உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிவேக ரயில் கேரளாவுக்கு தேவையில்லை: மெட்ரோமேன் ஸ்ரீதரன் பரிந்துரை

அதிவேக ரயில் கேரளாவுக்கு தேவையில்லை: மெட்ரோமேன் ஸ்ரீதரன் பரிந்துரை

திருவனந்தபுரம்: நகர்ப்புற பகுதிகள் மிகுந்த கேரளா மாநிலத்தில், மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயில் போக்குவரத்து வசதி தேவையில்லை என்று மெட்ரோமேன் ஸ்ரீதரன் பரிந்துரைத்துள்ளார்.டில்லி மெட்ரோ திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர் மெட்ரோமேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன். கேரளாவைச் சேர்ந்தவர். கேரளா முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள பரிந்துரை விபரம்: தொடர்ச்சியான நகர்ப்புற குடியிருப்புகளை கொண்டுள்ள கேரளாவுக்கு, மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயில்கள் தேவையில்லை. மாநிலத்தின் புவியியல் அமைப்புக்குத் தகுந்தபடி மணிக்கு அதிகபட்சமாக 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில்களை போதுமானவை. சராசரியாக மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் கூட, திருவனந்தபுரத்திலிருந்து கண்ணனூர் வரையிலான 430 கிலோமீட்டர் தூரத்தை, 3.15 மணி நேரத்தில் கடந்து விட முடியும்.இவ்வாறு அவர் பரிந்துரை செய்துள்ளார்.இத்தகைய செமி ஹைஸ்பீடு ரயில் திட்டத்தை கேரளாவில் நிறைவேற்ற ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவாகும். இதில் 51% இந்திய ரயில்வே துறையும், 49 சதவீதம் கேரளா அரசும் பங்கு வைத்திருக்கும். மொத்த செலவில் 30 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பெறப்படும். 40,000 கோடி ரூபாய் கடன் மூலமாக திரட்டப்படும். இந்த ரயில் திட்டத்தை எதிர்காலத்தில் சென்னை- பெங்களூரு - கோவை அதிவேக ரயில் வழித்தடத்துடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீதரன் கூறுகையில், ''அதிவேக ரயில் போக்குவரத்து என்பது, குறைந்தபட்ச நிறுத்தங்கள் உள்ள வழித்தடம் மட்டுமே சாத்தியமாகும். கேரளா போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த மாநிலங்களில், 25 முதல் 30 கிலோமீட்டர் இடைவெளியில் ஒரு நிறுத்தம் தேவைப்படும். கொங்கன் ரயில்வே வழித்தடம் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கும் வகையில் தயார் செய்யப்பட்டது. ஆனால் அந்த வேகத்தில் ரயில்களை இயக்க முடிவதில்லை என்பதுதான் உண்மை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Saai Sundharamurthy AVK
பிப் 12, 2025 11:36

கேரளா மாநிலம் ஒரு நீளமான ஆனால் அகலம் குறுகலான நிலப்பகுதியாகும். எனவே இவர் சொல்வது கேரளாவுக்கு பொருந்தும். மலைகளும், காடுகளும், பள்ளதாக்குகளும் நிறைந்து சமவெளிப் பகுதி குறைந்து உள்ளதால் நகரமயம் என்பது கிலோமீட்டர் கணக்கில் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால் தமிழ்நாடு அப்படி கிடையாது. மாநிலம் நீளமாகவும், அகலத்தில் பருத்தும் இருக்கிறது. ஒவ்வொரு நகரங்களுக்கும் இடையில் கிலோமீட்டர் கணக்கில் சமவெளி பகுதிகள் கொட்டிக் கிடக்கிறது. ஆகவே, தமிழ்நாட்டில் அதிவேக ரயில்கள் தேவைப்படுகிறது.


Rajesh
பிப் 11, 2025 21:29

டுமீளன் டாஸ்மாக் குடிகாரன் ...... குடிச்சிட்டு கொடி பிடிக்கிறவன் ......


தமிழ்வேள்
பிப் 11, 2025 21:16

மிகவும் சரியான கருத்து... அன்னாரின் கருத்து தமிழகத்துக்கும் பொருந்தும். மக்கள் அடர்த்தி மிகுந்த தொடர்ந்து நகரங்கள் பேரூர்கள் கொண்ட தடம் மக்கள் போக்குவரத்து மட்டுமே குறியாக கொள்ளுதல் வேண்டும்....எங்கும் நிற்காமல் போகும் ரயில்கள் பெருமைக்கு எருமை மேய்க்கும் கதை ஆகிவிடும்... சென்னை - கோவை/மதுரை தடத்தில் ஏழுமணிநேர பயணம் நன்றே....அதை மேலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதாக இல்லை.... குறைவான நேரத்தில் செல்ல விமானங்களை பயன்படுத்தலாம்... இரண்டு முனையங்கள் மட்டுமே இணைக்க வேண்டும் இடை நிறுத்தம் கூடாது என்றால் இடை வழி நகரம் மாநகர மக்கள் என்ன செய்வார்கள்? குடித்து விட்டு வண்டியில் ஏறுபவன் மனநிலையிலேயே அனைவரும் இருந்தால் என்ன செய்வது?


Kundalakesi
பிப் 11, 2025 21:00

39 பிரதிநிதிகள் இருந்து என்ன பிரயோஜனம். அலுவலர்கள் அனைவரும் சேட்டன்களே. உதாரணமாக கோவை ரயில்வே தொடர்பான கொள்கை முடிவுகள் பாலக்காடு கோட்டத்தில் உள்ளன.


சண்முகம்
பிப் 11, 2025 20:07

கேரளாவில் உள்ள சாலைகளே போதுமானது. ஒரு மணிக்கு 20 கிலோமீட்டர் வரை விரைவாகச் செல்ல இயலும்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 11, 2025 22:39

ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை தான் கேரளா சாலைகளின் நிலைமை க்கு காரணம். NHAI என்ன பண்றாங்க??


KRISHNAN R
பிப் 11, 2025 19:45

இவர் சொல்வது சரியே.. மலை பகுதிகளில்... விரைவாக செல்வது சரியில்லை


M Ramachandran
பிப் 11, 2025 19:38

இவர் சவாலான கொங்கன் ரயில்வே திட்டத்தை நிர்மாணித்தவர்.


Ray
பிப் 11, 2025 19:37

டில்லி மெட்ரோ திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர் மெட்ரோமேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன். கேரளாவைச் சேர்ந்தவர். அதற்கு முன்பே கொங்கன் ரயில்வே திட்டத்தை மிக சிறப்பாக கட்டி முடித்தவர் என்பது வரலாறு. டில்லி மெட்ரோ அவருக்கு ஜுஜுபி . இவர் சொல்வதே சரி .பெரு முதலைகள் கொள்ளையடிக்க முடியாதே என்ன செய்ய


GoK
பிப் 11, 2025 19:19

கேரளாவுக்கு ஒரு மண்ணும் தேவையில்லை. சிவப்புக்கொடி பிடிச்சுக்கிட்டு கள்ளு பாட்டில் குடிச்சிகிட்டு gulfilirundhu காசு வந்தா போதும்.


தமிழன்
பிப் 11, 2025 18:44

தென்னக ரயில்வே முழுவதும் இந்த மல்லுஸ் அட்டகாசம் தான். தமிழன் ஏமாளி


MUTHU
பிப் 11, 2025 20:04

தமிழனை குடிச்சிட்டு தொடை தெரியற மாதிரி கைலி தூக்கி கட்டிட்டு சத்தமாய் ஆகாத விஷயத்தை பேசிட்டு இருக்க சொல்லு. குடி விளங்கும்.


சமீபத்திய செய்தி