உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் முதன் முறை இளைஞர் எலும்புகள் தானம்

கர்நாடகாவில் முதன் முறை இளைஞர் எலும்புகள் தானம்

மங்களூரு: விபத்தில் இறந்த இளைஞரின் எலும்புகள் தானம் செய்யப்பட்டன. எலும்பு தானம் அளித்தது, கர்நாடகாவில் இதுவே முதன் முறை.தட்சிணகன்னடா, மங்களூரின், ஜம்பூர் கிராமத்தின் சோமவாரபேட்டில் வசித்தவர் ஈஸ்வர், 32. சில நாட்களுக்கு முன்பு, சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார். இவர் நேற்று முன் தினம் காலை 10:00 மணியளவில் உயிரிழந்தார்.அவரது குடும்பத்தினர், ஈஸ்வரின் எலும்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். அதன்பின் போலீசாரிடம் அனுமதி பெற்று, அறுவை சிகிச்சை செய்து ஈஸ்வரின் உடலில் இருந்து, எலும்புகள் எடுக்கப்பட்டன. டாக்டர் விக்ரம் ஷெட்டி தலைமையிலான டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்தனர்.இதுகுறித்து, டாக்டர் விக்ரம் ஷெட்டி கூறியதாவது:இறந்த நபரின் எலும்புகள் தானம் பெறப்பட்டது, கர்நாடகாவில் முதன் முறை. மாநில மருத்துவ உலகில் புதிய மைல் கல்லாக இருக்கும்.தானம் பெறப்பட்ட எலும்புகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆறு சிறார்களுக்கு பொருத்தப்படும். எலும்பு தானம், இளம் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. எலும்புகளை தானம் செய்ய முன்வந்த பெற்றோரை, பாராட்டுகிறோம். எலும்பு தானம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை