உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது!

சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: சட்டவிரோத இரும்புத்தாது ஏற்றுமதி தொடர்பான பண மோசடி வழக்கில், கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ண செயிலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் கார்வார் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவான சதீஷ் கிருஷ்ண செயில் மீது, சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி தொடர்பாக 2010ல் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சதீஷ் செயில், 1.25 லட்சம் டன் இரும்புத்தாதுவை 2010 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ஏற்றுமதி செய்துள்ளார். அந்த இரும்புத்தாது, வனத்துறையால் பறிமுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகும். அதன் மொத்த மதிப்பு 86 லட்சம் கோடி ரூபாய்.கடந்த 2024 அக்டோபர் மாதம் இவர் மீதான இரும்புத்தாது ஏற்றுமதி மோசடி வழக்கை விசாரித்த எம்எல்ஏ மற்றும் எம்பிக்களுக்கான சிறப்பு நீதிமன்றம், அவருக்கு ஏழாண்டு சிறையும் 44 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இந்த வழக்கில் அவர் மீதான தண்டனையை கர்நாடகா உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.இதற்கிடையே, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில், சதீஷ் செயில் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சதீஷ் கிருஷ்ண செயில் வீட்டில் அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோத சொத்து, ஏராளமான பணம் மற்றும் நகைகளைக் கண்டறிந்தது. இதையடுத்து அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.தொடர் நடவடிக்கை குறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ண செயில் அமலாக்கத்துறையின் பெங்களூரு மண்டல அலுவலகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து செப்டம்பர் 9-10 இடைப்பட்ட இரவில் காவலில் எடுக்கப்பட்டார். சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவரை அமலாக்க இயக்குநரகத்தின் ஒரு நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவ்வாறு அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.சமீபத்தில் மத்திய புலனாய்வு அமைப்புகளால் கைது செய்யப்பட்ட மூன்றாவது காங்கிரஸ் எம்.எல்.ஏ., இவர் ஆவார். ஏற்கனவே சித்ரதுர்கா எம்.எல்.ஏ., வீரேந்திரா, தார்வாட் ரூரல் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ண செயில் கைதாகியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M Ramachandran
செப் 10, 2025 21:27

தேர்தல்நேரம் நெருங்க நெருங்க எல்லா கட்சிகளிலும் உள்குத்து நடக்கும்.அப்போது இந்த கால்பணத்தை வீசி ஆள்பிடிக்கலாம்.அரசியல் சாக்கடை ராகுலு எப்போ திகார் செல்லும். நல்ல நாள் பார்த்து அதுவும் சனிக்கிழமை அனுப்பி வைத்தால் உத்தமம். அரசியலில் கொஞ்சம் நல்ல காற்று வீசும்.


M Ramachandran
செப் 10, 2025 12:34

தலைவன் செய்யும் தொழிலை தொண்டனும் செய்கிறான். தமிழ்நாட்டிலும் அப்படியெ. சமீபத்தில் நகராட்சி தலைவி யெ திருட்டை தொழிலாக வைத்து கொண்டிருக்கிறார். திகலுக்கு தெவிட்டாத செய்தி. பீ ஜே பி காரன் செய்தாலும் கைது செய்திருக்கிறார்கள். 200 ஊபீஸ் கண்ணோட்டம் பத்திரிகையை ஒழுங்காக படிப்பதில்லை போலாயிருக்கு. அறைய குறையாக படித்து ஊபேஸ் என்பதை பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்.


திகழ்ஓவியன்
செப் 10, 2025 11:46

ஒரு பிஜேபி MLA MP கவுன்சிலர் மீது கூட நடவடிக்கை இல்லை எல்லாம் பிஜேபி யினர் உத்தமர் போல , ஒன்லி எதிர்க்கட்சி காலம் ஓடும் ஓடம் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்


சசிக்குமார் திருப்பூர்
செப் 10, 2025 12:37

திகழு நீ எங்கே தின்னுட்டு வாழருயோ அங்கேயாவது விஸ்வாசமாக இரு. இந்தியா பிரச்சினை நாங்கள் பார்த்து கொள்கிறோம். அதுதான் இருக்கே பப்பு அன் கோ தவறு இருந்தால் ஆதாரத்துடன் வழக்கு போடு இல்லை மக்கள் மன்றத்தில் சொல். ஓட்டு திருட்டு என்று வாய் மட்டுமே பேசுது. ஆதாரம் இல்லை ஒரு ஒப்புதல் வாக்குமூலம் இல்லை எதற்காக இந்த பிராடுதனம்


Mohan
செப் 10, 2025 12:44

ஆட்சில இருக்கிறவன் தான் திருடுவான் ....அப்போவும் நான் உத்தம னு சொல்ல மாட்டேங்குற நீ ஒழுக்கமானு கேக்குறே நீ எல்லாம் என்ன ஜென்மமோ ...பிஜேபி ஆளும் மாநிலத்துல இருக்குற உங்க எதிர் கட்சிக்காரங்களுக்கு என்ன வேலை...போயி புகார் பதிவு பண்ண சொல்லு யார் வேண்டாம்னா ...


M. PALANIAPPAN, KERALA
செப் 10, 2025 11:33

திருடி திண்பதற்கு மட்டுமே இவர்கள் அரசியலில் உள்ளார்கள், நாடு எப்படி உருப்படும்?


சமீபத்திய செய்தி