உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்தி கேரள அரசு அதிரடி

வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்தி கேரள அரசு அதிரடி

திருவனந்தபுரம் : கேரளாவில், மனித - விலங்கு மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக, மத்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்தம் செய்து, அம்மாநில அரசு சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றி உள்ளது. கேரளாவில் மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில், மனித - விலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன. பயிர்களை காட்டுப்பன்றிகள் அழிப்பது, காட்டு யானைகள் மனிதர்களை கொல்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், மத்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் - 1972ல் திருத்தம் செய்து, கேரள வனவிலங்கு பாதுகாப்பு திருத்த சட்டம் - 2025 என்ற மசோதாவை, கேரள சட்டசபையில் அம்மாநில அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த திருத்த மசோதா, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும், சட்டமாக அமலுக்கு வரும்.

வயநாடு மறுசீரமைப்புக்கு

நிதி கேட்ட பினராயி

வயநாடு நிலச்சரிவு தொடர்பான மறு சீரமைப்பு பணிகளுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியான, 2,221 கோடி ரூபாயை உடனடியாக வழங்கும்படி பிரதமரிடம் பினராயி கோரிக்கை வைத்தார். மேலும், கேரளாவின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் விவாதித்தார்.

மசோதா என்ன?

ம னிதர்களை தாக்கும் அல்லது மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழையும் வனவிலங்குகளை சுடவோ அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவோ உத்தரவிட, தலைமை வனவிலங்கு காப்பாளருக்கு அதிகாரம் அளிக்கிறது மாவட்ட கலெக்டர் அல்லது தலைமை வனப்பாதுகாவலரின் அறிவுறு த்தலின்படி, தீவிர காயங்களை ஏற்படுத்தும் விலங்குகளை கொல்லவோ, மயக்க ஊசி செலுத்தவோ, பிடிக்கவோ அல்லது வேறு இடத்திற்கு கொண்டு செல்லவோ தலைமை வனவிலங்கு காப்பாளர் உடனடியா க உத்தரவிடலாம் கொலை செய்வதை தவிர, மாற்றுவழியில் காட்டு வில ங்கின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தலைமை வனவிலங்கு பாதுகாவலருக்கு அதிகாரம் அளிக்கிறது மத்திய வனவி லங்கு பாதுகாப்பு சட்டத்தின், அட்டவணை - 2ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு காட்டு விலங்கையும், குறிப்பிட்ட காலத் திற்கு கொடிய விலங்காக அறிவிக்க இந்த மசோதா, மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ram pollachi
அக் 11, 2025 15:06

பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்பவர்களுக்கு எந்த விலங்கு எதை விரும்பி சாப்பிடும் என்று... அது தின்றது போக மிச்சம் உள்ளதை குறைந்த விலைக்கு சந்தையில் கொடுத்துவிட்டு அடுத்த வேலையை பார்ப்பார்கள்... கோபம் வராது செத்தால் என்னத்தை கொண்டு போவோம் என்று சமாதானம் செய்து கொள்வார்கள். ஆனால் இன்று விவசாய நிலங்களை வைத்திருப்பவர்கள் டாக்டர்கள், வக்கீல் மற்றும் அரசியல்வாதிகள் இவர்களுக்கு மனிதர்கள் மேலே இறக்கம் காட்ட மாட்டார்கள்.... விலங்குகள் நிலை? காட்டு பன்றி, யானை மட்டும் அல்ல எலிகள் மற்றும் மயில்களால் பல பயிர்கள் நாசமாகிறது அதையும் சுட்டுதள்ள தலைமை வன காப்பாளருக்கு அனுமதி கொடுங்கள்.... இவர்கள் வனத்தை பாதுகாக்கும் லட்சணம் ஊருக்கே தெரியும்.... கண்ணகி நீதான் காப்பாற்ற வேண்டும்.


இளந்திரையன் வேலந்தாவளம்
அக் 11, 2025 11:56

பல் வலியும் தலை வலியும் அவரவருக்கு வந்தால் தான் தெரியும்.... தமிழக பார்டரில் வசிக்கும். கேரள விவசாயிகளின் விளைநிலங்களை காட்டுப் பன்றிகள் நாசமாக்குகின்றன... அவைகளை கண்ணி வைக்கவோ சுடவோ கூடாது.. மீறினால் கைது செய்யப்படுவார்கள்.... ஆகையால் இந்த சட்டம் சரிதான்


Techzone Coimbatore
அக் 11, 2025 23:16

மனித இனம் அழிந்தால் அனைத்து உயிரினங்களும் நிம்மதியாக வாழும். இயற்கை சீரழிவு இருக்காது. காற்று மாசு இருக்காது.


visu
அக் 11, 2025 06:22

அதாவது மத்திய சட்டத்துக்கு மேலானது என்று காண்பித்துக்கொள்ள சட்டம் இயேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது ஏற்கனவே யானைகள் ஊருக்குள் புகுந்தால் என்ன செய்யவேண்டும் என்ற முறை உள்ளது அப்புறம் ஏன் புதிதாக


Kasimani Baskaran
அக் 11, 2025 06:08

விலங்குகளில் இருப்பிடங்களை அழித்து சுற்றுச்சூழலுக்கு கெடுதல் செய்வதால் மட்டுமே வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியே வருகின்றன. அதற்க்கு நிவாரணம் தேடாமல் அவற்றை சுட்டுப்பிடிப்பது, அல்லது ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்துவது அவற்றின் அடியோடு மாற்றிவிடும்.


ManiK
அக் 11, 2025 04:09

இதுக்கு பெயர் வனவிலங்கு சட்டமா??. மிருகவதை செய்வதற்கு இவனுங்களுக்கு இந்த கம்யூனிச சட்டம் கைகொடுக்கும். மக்கள்தொகையை கணக்கில்லாமல் கூட்டுபவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்துமா??!