உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கருப்பு வண்ணம் பூசிய காஷ்மீர் பத்திரிகைகள்

கருப்பு வண்ணம் பூசிய காஷ்மீர் பத்திரிகைகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கும் வகையில், காஷ்மீரில் இருந்து வெளியாகும், 'கிரேட்டர் காஷ்மீர், ரைசிங் காஷ்மீர், காஷ்மீர் உஸ்மா, அப்தாப் மற்றும் தய்மீல் இர்ஷாத்' ஆகிய ஆங்கில மற்றும் உருது மொழி நாளிதழ்களின் முதல் பக்கங்கள், கருப்பாக வெளியிடப்பட்டிருந்தன.கிரேட்டர் காஷ்மீர்' என்ற ஆங்கில நாளிதழின் முதல் பக்கத்தில், 'கொடூரம்: இடிந்தது காஷ்மீர்; காஷ்மீரிகள் துயரம்' என கொட்டை எழுத்துகளில் அச்சிடப்பட்டிருந்தது.'பசும் புல்வெளிகளின் மீது நடத்தப்பட்ட படுகொலை; காஷ்மீரின் ஆன்மாவை காப்பாற்ற வேண்டும்' என்ற தலைப்பில், ஆங்கில பத்திரிகை ஒன்றில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தத்வமசி
ஏப் 24, 2025 16:17

சாரி சாரியாக சுற்றுலா பயணிகள் வரவில்லை என்றால் அங்குள்ளவர்கள் பாடு திண்டாட்டம் தான். இனி சுற்றுலா பயணிகள் வருவது சந்தேகமே. அதனால் தான் இந்த புலம்பல். இது வரை வாய் திறக்காதவர்கள் திறக்கிறார்கள் என்றால் அடி மடியில் தீவிரவாதிகள் கை வைத்து விட்டார்கள். இன்னும் இரண்டு மாதங்கள் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அது இப்போது நின்று விட்டிருக்கும். குல்மார்க் பகுதியில் ஆயிரக்கணக்கான குதிரைகளுக்கு வியாபாரத்தை தருவது இந்த சுற்றுலா, குல்மார்க் உலகின் அழகிய சுற்றுலா இடம், சோன்மார்க் மற்றும் குல்மார்க் பகுதிகளில் பயணம் செய்ய தனியாக கட்டணம், குதிரை சவாரிக் கட்டணம், விஞ்ச் கட்டணம் என்று கட்டணக்கணக்கில் மக்கள் ஒவ்வொருவரும் ஆயிரக்கணக்கில் சிலவு செய்கின்றனர். அவை அனைத்தும் இப்போது இல்லை. வாழ்வாதாரத்தில் கை வைத்து விட்டார்கள் இந்த தீவிரவாதிகள். அந்த பயம் இப்போது காஷ்மீரிகளுக்கு வந்து விட்டது. தீவிரவாதத்தின் பிடியில் இருந்து வெளிப்பட்டு இப்போது தான் சுதந்திரக்காற்றை சுமார் நாற்பது ஆண்டுகள் கழித்து காஷ்மீரிகள் அனுபவிக்கிறார்கள். அது பொறுக்கவில்லை பாகிஸ்தான அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை