வருகிறார். பல ஆயிரம் வக்கீல் கட்டணம் செலுத்தி வாதிடுகிறார். அரசுக்கு குறைந்த சுங்க கட்டணம் செலுத்த மறுக்கிறார். சிலர் அரசுக்கு எந்த வரியும் செலுத்த விரும்புவது இல்லை. தன்னை சார்ந்த சமூகத்திற்கு மாத பங்கு, சமூக வரி செலுத்த தவறுவது இல்லை.
அந்த சிலர் யார் என்று வருமான வரிதுறைக்கு தகவல் கொடுத்து தேசபக்தியை காட்டாலமே...
என்ன கிறுக்குத் தனமான கருத்து. ஆயிரக்கணக்குல பணம் இருக்குன்னா குடுக்கணுமா? 3% வரின்னாலும் அது என்ன கொறச்சலா? 5 பவுன் நகை வரைக்கும் தான் இந்தியாவுல அனுமதி. ஆனா சில பேரு தெரியாம வளையல், தாலி செயின், கூட ஒரு செயின்னு போட்டுட்டு போயிருவாங்க. திரும்ப வரும் போது இந்த மாதிரி பாடாவதி ரூல் சொல்லி சாவடிப்பாங்க. சென்னை ஏர்போர்ட்ல ஒருமுறை இப்படி தெரியாம மாட்டிக்கிட்ட ஒரு வயசான அம்மாவை போட்டு அலைக்கழிச்சதை கண்ணால பாத்தேன். கடத்தவன் மொகரய பாத்தாலே தெரியாதா இந்த ஆபிஸர்ஸ்க்கு? கமிஷனை வாங்கிட்டு, சிலத கண்டுக்காம இருந்துட்டு, கேஸ் கணக்கு காட்ட எவனாவது இளிச்சவாயன் இருந்தா அவன் மேல பாயறது.
வரி வசூலிக்காவிட்டால் நண்பர்களுக்கு எப்படி பணஉதவி செய்யமுடியும் என்பதையும் யோசிக்கலாம் இல்ல
தனிப்பட்ட, பயன்படுத்திய நகைகள் என்றால் எத்தனை காலத்திற்கு பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏதேனும் வரமுறை உண்டா..?