உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி

கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி

புதுடில்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கார்கில் போர் 25 வது நினைவு நாளையொட்டி இன்று ( ஜூலை 26) காலை பிரதமர் மோடி கார்கில் சென்றார். அங்கு நடக்கும் நினைவு நாள் நிகழ்ச்சியில், பங்கேற்று நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்தினார். கடந்த 1999-ம் ஆண்டில் காஷ்மீர் மாநிலத்திற்கு உட்பட்ட கார்கில் என்ற இடத்தில் பாக்., ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதனையடுத்து நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. போரில் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் வீரமரணம் அடைந்தனர். கார்கிலில் கடும் பனிப்பொழிவில் நடந்த இந்த போரில் உயிர்த்தியாகம் பல செய்து பாகிஸ்தான் படையினரை நமது இந்திய ராணுவ வீரர்கள் விரட்டி அடித்தனர்.https://www.youtube.com/embed/2C1ugARdTlsஇதனை நினைவு கொள்ளும் வகையிலும். இந்த முறை 25 வது ஆண்டு சில்வர் ஜூப்ளி என்பதாலும் பிரதமர் மோடி இன்று சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூலை 26, 2024 14:12

ஆளும் கட்சியில் உள்ளவர்கள்தான் கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள். எதிர் கட்சியினர் ஏன் நாட்டிற்காக உயிர் துறந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதில்லை? இந்த கேள்வி குறிப்பாக காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு.


xyzabc
ஜூலை 26, 2024 11:16

Vande mataram PM sir.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ