உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேகதாது திட்டத்தில் கர்நாடகா அரசு மும்முரம்; 30 பேர் கொண்ட குழு அமைப்பு

மேகதாது திட்டத்தில் கர்நாடகா அரசு மும்முரம்; 30 பேர் கொண்ட குழு அமைப்பு

பெங்களூரு: மேகதாது திட்டத்தை அமல்படுத்த 30 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகம், கர்நாடக விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே, பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள ராம்நகரின் மேகதாது பகுதியில் அணை கட்ட, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை கர்நாடகா அரசு மேற்கொண்டு வருகிறது.அணை கட்டினால், தங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசு, சட்டப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் தன் முடிவில் கர்நாடகா உறுதியாக இருக்கிறது.மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்க தயாரிக்க கர்நாடகா அரசுக்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட், தமிழக அரசின் கருத்தை கேட்க உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் இன்று (டிச.,12) மேகதாது திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பணிகளை செய்வதற்காக, 30 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த குழுவில், அரசின் வெவ்வேறு துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னோட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை செய்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தாமரை மலர்கிறது
டிச 12, 2025 21:51

தண்ணீரை தேக்கி விவசாயம் செய்ய கர்நாடகம் அணைகட்ட உடனடியாக அனுமதிப்பது அவசியம். கடலில் தண்ணீரை கலந்து வீணடிப்பது தவறு.


Sun
டிச 12, 2025 18:53

மேக தாது அணை கட்டும் பணிகளில் கர்நாடகா விர்......... திராவிட மாடல் தமிழ்நாடு கொர் ..........


Gajageswari
டிச 12, 2025 15:40

நல்ல முடிவு. தமிழகம் ராசி மணல் அணை கட்ட வேண்டும்.


duruvasar
டிச 12, 2025 15:17

தமிழகம் நீர்வளத்துறை மணல் சப்ளையை செய்து பணியை விரைந்து முடிக்க உதவிடுவார்கள்


RAJ
டிச 12, 2025 13:27

அகங்காரத்தின் உச்சம்...இயற்கைக்கு எதிராக நடக்கும் கொடூரம் ....


mindum vasantham
டிச 12, 2025 13:18

நம்ப தெலுங்கர் என்ன செய்கிறார்


சமீபத்திய செய்தி